search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அலகு குத்தி, பறவை காவடி எடுத்து, சாட்டையால் அடித்து நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்
    X

    அலகு குத்தி வந்த பக்தர்கள்.

    அலகு குத்தி, பறவை காவடி எடுத்து, சாட்டையால் அடித்து நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்

    • பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தி ஊர்வலமாக வந்தனர்.
    • இதையடுத்து சுவாமிகள் திருவீதி உலா வந்தது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் திருவிழா நடந்து வருகிறது.இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது.

    தொடர்ந்து படைக்கலம், மாவிளக்கு எடுத்து வந்து பொங்கல் வைத்து பக்தர்கள் அம்மனை வழிப்பட்டனர்.

    விழாவையொட்டி பக்தர்கள் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தும், நாக்கில் சூலாயுதம் குத்தியும், நெஞ்சில் வேல் குத்தியும் சாட்டையால் தனக்கு தானே அடித்தும் நேர்த்திகடன் செலுத்தி ஊர்வலமாக வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் சத்தியமங்கலம் சாலை நம்பியூர் சாலை வழியாக கோவிலை வந்தடைந்தனர். இந்த விழாவில் புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானபொது மக்கள் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து சுவாமிகள் திருவீதி உலா வந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

    Next Story
    ×