search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக கொடி"

    • தேர்தல் ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தான் கட்சிக் கொடியும், சின்னமும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
    • கட்சிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    கொடநாடு கொலை-கொள்ளை சம்பவம் தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கி தர வேண்டும் என்று வலியுறுத்தி ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் அ.தி.மு.க. கட்சி கொடியை பயன்படுத்தி உள்ளனர்.

    சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகிலும், நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதிலும் அ.தி.மு.க. கட்சி கொடியை ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக எழும்பூர், நுங்கம்பாக்கம் ஆகிய 2 போலீஸ் நிலையங்களில் அ.தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், வட சென்னை தெற்கு மாவட்டச் செயலாளருமான நா.பாலகங்கா எழும்பூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அ.தி.மு.க. தான் அங்கீகரிக்கப்பட்ட கழகம் என்று நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் கழகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது.

    அ.தி.மு.க.வில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தி சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை உண்டாக்கி வருகிறார். எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் நடத்திய நிகழ்ச்சியில் எங்கள் கழக கொடியை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

    இவ்வாறு செய்வதின் மூலம் கட்சிகளிடையே பகையும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கோர்ட்டுக்கு எதிரான நடவடிக்கையையும் அவர்கள் மேற்கொண்டு உள்ளனர். எனவே நிகழ்ச்சியை நடத்திய ஜே.சி.டி. பிரபாகரன், செந்தமிழன், என்.எம்.பாபு, ராமஜெயம், ராயபுரம் சிவா ஆகியோர் மீதும் இவர்களை தூண்டி விட்ட ஓ.பன்னீர்செல்வம் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பகுதி செயலாளர்கள் சம்பத்குமார், கன்னியப்பன், மாரிமுத்து ஆகியோரும் உடன் இருந்தனர்.

    ஆயிரம் விளக்கு (தெற்கு) பகுதி அ.தி.மு.க. செயலாளரான எம்.பாலச்சந்திரன். நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நேற்று நடத்திய போராட்டத்தில் அ.தி.மு.க. கட்சிக் கொடியை பயன்படுத்தி உள்ளனர்.

    தேர்தல் ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தான் கட்சிக் கொடியும், சின்னமும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    கட்சிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தி வருகிறார்கள். இதை தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் புகாரில் கூறி உள்ளார்.

    • ஓ.பி.எஸ். நடத்தும் மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் அதற்குள் தடைவாங்க முடியுமா? என்பது சந்தேகம் தான்.
    • ஓ.பி.எஸ். அணியினர் அ.தி.மு.க. கொடியை நிரந்தரமாக பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் முறையிட முடிவு செய்துள்ளோம் என்று அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அதனை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து தனது செல்வாக்கு என்ன? என்பதை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தள்ளப்பட்டுள்ளார்.

    இதற்காக திருச்சியில் வருகிற 24-ந்தேதி ஆதரவாளர்களை திரட்டி பிரமாண்டமான முறையில் மாநாட்டை நடத்த ஓ.பி.எஸ். முடிவு செய்துள்ளார். இந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஆதரவாளர்களை திரட்ட ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தயாராகி வருகிறார்கள்.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தன்னை அ.தி. மு.க. ஒருங்கிணைப் பாளர் என்று கூறிக்கொண்டே செய்தி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். திருச்சி மாநாட்டிலும் அ.தி.மு.க. பெயர் மற்றும் கொடியை பயன்படுத்த அவர் முடிவு செய்துள்ளார்.

    இதனை தடுத்து நிறுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக அதிரடி காட்ட தயாராகி வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க. கொடியையோ, பெயரையோ பயன்படுத்தக் கூடாது என்று கோர்ட்டில் வழக்கு தொடர எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.

    ஓ.பி.எஸ். நடத்தும் மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் அதற்குள் தடைவாங்க முடியுமா? என்பது சந்தேகம் தான். ஒருவேளை அதற்குள் தடை கிடைக்காவிட்டால் அடுத்தகட்டமாக ஓ.பி.எஸ். அணியினர் அ.தி.மு.க. கொடியை நிரந்தரமாக பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் முறையிட முடிவு செய்துள்ளோம் என்று அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    இதையெல்லாம் மீறி மாநாட்டில் அ.தி.மு.க. கொடியை ஓ.பி.எஸ். பயன் படுத்தினால் போலீசில் புகார் அளிக்கவும் முடிவு செய்திருப்பதாக அ.தி.மு.க.வினர் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க. கொடியையோ, பெயரையோ ஓ.பி.எஸ். பயன்படுத்தக்கூடாது என்கிற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று தடை விதிக்கப்படவே 100 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்று அ.தி.மு.க. மூத்த வக்கீல் ஒருவர் கூறினார். ஒருவேளை அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டால் ஓ.பி.எஸ்.சின் அரசியல் எதிர்காலம் என்ன? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி மாநாட்டில் ஓ.பி.எஸ். எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஈரோடு இடைத்தேர்தலில் தற்காலிகமாக இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது போல் இப்போதும் சின்னம் வாங்கப்பட்டு உள்ளது.
    • அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் தகுதியோ அதிகாரமோ கிடையாது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அளித்துள்ள நிலையில் இரட்டை இலை சின்னமும் அவரது தரப்புக்கு உறுதியாகி உள்ளதால் அ.தி.மு.க.வினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

    இது ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு பெரும் பின்னடைவு என்று தொண்டர்கள் கருதுகின்றனர். இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது:-

    தேர்தல் கமிஷன் இப்போது இருக்கின்ற சூழலை வைத்து ஒரு முடிவை எடுத்து அறிவித்து உள்ளனர். அவர்களாகவே எந்த முடிவையும் எடுக்கவில்லை. கோர்ட்டில் வழக்கு உள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்காலிகமாக இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது போல் இப்போதும் சின்னம் வாங்கப்பட்டு உள்ளது. நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு அனைத்தும் கட்டுப்பட்டது என்று தெரிவித்துள்ளனர். எனவே இதை ஒரு வெற்றியாக அவர்கள் கருத முடியாது.

    ஜெயலலிதா நிரந்தர பொதுச்செயலாளர் என்று போட்டார்கள். இப்போது அதை நீக்கிவிட்டு பொதுச்செயலாளர் என்று கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

    நீதிமன்றங்களின் நெடிய படிக்கட்டுகளை ஏறி கால்கள் தளர்ந்துவிட்டன. அதனால்தான் மக்கள் மன்றத்தை நோக்கி ஏப்ரல் 24-ந் தேதி திருச்சியில் மாநாடு நடத்துகிறோம்.

    இந்த மாநாட்டில் அ.தி.மு.க. கட்சி கொடியை பயன்படுத்துவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எல்லா வழக்குகளும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் தகுதியோ அதிகாரமோ கிடையாது.

    தேர்தல் ஆணையத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக இல்லை என்பதை பின்னடைவாக நாங்கள் கருதவில்லை. இறுதி வெற்றி எங்களுக்கு தான் கிடைக்கும்.

    2024-க்குள் அனைவரையும் ஒன்று சேர்த்து விடுவேன் என்று சசிகலா நம்புகிறார். அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×