என் மலர்
உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா
- கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா நடைபெற்றது
- விழாவை ஊராட்சி மன்ற தலைவர் ஆரஞ்சுபாப்பா குணசேகரன் தொடங்கி வைத்தார்
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை ஒன்றியம் காட்டுநாவல் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் அறிவியல் திருவிழா நடைபெற்றது. விழாவை ஊராட்சி மன்ற தலைவர் ஆரஞ்சுபாப்பா குணசேகரன் தொடங்கி வைத்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி லட்சுமி, வார்டு உறுப்பினர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார். விழாவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன் பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவை இல்லம் தேடி கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் ரகமத்துல்லா ஒருங்கிணைத்தார். வானவில் மன்ற கருத்தாளர்கள் வசந்தி, தெய்வீக செல்வி ஆகியோர் மாணவர்களுக்கு எளிய அறிவியல் சோதனை, கணித புதிர்கள், படம் வரைந்து விளக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை செய்து காண்பித்தனர்.
Next Story






