search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரமத்தி"

    பரமத்தி அருகே இடி தாக்கி தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே பிள்ளை களத்தூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45), விவசாயி.

    இவரது தோட்டத்தில் தென்னை மரங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது திடீரென இடி தென்னை மரத்தில் விழுந்ததால் தென்னை மரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    இதுகுறித்து செந்தில்குமார் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தென்னை மரங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தி தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

    ×