search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிகுறிகள்"

    • கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
    • துடைப்பதற்கு தனி டவலை பயன்படுத்த வேண்டும்.

    மழைக்காலம் நெருங்கும் சமயங்களில் அதிகம் பரவும் நோய்த்தொற்றுகளுள் ஒன்று மெட்ராஸ் ஐ. இது ஒரு வைரஸ் தொற்றுக்களால் ஏற்படக்கூடியது. இந்த நோய்த்தொற்று உள்ளவர்களின் கண்கள் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும். கண்களில் உறுத்தல், கண் எரிச்சல், நீர் வடிதல், கண் கூசுதல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும். வைரஸ் தொற்றின் வீரியம் அதிகமாக இருந்தால் கருவிழி பாதிப்படையக்கூடும். கண்களில் வீக்கம், பார்வை மங்குதல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். மெட்ராஸ் ஐ அறிகுறிகள் தென்பட்டால் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து பார்ப்போம்.

    செய்ய வேண்டியவை:

    * மெட்ராஸ் ஐ அறிகுறிகள் வெளிப்படத்தொடங்கினால் கைகளை கண்களுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது. கண்களை அழுத்துவது, மென்மையாக விரல்களால் தடவுவது போன்ற செயல்களை செய்யக்கூடாது.

    * கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அதனை துடைப்பதற்கு தனி டவலை பயன்படுத்த வேண்டும். அதனை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது.

    * கண்களுக்கு போதுமான ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியமானது. அது விரைவில் நோய் தொற்றுவில் இருந்து விடுபட உதவும்.

    * வைட்டமின் ஏ, சி போன்ற ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

    * மெட்ராஸ் ஐ கண்கள் பார்ப்பது மூலம் பரவாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருட்களில் தங்கி இருக்கும் வைரஸ்கள் மூலமே பரவும் என்பதால் சுத்தத்தை தீவிரமாக பேண வேண்டும்.

    * நோய் பாதிப்புக்கு ஆளானவர் கருப்பு வண்ண கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது.

    * குடும்பத்தினரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.

    செய்யக்கூடாதவை:

    குடும்ப உறுப்பினர்களை தொட்டு பேசுவது, கைகளை சுத்தம் செய்யாமல் அவர்கள் கொடுக்கும் பொருட்களை வாங்க கூடாது.

    * சுய மருத்துவம் மேற்கொள்ளக்கூடாது. கண் சொட்டு மருந்துகளையும் உபயோகிக்கக்கூடாது. உரிய பரிசோதனை செய்த பிறகு கண் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் கண் சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    * மருந்து போட்ட பின்பு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

    * டவல்கள், தலையணை உறைகள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் போன்ற பொருட்களின் வழியாகத்தான் ஒரு நபரிடமிருந்து, மற்றொரு நபருக்கு எளிதாக பரவும். அதனால் நோய்த்தொற்றுக்கு ஆளானவர் தனி அறையில் அமர்ந்து பொருட்களை பயன்படுத்துவது நல்லது.

    * குடும்பத்தில் மற்றவர்களுக்கு பரவினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய மருந்தை பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொருவருக்கும் வைரஸ் தொற்றின் தாக்கம் மாறுபடக்கூடும். அதற்கேற்ப பரிந்துரைக்கப்படும் மருந்துகளையே உபயோகப்படுத்த வேண்டும்.

    • சிறுநீரகங்கள் உடலில் பல்வேறு செயல்களை செய்கிறது.
    • சிறுநீரகங்கள் ரத்தத்தை வடிகட்டுகின்றன.

