search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வண்டி"

    • சங்கராந்தி பண்டிகையின் போது பல்வேறு ஊர்களில் நடைபெறும் ஆட்டுப்பந்தயத்திலும் பங்கேற்க செய்கிறார்.
    • ஆட்டுக்கிடாய்கள் மூலம் புள்ளையா கணிசமாக பணம் சம்பாதித்து வருகிறார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பாபுல பாடு அடுத்த வீரவல்லியை சேர்ந்தவர் புள்ளையா. இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 2 ஆட்டுக்கிடா குட்டிகளை விலைக்கு வாங்கி வந்தார். அவற்றுக்கு ராம், லட்சுமண் என பெயரிட்டார்.

    சிறிய பாரத்தை இழுக்க ஆட்டுக்கிடாய்களுக்கு பயிற்சி அளித்தார். பின்னர் ஆட்டுக்கிடாய்களுக்கு ஏற்றவாறு பிரத்தியோகமாக வண்டி ஒன்றை தயார் செய்தார்.

    அதன் மூலம் வயலில் இருந்து விளைவிக்கப்படும் காய்கறி, நெல் மற்றும் புல்லைக் கொண்டு வர பயன்படுத்தினார்.

    மேலும் ஆட்டுக்கிடாய்களை வைத்து ஏர் ஓட்டி வருகிறார். உள்ளூர் கிராம மக்களுக்கு நகர்புறங்களில் இருந்து சிமெண்ட் மூட்டைகள், சிமெண்ட் பைப்புகள் வண்டியை ஏற்று வந்து பணம் சம்பாதித்து வருகிறார். சங்கராந்தி பண்டிகையின் போது பல்வேறு ஊர்களில் நடைபெறும் ஆட்டுப்பந்தயத்திலும் பங்கேற்க செய்கிறார்.

    ஆட்டுக்கிடாய்கள் மூலம் புள்ளையா கணிசமாக பணம் சம்பாதித்து வருகிறார். மாட்டு வண்டிக்கு ஒன்றும் குறைவில்லாமல் விவசாய வேலைகளில் அயராது உழைத்து வருமானம் ஈட்டி தரும் எந்த ஆட்டுக்கிடாய்களை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

    • மாட்டுவண்டி உரிமையாளர் தலைமைச் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.
    • கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்ட மாட்டு வண்டி உரிமையா ளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் பொத்தனூர் சங்க அலுவ லக வளாகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குண சேகரன் வரவேற்றார். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    பரமத்திவேலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல் குவாரி அமைக்க அனுமதி வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், மாவட்ட கனிம வள அலுவ லர் மற்றும் பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரத்துறை அலுவலர் ஆகி யோருக்கு சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வது.

    மாட்டுவண்டி உரிமையா ளர் தலைமைச் சங்க உறுப்பி னர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். மாட்டு வண்டி உரிமையாளர்களின் சூழ்நிலை கருதி வங்கி மூலம் வண்டி மற்றும் மாடு வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். தமிழக அரசின் தொழிலாளர் நல வாரியத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்களை இணைந்து நலவாரிய கார்டு வழங்க வேண்டும்.

    மாட்டுவண்டி உரிமை யாளரின் குழந்தைகளின் படிப்பு செலவினை தமிழக அரசே ஏற்க வேண்டும். மாட்டு வண்டி தொழிலா ளர்களுக்கு குடும்ப பாது காப்பு நிதி மற்றும் இன்சூ ரன்ஸ் ஆகியவை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் மாவட்ட துணைத் தலைவர் நாகராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மாவிளக்கு போட்டு, பண்டங்கள், பலகாரங்கள் படையலிட்டு வேண்டுதல் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • குறிப்பாக இன்று மாலை குகை மாரியம்மன், காளியம்மன் கோவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாநகரில் உள்ள கோவில்களில் ஆடித் திருவிழாவையொட்டி மக்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மாவிளக்கு போட்டு, பண்டங்கள், பலகாரங்கள் படையலிட்டு வேண்டுதல் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று அம்மனுக்கு பொங்கல் வைத்தல் மற்றும் குண்டம் இறங்கும் விழா, இன்று வண்டி வேடிக்கை என்பதால் திருவிழா களை கட்டியுள்ளது‌. குறிப்பாக இன்று மாலை குகை மாரியம்மன், காளியம்மன் கோவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என்பதால் லட்சக்கணக்கான மக்கள் இதில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் திருவிழாவிற்கு உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்கு வருவார்கள் என்பதால், அவர்களுக்கு கறி சோறு சமைத்து போட, சேலத்தில் இறைச்சி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆடு, கோழி, மீன்கள் கடைகளில் அதிகாலை நேரம் முதலே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டம் கூட்டமாக மக்கள் இறைச்சியை அதிகளவில் வாங்கிச் சென்றனர்.

