search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்"

    • பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தி ஊர்வலமாக வந்தனர்.
    • இதையடுத்து சுவாமிகள் திருவீதி உலா வந்தது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் திருவிழா நடந்து வருகிறது.இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது.

    தொடர்ந்து படைக்கலம், மாவிளக்கு எடுத்து வந்து பொங்கல் வைத்து பக்தர்கள் அம்மனை வழிப்பட்டனர்.

    விழாவையொட்டி பக்தர்கள் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தும், நாக்கில் சூலாயுதம் குத்தியும், நெஞ்சில் வேல் குத்தியும் சாட்டையால் தனக்கு தானே அடித்தும் நேர்த்திகடன் செலுத்தி ஊர்வலமாக வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் சத்தியமங்கலம் சாலை நம்பியூர் சாலை வழியாக கோவிலை வந்தடைந்தனர். இந்த விழாவில் புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானபொது மக்கள் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து சுவாமிகள் திருவீதி உலா வந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

    • தேர் திருவிழாவுக்கு அரசு சிறப்பு நகர் பேருந்துகள் இயக்கப்பட்டன.
    • தேரோட்டத்தில் திருத்தேர்மீது உப்பு, மிளகு, முத்து கொட்டைகளை வீசி பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், இருளப்பட்டியில் வரலாற்று சிறப்பு மிக்க அருள்மிகு ஸ்ரீ காணியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா ஆகஸ்ட் 9 ஆம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    தொடர்ந்து, கோவில் கொடியேற்று விழா, பல்லக்கு உற்சவம், வாணவேடிக்கை, சுவாமி திருக்கல்யாணம் மற்றும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன.

    இதனையடுத்து, காணியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் திருத்தேர்மீது உப்பு, மிளகு, முத்து கொட்டைகளை வீசி பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

    இந்த தேர் திருவிழானையொட்டி, அரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோபாலபுரம் சர்க்கரை ஆலை, அ.பள்ளிப்பட்டி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.

    மேலும் அரூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் இருந்து தேர் திருவிழாவுக்கு அரசு சிறப்பு நகர் பேருந்துகள் இயக்கப்பட்டன.

    இருளப்பட்டி, புதுப்பட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, பாப்பம்பாடி, அ.பள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அனைத்து சமுதாய ஊர்த் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் இந்த தேர்திருவிழாவில் பங்கேற்றனர்.

    அரூர் டி.எஸ்.பி. பெனாசிர் பாத்திமா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×