    இந்த காலக்கட்டத்தில் வயது வித்தியாசமின்றி பலருக்கும் சிறுநீரக கோளாறு ஏற்படுகின்றது. சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் நாம் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்களும், உணவுப்பொருட்களும் தான். சிறுநீரகங்கள் உடலில பல்வேறு செயல்களை செய்கிறது. சிறுநீரகங்கள் ஹார்மோன்களை உற்பத்தி செய்வது. ரத்தத்தை சுத்திகரிப்பது, கனிமச்சத்துக்களை உறிஞ்சுவது, சிறுநீரை பிரிப்பது, உடலின் அல்கலைன் அமிலத்தை சீராக பராமரிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

    நமது உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமானவை. சிறுநீரகங்கள் ரத்தத்தை வடிகட்டுகின்றன. செரிமான அமைப்பில் இருந்து வெளியேறும் கழிவுகள் அதிகப்படியான திரவங்களை வெளியேற்றுகின்றன. அதேபோல் இதய நோய்கள், சர்க்கரை நோய், புற்றுநோய் போல சிறுநீரக பிரச்சனைகளும் தீவிரத்தன்மை கொண்டவை.

    தண்ணீர் அவசியம்

    தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் சிறுநீரக இயக்கம் பாதிக்கப்படும். நீங்கள் தினமும் சரியான அளவில் தண்ணீர் குடித்து வருகிறீர்கள் என்பதை சிறுநீர் கொண்டு கண்டுபிடிக்கலாம். உங்களின் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளிவந்தால், நீங்கள் தினமும் சரியான அளவில் தண்ணீர் குடிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

    சிறுநீரை அடக்கி வந்தால், சிறுநீர்ப்பையின் அழுத்தம் அதிகரித்து, அதனால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதோடு, சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுவிடும். ஆகவே சிறுநீர் வந்தால் அதனை அடக்காமல் உடனே வெளியேற்றிவிடுங்கள்.

    உடலுக்கு உப்பு மிகவும் இன்றியமையாதது தான். ஆனால் அந்த உப்பு அளவுக்கு அதிகமானால், அது ரத்த அழுத்தத்தை அதிகரித்து, சிறுநீரகத்தில் அழுத்தத்தை அதிகமாக்கும். வலி நிவாரணி மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டால், அது முதலில் சிறுநீரகத்திற்கு தான் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

    சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி பெரிதும் உதவியாக இருக்கும். உடற்பயிற்சி செய்வதால் சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

    சிறுநீரகத்தில் கால்சியம் அதிகம் தேங்கினால் சிறுநீரக கற்கள் ஏற்படும். எனவே இவற்றைத் தவிர்க்க காய்கறிகள், பீன்ஸ், நட்ஸ், அவகேடோ போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வர வேண்டும்.

    இரவு நேரத்தில் தான் சிறுநீரக திசுக்கள் புதுப்பிக்கப்படும். இரவு நேரத்தில் சரியான தூக்கம் இல்லை என்றாலும் சிறுநீரகமானது நேரடியாக பாதிக்கப்படும்.

    சிறுநீரக பாதிப்பில் அறிகுறிகள்:

    சிறுநீரின் நிறம் மாறினால் அல்லது சிறுநீர் அசாதாரணமாக இருந்தால், அது சிறுநீரக பிரச்சனையாக இருக்க வாய்ப்புள்ளது.

    சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால், கழிவுகளை சுத்தம் செய்யும் செயல்முறை பிரச்சினைக்கு உள்ளாகும். இதனால், அந்த கழிவுகள் ரத்தத்தில் கலந்து, வாயில் துர்நாற்றம் வீசுகிறது.

    சிறுநீரகங்கள் முற்றிலும் சேதமடைந்தால், சுவை மற்றும் பசியின்மை திறன் வெகுவாக குறையும்.

    ரத்தத்தில் உள்ள கழிவுகளின் விளைவாக அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும்.

    சிறுநீரக செயல்பாடு குறைவது ரத்த சிவப்பணு உற்பத்தியை பாதித்து சோர்வு மற்றும் மூளை தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    சிறுநீரகம் அமைந்துள்ள பின் பகுதியில் வலி அதிகமாக இருக்கும், இது சிறுநீரக செயலிழப்புக்கான பொதுவான அறிகுறியாகும்.

    ×