    சேலத்தில் டவுன், செவ்வாய் பேட்டை, குகை, அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, தாதகாப்பட்டி, லைன்மேடு, நெத்திமேடு, அன்னதானப்பட்டி, கிச்சிப்பாளையம், கருங்கல்பட்டி, களரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதலே ஆடு, கோழி, மீன்கள் இறைச்சி விற்பனை களை கட்டியது. வரும் ஞாயிற்றுக்கிழமை திருவிழா இறுதி நாள் வரை இறைச்சி விற்பனை விறுவிறுப்பாக நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    • சேலம் மாவட்டத்தில் ஆடிமாதத்தில் பல்வேறு கோவில்களில் ஆடித்திருவிழா நடைபெறும்.
    • இந்த திருவிழாவில் ஆண்களே பெண்வேடமிட்டு வருவர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 5 முதல் 20 வரையான வண்டிகள் தயார் செய்யப்படும்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் ஆடிமாதத்தில் பல்வேறு கோவில்களில் ஆடித்திருவிழா நடைபெறும். ஆடித் திருவிழாவின் போது, சேலம் குகை ஸ்ரீமாரியம்மன், காளியம்மன் கோயிலில் நடக்கும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி 100 வருடங்களுக்கு மேலாக மக்களிடையே மிகவும் புகழ்பெற்றுவிளங்கி வருகிறது. இந்த ஆண்டு ஆடித்திருவிழாவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நாளை நடக்கிறது.

    இதில் கண்ணைக் கவரும் வண்ண மின் விளக்குகளால், அலங்கரிக்கப்பட்ட தேர்களில் கடவுள் வேடமணிந்தவர்கள், மக்கள் கூட்டத்தில் வலம் வந்து ஆசி வழங்குவது தான், வண்டி வேடிக்கை விழாவின் சிறப்பம்சம். திருவிழாவின் போது பக்தர்கள் நோன்பு இருந்து கடவுள் உருவங்களைத் தரித்து, வண்ண வண்டிகளில் வலம் வருவர்.

    பெரும்பாலும் புராணக் கதைகளில் வரும் நிகழ்வுகள் நாடகமாக நடித்துக் காட்டப்படும். பெண்கள் இந்நிகழ்வில் பங்குபெறுவதில்லை. ஆண்களே பெண்வேடமிட்டு வருவர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 5 முதல் 20 வரையான வண்டிகள் தயார் செய்யப்படும்.

    அந்த வண்டிகளில் மின் விளக்குகளால் அலங்கரித்து ஒளி, ஒலி அமைப்புகள் செய்யப்படும். அலங்கார வண்டிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து குகை கோவிலை 3 முறை சுற்றி செல்லும். குகை மாரியம்மன் கோவிலில் நடக்கும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை காண தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.

    வேண்டியது நிறை வேறியதும் பக்தர்கள் வண்டி வேடிக்கையில் கடவுள் வேடத்தில் வந்து அம்மனை வணங்கி செல்வார்கள். மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் வண்டிகளில் பக்தர்கள் வேடமிட்டு வந்து அம்மனை வணங்கி செல்வார்கள்.

    பக்தர்கள், சிவன், பார்வதி, லட்சுமி, விநாயகர் முருகன் ஆகியோர் கைலசாத்தில் அமர்ந்திருப்பதை போலவும், ரதி மன்மதன் வேடம், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் வேடம் அணிந்தும், வண்டியில் ஊர்வலமாக செல்வர். மேலும், அர்ச்சுனன் வில் வித்தை அரங்கேற்றம், கிருஷ்ணன், நரசிம்மன் இரணியனை வதம் செய்தது. மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலட்சி , வள்ளி, தெய்வானை வேடம் ஆகியவை மிகவும் நேர்த்தியாகப் காட்சிப்படுத்தப்படும்.

    இந்த நிகழ்ச்சி நாளை மாலை 4.30 மணியில் இருந்து இரவு 10.30 மணி வரை இந்நிகழ்வு நடைபெறும். சேலம் மாநகரின் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை, குழந்தை களுடன் கண்டுகளிப்பர். இன்று மாலை குகை மாரியம்மன்,காளியம்மன் கோவிலில் தீ மிதி நடக்கிறது.

    ×