search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தருமபுரி மாணவி"

    • பேராசிரியரும், பேச்சாளருமான பர்வீன் சுல்தான ஆகியோர் உரைநிகழ்த்தினர்.
    • 15 மாவட்டத்திற்குள் வருவதற்கு நீங்கள் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.

    தருமபுரி:

    தருமபுரியில் தனியார் கல்லூரி கலை அரங்கில் தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் கல்வியாளர்கள் சங்கம் இணைந்து ஆசிரியர்களுடன் அன்பின் நம்மில் ஒருவர் என்னும் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஆசிரியர்களுடன் அன்பில் என்ற தலைப்பில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரையாற்றினார். முன்னதாக பல்வேறு தலைப்புகளில் தொடக்க கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன், பள்ளி கல்வி துறை இயக்குனர் அறிவொளி, பேராசிரியரும், பேச்சாளருமான பர்வீன் சுல்தான ஆகியோர் உரைநிகழ்த்தினர். சிறப்புரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில்;-

    தமிழகம் முழுவதும் பள்ளி கல்வி துறை சார்பில் அரசு பள்ளிகளில்கள ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இதற்கெல்லாம் ரோல் மாடல் நமது தலைமை ஆசிரியரான தமிழக முதல்வர் தான். ஆசிரிய பெருமக்கள் இரவு பகல் பாராமல் திட்டமிட்டு உழைத்து வருவதாகவும், ஆனால் கல்வியாண்டு இறுதியில் அந்த பள்ளியில் எவ்வளவு தேர்ச்சி விகிதம் பெற்றது என்பது நமக்கான அளவுகோலாக இருக்க வேண்டும். அதற்காக நீங்கள் அங்கீகாரம் பெறவேண்டுமானல் கல்வியில் பின்தங்கியுள்ள நிலையில் உள்ள தருமபுரி மாவட்டம் தேர்ச்சி சதவிகிதம் மாநில அளவில் 15 மாவட்டத்திற்குள் வருவதற்கு நீங்கள் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.

    தமிழக முதல்வர் பள்ளி கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து சிறப்பாக செயல்பட அறிவுறுத்தி உள்ளார்கள். மேலும் பேசிய அவர் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு வெறும் கல்வியை மட்டும் போதிக்காமல் நாட்டு நடப்பு பற்றியும் சொல்லி தர வேண்டும். கல்வியில் பின்தங்கிய என்ற வார்த்தையே வரக்கூடாது என நினைப்பவர் நமது முதலமைச்சர் என்றும் வளர்ச்சி பெற்ற மாவட்டங்களாக உருவாக்குவதே நமது லட்சியம் என நினைப்பவர் அவர், அதற்கு உதாரணம் தாய்லாந்தின் பிரசித்தி பெற்ற பல்கலை கழகத்தில் இந்தியாவை சார்ந்த 3 மாணவிகள் உயர்கல்வி மேற்படிப்பிற்காக தேர்ந்தெடுக்கபட்ட நிலையில் அதில் தமிழகத்தை சேர்ந்த 2 அரசு பள்ளி மாணவிகள் தேர்தெடுக்கபட்டுள்ளனர் என்பதும், அதில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவி என்பது மிகவும் பெருமைக்குரியது. இதற்கு முழு காரணம் ஆசிரியர்கள் தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி மற்றும் இருபால் ஆசிரியர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

    ×