தாரமங்கலம் அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் வானவில் மன்றம்.இந்த நிகழ்ச்சி நேற்று தாரமங்கலம் எம்ஜிஆர் காலனி பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

தாரமங்கலம்:

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் வானவில் மன்றம். இல்லம் தேடி கல்வி மையங்கள் இணைந்து ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா நிகழ்ச்சி தாரமங்கலம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த அரசு பள்ளிகளில் நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி நேற்று தாரமங்கலம் எம்ஜிஆர் காலனி பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார மேற்பார்வையாளர் சங்கர் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிசாமி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் நம் அன்றாட வாழ்வில் அறிவியல் பயன்பாடு குறித்தும், எதையும் நாம் அறிவியல் சிந்தனையோடு செயல்படுத்த வேண்டும் என்றும்,மேலும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு மந்திரமா? தந்திரமா? என்ற மேஜிக் நிகழ்ச்சியும், அறிவியல், கணித செயல்பாடுகள், ஓரிகாமி எனப்படும் காகித மடிப்பு கலையும் மாணவர்களுக்கு கற்று தரப்பட்டது.

கோடை விடுமுறையில் மாணவர்கள் இதுபோன்ற கலைகளை வீட்டில் செய்து பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். இவ்விழாவில் ஆசிரியர் பயிற்றுனர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார் பலர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தை களும். பெற்றோர்களும் அறிவியல் ஆசிரியர்களும் திரளாக கலந்து கொண்ட னர். முடிவில் ஆசிரியர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com