search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அந்தியூர் அருகே"

    • கிருஷ்ணகுமார் வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி மரு ந்தை எடுத்து குடித்து விட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் மொடப்பள்ளி தோட்டத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார் (வயது 46). இவரது மனைவி தேன்மொழி. இவர்கள் இருவரும் விவசாய வேலை செய்து வந்தனர்.

    கிருஷ்ணகுமார் உட ல்நிலை பாதிக்கப்பட்டு மரு த்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று உடல் வலி தாங்க முடியாததால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணகுமார் வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி மரு ந்தை எடுத்து குடித்து விட்டார்.

    இதையடுத்து தேன்மொழி அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.

    அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

    பின்னர் இதுகுறித்து அவரது மகன் ஜீவபாரதி (22) அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • ரூ.2 லட்சம் மதிப்புள்ள விவசாய பொருட்கள் எரிந்து சாம்பலானது.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள குருவரெட்டியூர் தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 60). விவசாயி. இவர் தனது நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

    இவரது மனைவி குழந்தையம்மாள். இவர்க ளுக்கு செல்வகுமார், தர்ம லிங்கம் என்ற 2 மகன்கள் உள்ளனர். செல்வகுமார் கோவையில் உள்ள தனியார் நிறுவன த்தில் வேலை செய்து வருகிறார், தர்ம லிங்கம் டிரைவராக உள்ளார். இவர்கள் அனை வரும் அந்த பகுதியில் குடிசை வீட்டில் தங்கி வரு கிறார்கள்.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று செல்வகுமார் கோவைக்கு வேலைக்கு சென்று விட்டார். இதை யடுத்து வீட்டில் இரவு சந்திரசேகரன், குழந்தையம்மாள் தர்மலிங்கம் ஆகியோர் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர்.

    அப்போது வீட்டின் கூரையில் இருந்து புகை வந்தது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

    அதற்குள் வீடு எரிந்து விட்டது. இதில் வீட்டில் வைத்து இருந்த பள்ளி சான்றிதழ்கள், மார்க் சீட், ஆதார் கார்டு மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள விவசாய பொருட்கள் எரிந்து சாம்பலானது.

    இது பற்றி தகவல் கிடை த்ததும் கிராம நிர்வாக அலு வலர் தமிழரசன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் நந்தீஸ்வரன் சம்பவ இடத்து க்கு வந்து பார்வையிட்டனர்.

    இதை தொடர்ந்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மே தினம் முன்னிட்டு மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறைவிடப்பட்டுள்ளது.
    • மது பாட்டிலை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது. தெரிய வந்தது.

    அந்தியூர்,

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில்அந்தியூர் தவிட்டுப்பாளையம் பிரம்மதேசம் மூலக்கடை பள்ளியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மார்க் மதுபான கடை செயல்பட்டு வருகிறது

    இந்த நிலையில் இன்று மே தினம் முன்னிட்டு மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறைவிடப்பட்டுள்ளது இந்த நிலையில் நேற்று கடைகளில் மது பாட்டிலை வாங்கி வைத்து அதிக விலைக்கு விற்று வருவதாக அந்தியூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது

    இதனை அடுத்து அந்தியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

    அப்போதுபள்ளிபாளையம் பகுதியில் சுப்பிரமணியம் (52) என்பவர் கைகளில் வைத்துக்கொண்டு மது பாட்டிலை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது

    அவரை பிடித்து அந்தியூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர் வைத்திருந்த மது பாட்டலையும் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்

    ×