search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டுக்கிடா"

    • சங்கராந்தி பண்டிகையின் போது பல்வேறு ஊர்களில் நடைபெறும் ஆட்டுப்பந்தயத்திலும் பங்கேற்க செய்கிறார்.
    • ஆட்டுக்கிடாய்கள் மூலம் புள்ளையா கணிசமாக பணம் சம்பாதித்து வருகிறார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பாபுல பாடு அடுத்த வீரவல்லியை சேர்ந்தவர் புள்ளையா. இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 2 ஆட்டுக்கிடா குட்டிகளை விலைக்கு வாங்கி வந்தார். அவற்றுக்கு ராம், லட்சுமண் என பெயரிட்டார்.

    சிறிய பாரத்தை இழுக்க ஆட்டுக்கிடாய்களுக்கு பயிற்சி அளித்தார். பின்னர் ஆட்டுக்கிடாய்களுக்கு ஏற்றவாறு பிரத்தியோகமாக வண்டி ஒன்றை தயார் செய்தார்.

    அதன் மூலம் வயலில் இருந்து விளைவிக்கப்படும் காய்கறி, நெல் மற்றும் புல்லைக் கொண்டு வர பயன்படுத்தினார்.

    மேலும் ஆட்டுக்கிடாய்களை வைத்து ஏர் ஓட்டி வருகிறார். உள்ளூர் கிராம மக்களுக்கு நகர்புறங்களில் இருந்து சிமெண்ட் மூட்டைகள், சிமெண்ட் பைப்புகள் வண்டியை ஏற்று வந்து பணம் சம்பாதித்து வருகிறார். சங்கராந்தி பண்டிகையின் போது பல்வேறு ஊர்களில் நடைபெறும் ஆட்டுப்பந்தயத்திலும் பங்கேற்க செய்கிறார்.

    ஆட்டுக்கிடாய்கள் மூலம் புள்ளையா கணிசமாக பணம் சம்பாதித்து வருகிறார். மாட்டு வண்டிக்கு ஒன்றும் குறைவில்லாமல் விவசாய வேலைகளில் அயராது உழைத்து வருமானம் ஈட்டி தரும் எந்த ஆட்டுக்கிடாய்களை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

    ×