search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம்
    X

    பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.

    கல்லூரி பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம்

    • ஆண்டு சந்தா உட்பட அனைத்து செலவையும் கல்லூரி நிர்வாகமே ஏற்றுக் கொண்டுள்ளது.
    • காப்பீட்டு திட்டத்தின் பயன்பாடுகள் பற்றி பணியாளர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி குழுமத்தில் பணிபுரியும் அனைவருக்கும் நிர்வாகம் சார்பாக மருத்துவ காப்பீட்டு திட்டம்.நாகை இ ஜி எஸ் பிள்ளை கல்லூரியில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் பயன்பெறும் வகையில் ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு நிறுவனத்தில் மருத்துவ காப்பீட்டு பதிவு செய்து, ஆண்டு சந்தா உட்பட அனைத்து செலவையும் கல்லூரி நிர்வாகமே ஏற்றுக் கொண்டுள்ளது.

    அதற்கான காப்பீட்டு பதிவு அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்நிகழ்வினை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி அம்மாள் பணியாளர்களுக்கு காப்பீடு அட்டை வழங்கி துவக்கி வைத்தார்.

    கல்லூரியின் செயலர் திரு செந்தில்குமார், இணைச் செயலர் சங்கர் கணேஷ் மற்றும் ஆலோசகர் பரமேஸ்வரன் ஆகியோரும் பணியாளர்களுக்கு காப்பீட்டு பதிவு அட்டையை வழங்கினர்.

    மாணவர் சேர்க்கை பிரிவின் தலைவர் முனைவர் மணிகண்ட குமரன் அவர்கள் காப்பீட்டு திட்டத்தின் பயன்பாடுகள் பற்றி பணியாளர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

    தேர்வு நெறியாளர் முனைவர் சின்னதுரை அவர்கள் பணியாளர்கள் சார்பாக நிர்வாகத்திற்கு நன்றி கூறினார்.

    முதன்மை செயல் அதிகாரி, கல்விசார் இயக்குனர், அனைத்து கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×