search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுஷ்கா சர்மா"

    • நடிகை அனுஷ்கா சர்மாவின் புகைப்படத்தை பூமா இந்தியா நிறுவனம் அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளது.
    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுஷ்கா சர்மா பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.

    ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 70 ஆண்டுகள் பழைமையான பூமா நிறுவனம் விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள், ஆடைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.


    பூமா நிறுவனம் பதிவு

    இதைத்தொடர்ந்து, கடந்த 2020- ஆம் ஆண்டு பூமா ஆடை அணிந்திருந்த புகைப்படம் ஒன்றை பாலிவுட் நடிகையும் , விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை பூமா இந்தியா நிறுவனம் அனுஷ்கா சர்மாவின் அனுமதியின்றி தங்கள் நிறுவனத்தின் இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.


    அனுஷ்கா சர்மா பதிவு

    தனது அனுமதியின்றி புகைப்படங்களை விளம்பரத்துக்காக பயன்படுத்திய பூமா நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை அனுஷ்கா சர்மா பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், " நான் உங்கள் விளம்பர தூதுவராக இல்லாத போது என் புகைப்படத்தை விளம்பரத்துக்காக பயன்படுத்துவதற்கு முன் நீங்கள் என்னிடம் அனுமதி பெற வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். தயவு செய்து அதை நீக்குங்கள்" என்று பதிவிட்டு கண்டன குரல் எழுப்பியுள்ளார்.

    • என் வாழ்க்கையின் மிகச்சிறந்த ஆட்டத்தை நான் இப்போதுதான் பார்க்கிறேன்.
    • கடினமாக ஒரு கட்டத்திற்குப் பிறகு முன்பை விட வலிமையாக அவர் வந்தார்.

    மெல்போர்ன்:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் சூப்பர் 12 சுற்றில் இன்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக விராட் கோலியின் அதிரடி ஆட்டமே காரணம் என்பதால் உலகம் முழுவதும் உள்ள இந்திய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    விராட் கோலி இந்த போட்டியில் 53 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசி 82 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்நிலையில் கோலியின் ஆட்டத்தை அவரது மனைவி அனுஷ்கா சர்மா பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தமது இன்ஸ்ட்ரகிராம் வளைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

    நீங்கள் அழகு! அசத்தும் அழகு!! இன்றிரவு மக்கள் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளீர்கள்! நீங்கள் ஒரு அற்புதமான மனிதர்... என் அன்பே. உங்களின் மன உறுதியும், நம்பிக்கையும் மனதைக் கவரும்! என் வாழ்க்கையின் மிகச்சிறந்த ஆட்டத்தை நான் இப்போதுதான் பார்க்கிறேன்.

    அம்மா ஏன் அறையில் நடனமாடுகிறார், ஏன் கத்துகிறார் என்பதைப் புரிந்துகொள்ள நம் மகள் மிகவும் சிறியவளாக இருந்தபோதிலும், அவளுடைய அப்பா அன்று இரவு தனது சிறந்த இன்னிங்ஸை விளையாடினார் என்பதை அவள் புரிந்துகொள்வாள். கடினமாக இருந்த ஒரு கட்டத்திற்குப் பிறகு முன்பை விட வலிமையாகவும் புத்திசாலித்தனமாகவும் அவர் வெளியே வந்தார். உன்னை நினைத்து பெருமை படுகிறேன். உங்கள் வலிமை மிக சிறந்தது. என்றென்றும் உன்னை நேசிக்கிறேன். இவ்வாறு அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.

    குப்பை கொட்டும் நபரை அனுஷ்கா சர்மா திட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோவில் உள்ள நபர் தற்போது கோலி - அனுஷ்கா தம்பதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
    புதுடெல்லி:

    கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது காதல் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் டெல்லியில் வசித்து வருகிறார். சமீபத்தில் கோலியும் அனுஷ்காவும் தங்கள் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோவை பதிவேற்றி இருந்தனர். அதில் காரில் வந்து குப்பை கொட்டிய இளைஞர் ஒருவரை அனுஷ்கா திட்டுவதாக காட்சி இருந்தது. அவரிடம் ‘‘ஏன் இப்படி குப்பை கொட்டுகிறீர்கள்’’ என்று அனுஷ்கா கோபமாக கேட்டு இருந்தார்.

    இந்த வீடியோவைப் பார்த்து பலரும் அவர்களை பாராட்டினர். இதற்கிடையே, இந்த வீடியோவால் அவர் களுக்கு சிக்கல் 
    ஏற்பட்டுள்ளது. வீடியோவில் அனுஷ்கா திட்டிய வாலிபர் தொழில் அதிபர் ஒருவரின் மகன் அர்ஹான் சிங் என்று தெரியவந்தது.

    அந்த வீடியோவை பார்த்த அர்ஹான் சிங் கோபம் அடைந்தார். தன்னை அனுஷ்கா திட்டும் காட்சியை வெளியிட்டு அவமானப்படுத்தியதாக உணர்ந்தார். இதையடுத்து அவர் தன்னை இருவரும் அவமானப்படுத்தியது ஏன் என்று விளக்கம் கேட்டு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். தொடர்ந்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கும் தாக்கல் செய்துள்ளார்.

    இதுபற்றி அர்ஹான் சிங் கூறுகையில், ‘‘என்னைப் பற்றி கோலியும் அனுஷ்காவும் சமூக வலைதளம் மூலமாக பொதுவில் அவமானப் படுத்தி விட்டார்கள். அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருக்கிறேன். கோர்ட்டு தான் இதில் தீர்ப்பளிக்க வேண்டும்’’ என்றார்.
    ×