search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய வேளாண் பொருட்கள் வழங்கிய போது எடுத்த படம்.
    X
    விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய வேளாண் பொருட்கள் வழங்கிய போது எடுத்த படம்.

    பரமத்தி வட்டார வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு பொருட்கள் வழங்கல்

    பரமத்தி வட்டார வேளாண்மை துறை சார்பில் நடந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட தொடக்க விழாவில் விவசாயிகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் நடைபெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேல்சாத்தம்பூர், ஆவாரங்காட்டுப்புதூர் சமுதாய கூடம், நடந்தை, புளியம்பட்டி சமுதாய கூடம், ராமதேவம் அரசினர் உயர்நிலைப்பள்ளி மற்றும் கோதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய இடங்களில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தினை தொடங்கி வைத்து, நேரலையில் உரையாற்றினார். 

    மேல்சாத்தம்பூர், நடந்தை, ராமதேவம், கோதூர் வருவாய் கிராம விவசாயிகள்   கலந்து கொண்டனர். விழாவில் கலந்து விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை சார்பில் மானியத்துடன் கூடிய தென்னங் கன்று, கைத்தெளிப்பான், விசைத் தெளிப்பான், பயிர் வகைகளும், தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி விதைகள், பாரம்பரிய தோட்டக்கலை இடுபொருட்கள், பழச் செடிகள், மரச் செடிகள், நெகிழிக்கூடை, பிளாஸ்டிக் டிரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது. 

    வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் இடுபொருட்கள் விநியோக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி அட்மா தலைவர் தனராசு, பரமத்தி பேரூராட்சித் தலைவர் மணி ,மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×