search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிவியல் திருவிழா"

    • தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் வானவில் மன்றம்.
    • இந்த நிகழ்ச்சி நேற்று தாரமங்கலம் எம்ஜிஆர் காலனி பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் நடைபெற்றது.

    தாரமங்கலம்:

    தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் வானவில் மன்றம். இல்லம் தேடி கல்வி மையங்கள் இணைந்து ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா நிகழ்ச்சி தாரமங்கலம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த அரசு பள்ளிகளில் நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி நேற்று தாரமங்கலம் எம்ஜிஆர் காலனி பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார மேற்பார்வையாளர் சங்கர் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிசாமி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் நம் அன்றாட வாழ்வில் அறிவியல் பயன்பாடு குறித்தும், எதையும் நாம் அறிவியல் சிந்தனையோடு செயல்படுத்த வேண்டும் என்றும்,மேலும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு மந்திரமா? தந்திரமா? என்ற மேஜிக் நிகழ்ச்சியும், அறிவியல், கணித செயல்பாடுகள், ஓரிகாமி எனப்படும் காகித மடிப்பு கலையும் மாணவர்களுக்கு கற்று தரப்பட்டது.

    கோடை விடுமுறையில் மாணவர்கள் இதுபோன்ற கலைகளை வீட்டில் செய்து பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். இவ்விழாவில் ஆசிரியர் பயிற்றுனர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார் பலர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தை களும். பெற்றோர்களும் அறிவியல் ஆசிரியர்களும் திரளாக கலந்து கொண்ட னர். முடிவில் ஆசிரியர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

    • கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா நடைபெற்றது
    • விழாவை ஊராட்சி மன்ற தலைவர் ஆரஞ்சுபாப்பா குணசேகரன் தொடங்கி வைத்தார்

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டை ஒன்றியம் காட்டுநாவல் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் அறிவியல் திருவிழா நடைபெற்றது. விழாவை ஊராட்சி மன்ற தலைவர் ஆரஞ்சுபாப்பா குணசேகரன் தொடங்கி வைத்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி லட்சுமி, வார்டு உறுப்பினர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார். விழாவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன் பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவை இல்லம் தேடி கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் ரகமத்துல்லா ஒருங்கிணைத்தார். வானவில் மன்ற கருத்தாளர்கள் வசந்தி, தெய்வீக செல்வி ஆகியோர் மாணவர்களுக்கு எளிய அறிவியல் சோதனை, கணித புதிர்கள், படம் வரைந்து விளக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை செய்து காண்பித்தனர்.

    • மே மாதம் 2ந் தேதி துவங்கி 22ந் தேதி வரை நடக்கிறது.
    • மாணவர்களின் திறமைகள் மற்றும் சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஒரு தளத்தை உருவாக்குகிறது.

    உடுமலை :

    தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் ஆயிரம், ஆயிரம் அறிவியல் திருவிழா , ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் ஒத்துழைப்போடு வானவில் மன்ற கருத்தாளர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது.அனைத்து தரப்பு மாணவர்களும் அறிவியலை அணுகக் கூடியதாகவும், அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகவும் இத்திருவிழா கொண்டுள்ளது.மே மாதம் 2ந் தேதி துவங்கி 22ந் தேதி வரை நடக்கிறது. இதற்கான பயிற்சி முகாம் நடக்கிறது.

    இது குறித்து இல்லம் தேடி கல்வி திட்ட நிர்வாகிகள் கூறியதாவது:- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மாணவர்களின் திறமைகள் மற்றும் சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஒரு தளத்தை உருவாக்குகிறது. இந்த ஆயிரம், ஆயிரம் அறிவியல் திருவிழாவில் எளிய அறிவியல் பரிசோதனைகள், கணிதத்தை எளிமையாக கற்றல், அறிவியல் அற்புதங்களை ஆராய்தல், உள்ளூர் வளங்களை பாதுகாப்பதற்கான வழிவகைகளை கண்டறிதலை உள்ளடக்கியுள்ளது. விளையாட்டுகள் மற்றும் பாடல்கள், ஒரிகாமி எனும் காகிதக்கலை பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கி இந்த திருவிழா நடக்கிறது.மொத்தம் 13 ஆயிரம் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், வானவில் மன்ற கருத்தாளர்களுடன் இணைந்து கோடை விடுமுறை காலத்தில் கிராம அளவில் குழந்தைகளை சந்தித்து அறிவியல் திருவிழாவை நடத்த உள்ளனர்.ஒவ்வொரு குழந்தையும், அவர்களது இல்லங்களுக்கு சென்று கற்றலை தொடர உள்ளதால், இந்த முன்னெடுப்பு, ஆயிரமாயிரமாக பல்கிபெருகி நோக்கத்தை நிறைவு செய்யும்.இது குழந்தைகளிடையே, அறிவியல் பாடப்பிரிவுகளின் மீதான ஆர்வத்தையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தும். அறிவியல் சிந்தனைகளை வளர்க்க உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • விதை உற்பத்தி மையத்தில் எரிவேளாண் அறிவியல் திருவிழா நடந்தது.
    • மத்திய பட்டு வாரிய விஞ்ஞானி டாக்டர் பிரதிஷ் குமார் வரவேற்றார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தளி சாலையில் உள்ள மத்திய எரிபட்டுப்புழு விதை உற்பத்தி மையத்தில் எரிவேளாண் அறிவியல் திருவிழா நடந்தது.

    விழாவிற்கு, பட்டு வளர்ச்சித் துறை மண்டல இணை இயக்குனர் எல். சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மத்திய பட்டு வாரிய விஞ்ஞானி டாக்டர் பிரதிஷ் குமார் வரவேற்றார். இதில், சேலத்தில் உள்ள மண்டல பட்டு வளர்ச்சி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி டாக்டர் தாஹிரா பீவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    மேலும், அத்திமுகம் அதியமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் எஸ். ஸ்ரீதரன், மேட்டுப்பாளையம் பாரஸ்ட் கல்லூரியின் பட்டு வளர்ச்சித் துறை தலைவர் மணிமேகலை, ஓசூர் அரசு கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன், விஞ்ஞானி ஜான்சி லட்சுமி, ஓசூர் பட்டு வளர்ச்சி பயிற்சி நிலைய முதல்வர் வி.பாபு ஆகியோர் விழாவில் பேசினர்.

    இதில், 350-க்கும் மேற்பட்ட எரிபட்டு விவசாயிகள், விஞ்ஞானிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி எரிபட்டு தொடர்பான கண்காட்சியும் நடைபெற்றது. முடிவில், பட்டு வளர்ச்சித் துறை விஞ்ஞானி புனிதவதி நன்றி கூறினார்.

    ×