search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதிபராசக்தி கோவில்"

    • கோவிலுக்கு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
    • திருச்சி- சென்னை, சென்னை- திருச்சி சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்தது.

    மதுராந்தகம்:

    மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்திகோவில் பிரசித்தி பெற்றது. தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

    இந்த கோவிலில் இருமுடி செலுத்தும்விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத இறுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் முதல் வாரம் வரை நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு இருமுடி செலுத்த வருவது வழக்கம்.

    இந்த ஆண்டு இருமுடி செலுத்தும்விழா இன்று (23-ந்தேதி) தொடங்கியது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது. தற்போது கட்டுப்பாடுகளில் தளர்வுகள் உள்ளதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து விரதம் இருந்து இருமுடி செலுத்த பஸ், வேன், கார்களில் இன்று அதிகாலை முதலே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் குவிந்தனர்.

    இதனால் மேல்மருவத்தூர் பகுதியே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் வந்த வாகனங்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரங்களிலும் மற்றும் பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களிலும் நிறுத்தப்பட்டு இருந்தது.

    இதனால் இன்று அதிகாலை 5 மணி முதல் மேல்மருவத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 9 மணிவரை சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேல்மருவத்தூர் முதல் 4 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் நீண்ட வரிசையாக நின்றன. திருச்சி- சென்னை, சென்னை- திருச்சி சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்தது. காலை 9 மணிக்கு பின்னரே வாகனங்கள் மெல்ல மெல்ல சீரானது.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, 'மேல்மருவத்தூர் கோவிலுக்கு பக்தர்களின் வருகையையொட்டி போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    40 நாட்களுக்கு மேலாக நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் இனிவரும் நாட்களில் கூடுதலான போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • 17ந் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது.
    • ஆதிபராசக்தி அம்மன் சிலையை மண்டபத்தில் எழுந்தருள செய்தல் நிகழ்ச்சி நடந்தது.

    உடுமலை :

    உடுமலை ஆண்டாள் சீனிவாசன் லேஅவுட் சர்தார் வீதியில் கட்டப்பட்டுள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. கடந்த 17ந் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது. அன்று காலை 4 மணிக்கு குருபூஜை ,4:30 மணிக்கு கோபுர கலசம் ஸ்தாபிதம், ஆதிபராசக்தி அம்மன் சிலையை மண்டபத்தில் எழுந்தருள செய்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 7 .15 மணிக்கு சக்தி கொடியேற்றுதல், 11:30 மணிக்கு முதல் கால வேள்வி பூைஜ, தொடர்ந்து இரண்டாம் கால வேள்வி பூஜை, அஷ்டபந்தனம் மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    இன்று 22-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 5:30 மணிக்கு 3ம் கால வேள்வி பூஜை ,காலை 9 .15 மணிக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தின் நிறுவனர் பங்காரு அடிகளாருக்கு பாத பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணி முதல் 10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் கோபுர கலசங்களுக்கு பங்காரு அடிகளார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. மாலை 3 மணிக்கு மகா அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க உடுமலை தலைவர் ருக்மணி அம்மாள், செயலாளர் கிருஷ்ணசாமி ,பொருளாளர் சிவகாமி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    கும்பாபிஷேகத்தில் உடுமலை நகர தி.மு.க. செயலாளர் சி.வேலுச்சாமி ,உடுமலை நகர்மன்ற தலைவர் மத்தின் ,மடத்துக்குளம் பேரூராட்சி துணைத் தலைவர் ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை உடுமலை டி.எஸ்.பி.,தேன்மொழி வேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா ,போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் காவலர்கள் செய்திருந்தனர். 

    • ஆடிப்பூர விழா விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில் பாலாபிஷேகம்- அன்னதானம் வழங்கப்பட்டது.
    • ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க விழுப்புரம் மாவட்ட தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கி சக்தி கொடியை ஏற்றி வைத்தார்.

     விழுப்புரம்:

    விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில் 13-ம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆடிப்பூர பெருவிழாவிழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் மிகவும் பிரசித்தி பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    அதுபோல் இந்த ஆண்டு 13-ம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா நடைபெற்றது. இவ்விழா அதிகாலை 4 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது. பின்னர் 4.30 மணிக்கு கருவறை அன்னைக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, காலை 7 மணிக்கு சக்தி கொடியேற்றுதல் நடைபெற்றது.ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க விழுப்புரம் மாவட்ட தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கி சக்தி கொடியை ஏற்றி வைத்தார். கஞ்சிவார்த்தல்- பாலாபிஷேகம் அதன் பிறகு கஞ்சி வார்த்தலும், கருவறை அன்னைக்கு பாலாபிஷேகமும் நடந்தது.

    இதனை டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கஞ்சி வார்க்கப்பட்டு ஆயிரக்க ணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். விழாவில் அரசு வக்கீல் சுப்பிர மணியன், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட செயலாளர் மூர்த்தி, பொருளாளர் ரத்தின சிகாமணி, துணை த்தலைவர் ராமமூர்த்தி, வேள்விக்குழு மாவட்ட பொறுப்பாளர்கள் திரிபுரசுந்தரி, மணிவாசகம், வட்டத்தலைவர்கள் பழனி, தர்மலிங்கம், சிகாமணி, மோகனகிருஷ்ணன், மணிகண்டன், மகாலிங்கம், முனுசாமி, முன்னாள் தலைவர் பழனிச்சாமி, வேள்விக்குழு நிர்வாகிகள் கார்த்திகேயன், மாரிமுத்து மற்றும் ஒன்றிய தலைவர்கள், மன்ற தலைவர்கள், வேள்விக்குழு தொண்டர்கள், செவ்வாடை பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை சித்தர் சக்தி பீட தலைவர் வசந்திசம்பத், துணைத்தலைவர் பார்வதி அம்மாள், பொருளாளர் சாவித்திரி லட்சுமி நாராயணன், முன்னாள் தலைவர் சீத்தாராமன், முன்னாள் பொருளாளர் சண்முகம் மற்றும் சக்தி பீட அனைத்து தொண்டர்களும் செய்திருந்தனர்.

    ×