search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலோசகர்"

    • ஆண்டு சந்தா உட்பட அனைத்து செலவையும் கல்லூரி நிர்வாகமே ஏற்றுக் கொண்டுள்ளது.
    • காப்பீட்டு திட்டத்தின் பயன்பாடுகள் பற்றி பணியாளர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி குழுமத்தில் பணிபுரியும் அனைவருக்கும் நிர்வாகம் சார்பாக மருத்துவ காப்பீட்டு திட்டம்.நாகை இ ஜி எஸ் பிள்ளை கல்லூரியில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் பயன்பெறும் வகையில் ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு நிறுவனத்தில் மருத்துவ காப்பீட்டு பதிவு செய்து, ஆண்டு சந்தா உட்பட அனைத்து செலவையும் கல்லூரி நிர்வாகமே ஏற்றுக் கொண்டுள்ளது.

    அதற்கான காப்பீட்டு பதிவு அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்நிகழ்வினை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி அம்மாள் பணியாளர்களுக்கு காப்பீடு அட்டை வழங்கி துவக்கி வைத்தார்.

    கல்லூரியின் செயலர் திரு செந்தில்குமார், இணைச் செயலர் சங்கர் கணேஷ் மற்றும் ஆலோசகர் பரமேஸ்வரன் ஆகியோரும் பணியாளர்களுக்கு காப்பீட்டு பதிவு அட்டையை வழங்கினர்.

    மாணவர் சேர்க்கை பிரிவின் தலைவர் முனைவர் மணிகண்ட குமரன் அவர்கள் காப்பீட்டு திட்டத்தின் பயன்பாடுகள் பற்றி பணியாளர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

    தேர்வு நெறியாளர் முனைவர் சின்னதுரை அவர்கள் பணியாளர்கள் சார்பாக நிர்வாகத்திற்கு நன்றி கூறினார்.

    முதன்மை செயல் அதிகாரி, கல்விசார் இயக்குனர், அனைத்து கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு பற்றி பொய் சொன்ன டிரம்ப் ஆலோசகருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. #DonaldTrump #GeorgePapadopoulos
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியா நேரடியாக தலையிட்டதாக புகார் எழுந்து இருக்கிறது.

    குறிப்பாக அப்போது குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெறவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடையவும் ரஷியா தலையிட்டது என கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அமெரிக்காவில் ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.



    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது டிரம்பின் உதவியாளராக, அவரது பிரசார குழுவில் இணைந்து செயல்பட்டவர், ஜார்ஜ் பப்படோபுலஸ் (வயது 31). இவர் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் டிரம்பின் வெளியுறவு கொள்கை ஆலோசகராக சேர்ந்தார்.

    இவருக்கு மால்டா நாட்டை சேர்ந்த கல்வியாளர் ஜோசப் மிப்சுட் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஜார்ஜ் பப்படோபுலஸ்சிடம் ஜோசப் மிப்சுட், ஹிலாரி தொடர்பான ஆயிரக்கணக்கான மின் அஞ்சல்கள் ரஷியர்களிடம் உள்ளது என கூறினார். மேலும் அவர், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினிடம் தனக்கு தொடர்பு உண்டு என்றும் கூறினார்.

    இந்த நிலையில் டிரம்பிடமும், அப்போதைய செனட் சபை எம்.பி.யான ஜெப் செசன்சிடமும், தன்னால் டிரம்ப், புதின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய முடியும் எனவும் ஜார்ஜ் பப்படோபுலஸ் கூறி உள்ளார். இதற்கு டிரம்ப் தலையை அசைத்து சம்மதம் தெரிவித்து உள்ளார். ஆனால் இது குறித்து முடிவு எடுப்பதை அவர் ஜெப் செசன்சிடம் விட்டு விட்டார் என்றும் கூறப்படுகிறது.

    இதற்கு இடையே லண்டன் விடுதி ஒன்றில் ஆஸ்திரேலிய உயர் அதிகாரி ஒருவரிடம் ஜோசப் மிப்சுட்டுடனான தனது சந்திப்பு பற்றி ஜார்ஜ் பப்படோபுலஸ் கூறி உள்ளார்.

    அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் மின்னஞ்சல்கள் கசிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய கால கட்டத்தில், ஆஸ்திரேலிய உயர் அதிகாரி, ஜார்ஜ் பப்படோபுலஸ் தன்னிடம் கூறிய விவகாரங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டார்.

    அதைத் தொடர்ந்து, அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு தொடர்பாக அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் அதிகாரிகள், ஜார்ஜ் பப்படோபுலஸ்சிடம் விசாரணை நடத்தினர்.

    அந்த விசாரணையில் ரஷியாவுடன் தொடர்பு உடைய 2 பேரை தான் டிரம்ப் உதவியாளராக சேர்ந்த பின்னர் சந்தித்து இருந்தாலும், டிரம்பிடம் சேருவதற்கு முன்பாக சந்தித்ததாக பொய் சொல்லி விட்டார்.

    இது தொடர்பாக அவர் மீது வாஷிங்டன் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. எப்.பி.ஐ.யிடம் தான் பொய் சொன்னது குறித்து அவர் ஒப்புக்கொண்டார்.

    மேலும் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பும் அளித்து உள்ளார்.

    அதன் காரணமாக அவருக்கு குறைந்த தண்டனையாக 14 நாள் சிறைத்தண்டனையும், 9 ஆயிரத்து 500 டாலர் (சுமார் ரூ.6 லட்சத்து 65 ஆயிரம்) அபராதமும் விதித்து நீதிபதி ராண்டல்ப் மோஸ் தீர்ப்பு அளித்தார். அப்போது அவர், ஜார்ஜ் பப்படோபுலஸ் நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் பொய் கூறி விட்டார் என கூறினார்.

    முன்னதாக ஜார்ஜ் பப்படோபுலஸ் நீதிபதியிடம், “நான் தேசப்பற்று கொண்ட அமெரிக்கர். இப்போது என் வாழ்க்கையே தலைகீழாகப்போய்விட்டது. என்னை நான் சரிசெய்து கொள்ள வாய்ப்பு தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு தொடர்பான விசாரணையில் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.  #DonaldTrump #GeorgePapadopoulos
    ஆந்திர மாநில அரசின் தகவல் தொடர்பு ஆலோசகர் பதவியில் இருந்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கணவர் பரகல பிரபாகர் இன்று ராஜினாமா செய்தார். #APgovermentadviser #resigns
    ஐதராபாத்:

    ஆந்திர மாநில அரசின் தகவல் தொடர்பு ஆலோசகராக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனின் கணவர் பரகல பிரபாகர் கடந்த 2014-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2 ஆண்டு ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்ட இவரது பதவி மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.

    இதையடுத்து, பாஜகவுடன் கூட்டணியில் இருந்த ஆந்திர மாநில அரசு ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி வந்தார். இதையடுத்து சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை என்பதால் சமீபத்தில் பாஜகவுடனான கூட்டணியை தெலுங்கு தேசம் கட்சி முறித்துக்கொண்டது.

    இதைத்தொடர்ந்து, அம்மாநில முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு, பாஜகவை முழு மூச்சாக எதிர்த்து வந்தார். இந்நிலையில், ஆந்திர அரசின் தகவல் தொடர்பு அதிகாரியாக இருந்த பரகல பிரபாகரன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ சிறப்பு அந்தஸ்து கோரி வரும் மாநில அரசின் போராட்டத்துக்கு தாம் தடையாக இருக்க விரும்பவில்லை. எதிர்க்கட்சி தலைவர்கள் எழுப்பும் கேள்விகள் வேதனை அளிக்கின்றன. உங்களின் விருப்பத்துக்கு மாறாக நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    4 ஆண்டுகள் பதவி வகித்த பரகல பிரபாகரின் பதவிக்காலம் ஜூலை 4-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தற்போது அவர் ராஜினாமா செய்திருப்பதும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. #APgovermentadviser #resignsa
    ×