என் மலர்
நீங்கள் தேடியது "whipping them"
- பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தி ஊர்வலமாக வந்தனர்.
- இதையடுத்து சுவாமிகள் திருவீதி உலா வந்தது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் திருவிழா நடந்து வருகிறது.இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது.
தொடர்ந்து படைக்கலம், மாவிளக்கு எடுத்து வந்து பொங்கல் வைத்து பக்தர்கள் அம்மனை வழிப்பட்டனர்.
விழாவையொட்டி பக்தர்கள் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தும், நாக்கில் சூலாயுதம் குத்தியும், நெஞ்சில் வேல் குத்தியும் சாட்டையால் தனக்கு தானே அடித்தும் நேர்த்திகடன் செலுத்தி ஊர்வலமாக வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் சத்தியமங்கலம் சாலை நம்பியூர் சாலை வழியாக கோவிலை வந்தடைந்தனர். இந்த விழாவில் புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானபொது மக்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து சுவாமிகள் திருவீதி உலா வந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.
- அண்ணாமலை, 6 முறை சாட்டையால் தன்னைத்தானே அடித்து 'கவன ஈர்ப்பு' போராட்டம் நடத்தினார்.
- சாட்டையால் அடிக்கும்போது அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் வெற்றிவேல்... வீரவேல் என முழக்கமிட்டனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து 6 முறை சாட்டையால் அடித்து போராட்டம் நடத்துவேன் என்றும் தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை நான் காலணிகள் அணிய மாட்டேன். நாளை முதல் 48 நாட்களுக்கு நான் விரதம் இருந்து அறுபடை முருகன் கோவில்களுக்கு சென்று, முருகப்பெருமானிடம் முறையிடப்போகிறேன் என்று அண்ணாமலை நேற்று தெரிவித்து இருந்தார்.
அதன்படி, இன்று காலை 10 மணிக்கு அண்ணாமலை, 6 முறை சாட்டையால் தன்னைத்தானே அடித்து 'கவன ஈர்ப்பு' போராட்டம் நடத்தினார்.
மேல் சட்டை அணியாமல், பச்சை வேட்டி அணிந்து கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு இந்த போராட்டத்தை அண்ணாமலை நடத்தினார். அண்ணாமலை சாட்டையால் அடிக்கும்போது அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் வெற்றிவேல்... வீரவேல் என முழக்கமிட்டனர்.
இந்நிலையில், அண்ணாமலை அடித்துக் கொள்வதற்கு முதலில் அசல் சாட்டை கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், பிறகு வேறு ஒரு சாதாரண சாட்டையால் அவர் அடித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபடும் அண்ணாமலை அசல் சாட்டையால் அடித்துக் கொள்ளாமல், அவருக்கேற்ப வேறு ஒரு சாட்டையால் அடித்துக் கொண்டுள்ளாரா என வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.






