search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எரிவேளாண் அறிவியல் திருவிழா
    X

    எரிவேளாண்மை அறிவியல் திருவிழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.

    எரிவேளாண் அறிவியல் திருவிழா

    • விதை உற்பத்தி மையத்தில் எரிவேளாண் அறிவியல் திருவிழா நடந்தது.
    • மத்திய பட்டு வாரிய விஞ்ஞானி டாக்டர் பிரதிஷ் குமார் வரவேற்றார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தளி சாலையில் உள்ள மத்திய எரிபட்டுப்புழு விதை உற்பத்தி மையத்தில் எரிவேளாண் அறிவியல் திருவிழா நடந்தது.

    விழாவிற்கு, பட்டு வளர்ச்சித் துறை மண்டல இணை இயக்குனர் எல். சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மத்திய பட்டு வாரிய விஞ்ஞானி டாக்டர் பிரதிஷ் குமார் வரவேற்றார். இதில், சேலத்தில் உள்ள மண்டல பட்டு வளர்ச்சி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி டாக்டர் தாஹிரா பீவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    மேலும், அத்திமுகம் அதியமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் எஸ். ஸ்ரீதரன், மேட்டுப்பாளையம் பாரஸ்ட் கல்லூரியின் பட்டு வளர்ச்சித் துறை தலைவர் மணிமேகலை, ஓசூர் அரசு கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன், விஞ்ஞானி ஜான்சி லட்சுமி, ஓசூர் பட்டு வளர்ச்சி பயிற்சி நிலைய முதல்வர் வி.பாபு ஆகியோர் விழாவில் பேசினர்.

    இதில், 350-க்கும் மேற்பட்ட எரிபட்டு விவசாயிகள், விஞ்ஞானிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி எரிபட்டு தொடர்பான கண்காட்சியும் நடைபெற்றது. முடிவில், பட்டு வளர்ச்சித் துறை விஞ்ஞானி புனிதவதி நன்றி கூறினார்.

    Next Story
    ×