search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்பில் மகேஸ் பொய்யாமொழி"

    • ஆசிரியர்களின் நலன் கருதி வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ.44,042/- கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
    • பள்ளிக் குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தினைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்

    சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஒரு வார காலமாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார் .

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஒரு வார காலமாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களின் நிலையை கருத்தில் கொண்டு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் ஆசிரியர்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள்.

    கடந்த ஒரு வார காலமாக தங்களின் கோரிக்கையினை நிறைவேற்றிட தொடர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றீர்கள். பள்ளிகளில் தற்போது தேர்வு காலமாக இருப்பதனாலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக ஊடகங்களின் வழியாக கருத்துக்கள் தெரிவிப்பதனையும் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் இருந்து விலகி தத்தமது பள்ளிகளுக்கு சென்று கல்விப் பணியாற்றிட வேண்டுமாய் இதன் மூலம் கேட்டுக் கொள்கின்றேன்.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மனதில் ஆசிரியர்கள் என்றும் நீங்கா இடம் பெற்று இருப்பதால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ.44,042/- கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

    தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட 50,000 ஆசிரியர்களின் இன்னல்களை தீர்க்கும் வகையில் நமது கழக அரசு கால முறை ஊதியத்தினை ஒரே நாளில் வழங்கி சிறப்பித்துள்ளது. மேலும், நமது கழக அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளை பல்வேறு நிலையில் தீர்த்து வைத்து ஆசிரியர்களின் நலனுக்காக செயல்படும் அரசாக இருந்து வருகிறது.

    தமிழ்நாடு அரசு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க மூவர் குழு ஒன்றை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.

    சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மூன்று சுற்று கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்தியுள்ளது. மற்ற சங்கப் பிரதிநிதிகளுடன் அடுத்த சுற்று கருத்துக் கேட்பு நடைபெற வேண்டியுள்ளது. அதன் பின்னர் இப்பொருள் சார்ந்து விரிவான அறிக்கையினைப் பெற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    கல்வியாண்டின் இறுதி நிலையில் இருப்பதால் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஆயத்தப்படுத்த வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். கற்றல் கற்பித்தல் மற்றும் தேர்வு பணியில் கவனம் செலுத்தி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக பணிபுரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ஆசிரியர்களாகிய நீங்கள் தான் குழந்தைகளின் இரண்டாவது பெற்றோர்கள் என்பதால் பள்ளிக் குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தினைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • பேராசிரியரும், பேச்சாளருமான பர்வீன் சுல்தான ஆகியோர் உரைநிகழ்த்தினர்.
    • 15 மாவட்டத்திற்குள் வருவதற்கு நீங்கள் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.

    தருமபுரி:

    தருமபுரியில் தனியார் கல்லூரி கலை அரங்கில் தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் கல்வியாளர்கள் சங்கம் இணைந்து ஆசிரியர்களுடன் அன்பின் நம்மில் ஒருவர் என்னும் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஆசிரியர்களுடன் அன்பில் என்ற தலைப்பில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரையாற்றினார். முன்னதாக பல்வேறு தலைப்புகளில் தொடக்க கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன், பள்ளி கல்வி துறை இயக்குனர் அறிவொளி, பேராசிரியரும், பேச்சாளருமான பர்வீன் சுல்தான ஆகியோர் உரைநிகழ்த்தினர். சிறப்புரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில்;-

    தமிழகம் முழுவதும் பள்ளி கல்வி துறை சார்பில் அரசு பள்ளிகளில்கள ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இதற்கெல்லாம் ரோல் மாடல் நமது தலைமை ஆசிரியரான தமிழக முதல்வர் தான். ஆசிரிய பெருமக்கள் இரவு பகல் பாராமல் திட்டமிட்டு உழைத்து வருவதாகவும், ஆனால் கல்வியாண்டு இறுதியில் அந்த பள்ளியில் எவ்வளவு தேர்ச்சி விகிதம் பெற்றது என்பது நமக்கான அளவுகோலாக இருக்க வேண்டும். அதற்காக நீங்கள் அங்கீகாரம் பெறவேண்டுமானல் கல்வியில் பின்தங்கியுள்ள நிலையில் உள்ள தருமபுரி மாவட்டம் தேர்ச்சி சதவிகிதம் மாநில அளவில் 15 மாவட்டத்திற்குள் வருவதற்கு நீங்கள் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.

    தமிழக முதல்வர் பள்ளி கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து சிறப்பாக செயல்பட அறிவுறுத்தி உள்ளார்கள். மேலும் பேசிய அவர் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு வெறும் கல்வியை மட்டும் போதிக்காமல் நாட்டு நடப்பு பற்றியும் சொல்லி தர வேண்டும். கல்வியில் பின்தங்கிய என்ற வார்த்தையே வரக்கூடாது என நினைப்பவர் நமது முதலமைச்சர் என்றும் வளர்ச்சி பெற்ற மாவட்டங்களாக உருவாக்குவதே நமது லட்சியம் என நினைப்பவர் அவர், அதற்கு உதாரணம் தாய்லாந்தின் பிரசித்தி பெற்ற பல்கலை கழகத்தில் இந்தியாவை சார்ந்த 3 மாணவிகள் உயர்கல்வி மேற்படிப்பிற்காக தேர்ந்தெடுக்கபட்ட நிலையில் அதில் தமிழகத்தை சேர்ந்த 2 அரசு பள்ளி மாணவிகள் தேர்தெடுக்கபட்டுள்ளனர் என்பதும், அதில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவி என்பது மிகவும் பெருமைக்குரியது. இதற்கு முழு காரணம் ஆசிரியர்கள் தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி மற்றும் இருபால் ஆசிரியர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

    ×