search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலகு குத்தி"

    • பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம் 4 ராஜ வீதிகள் வழியாக வந்தனர்.
    • அலகு குத்தி, பறவை காவடியில் 4 ராஜ வீதிகள் வழியாக வலம் வந்தனர்.

    சென்னிமலை ,

    சென்னிமலை பார்க் ரோட்டில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது. விழாவை யொட்டி பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம் 4 ராஜ வீதிகள் வழியாக வந்தனர்.

    இதை தெடர்ந்து பிராட்டியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் கார்த்தி, செல்வா, கண்ணன் ஆகி யோர் வேனின் மேல்பகுதி யில் விமான அலகு குத்தி, பறவை காவடியில் 4 ராஜ வீதிகள் வழியாக வலம் வந்தனர்.

    மேலும் பக்தர்கள் 12 அடி நீளமுள்ள அலகை வாயில் குத்தி துர்க்கை அம்மன் கோவில் வரை வந்து அம்மனை வழி பட்டனர். அம்மனுக்கு அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    இவ்விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    இதையடுத்து அன்னதானம் வழங்க ப்பட்டது. இதை தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் மற்றும் ஆர்க்கெஸ்ட்ரா நடைபெற்றது.

    • பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தி ஊர்வலமாக வந்தனர்.
    • இதையடுத்து சுவாமிகள் திருவீதி உலா வந்தது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் திருவிழா நடந்து வருகிறது.இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது.

    தொடர்ந்து படைக்கலம், மாவிளக்கு எடுத்து வந்து பொங்கல் வைத்து பக்தர்கள் அம்மனை வழிப்பட்டனர்.

    விழாவையொட்டி பக்தர்கள் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தும், நாக்கில் சூலாயுதம் குத்தியும், நெஞ்சில் வேல் குத்தியும் சாட்டையால் தனக்கு தானே அடித்தும் நேர்த்திகடன் செலுத்தி ஊர்வலமாக வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் சத்தியமங்கலம் சாலை நம்பியூர் சாலை வழியாக கோவிலை வந்தடைந்தனர். இந்த விழாவில் புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானபொது மக்கள் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து சுவாமிகள் திருவீதி உலா வந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

    ×