என் மலர்
நீங்கள் தேடியது "ADMK"
- எம்.ஜி.ஆர் தொண்டர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அதே புள்ளியில் தான் பூத்திருக்கிறது இன்றைய வெற்றிப் படை.
- அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மையார் ஆகியோரை மறந்து விட்டீர்களா?
தமிழக வெற்றிக் கழக கட்சியின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எம்.ஜி.ஆர் தொண்டர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அதே புள்ளியில் தான் பூத்திருக்கிறது இன்றைய வெற்றிப் படை. அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மையார் ஆகியோரை மறந்து விட்டீர்களா?
அன்று உண்மையை உரக்கப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும்—இன்று தீயசக்தி தி.மு.க-வின் திடீர் ஊதுகுழல் போலத் தான் பேசியதையே மாற்றிப் பேசும் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் எத்தனை வித்தியாசங்கள்? இந்த மாற்றத்தின் பெயர்தான் 'தடுமாற்றம்'!
மக்கள் தலைவர் யார் என்பது மக்களுக்குத் தெரியும். தெரியாதது போல நடிக்கும் உங்களுக்கும் அது தெரியும் என்பது எங்களுக்குத் தெரியும். மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் ஓங்கி வளர்ந்துள்ள ஒரே தலைவர், எங்கள் வெற்றித் தலைவர் விஜய் அவர்கள் மட்டும்தான்! இதை காலம் விரைவில் புரிய வைக்கும் என கூறியுள்ளார்.
- யாருக்காக 41 உயிர்கள் போனது? அவர் என்ன செய்திருக்க வேண்டும்.
- யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை, ஒரு அரசாங்கத்தை நடத்த அனுபவம் தேவை.
விஜய் சிறந்த நடிகர், ஆனால் சிறந்த அரசியல்வாதி நாங்கள் தான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர்," எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்துவிட்டதாக விஜய் கூறுகிறார். யாருக்காக அவர் வந்தார்? என கரூர் துயர சம்பவத்தை சுட்டிக்காட்டி இபிஎஸ் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
இன்று 41 உயிர்களை இழந்துவிட்டோம், யாருக்காக 41 உயிர்கள் போனது? அவர் என்ன செய்திருக்க வேண்டும்
விஜய் பேச்சை கேட்பதற்காக வந்த கூட்டம்; நேரடியாக அங்கு சென்று பார்த்திருக்க வேண்டும், அதைக் கூட அவர் செய்யவில்லை
நாங்கள் நேரடியாக ஓடிச்சென்று ஆறுதல் கூறினோம்; ஆறுதல் கூட சொல்ல முடியாத விஜய் கட்சி நடத்தி என்ன பயன்?
விஜய் சிறந்த நடிகராக இருக்கலாம்; ஆனால் நாங்கள் சிறந்த அரசியல்வாதிகள்.
யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை, ஒரு அரசாங்கத்தை நடத்த அனுபவம் தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.
- கட்சிக்கு துரோகம் இழைத்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்.
- தேமுதிகவுடன் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.
ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இணைய நான் தயார் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்த நிலையில் அதனை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர்,"ஓபிஎஸ்-ஐ கட்சியை விட்டு நீக்கும் முடிவு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்பதால் அவரை சேர்க்க முடியாது.
கட்சிக்கு துரோகம் இழைத்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்.
ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கும் முடிவு அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்டது. இன்னும் சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இறுதியான பின்னர் தெரிவிக்கப்படும்.
தேமுதிகவுடன் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை" என்றார்.
- பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்த்து வருவது வெட்கக்கேடானது.
- அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும் கூட.
சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் 22 வயது பெண்ணை 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில் பணிக்கு சேர்ந்த பெண் ஒருவரை, கல்லூரி வளாகத்திலேயே வைத்து கேண்டின் மாஸ்டர் மற்றும் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது.
தமிழ்நாட்டில் நாள்தோறும் கொடுரமான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இந்த பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்த்து வருவது வெட்கக்கேடானது.
சென்னையில் நேற்று பீகாரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவரும் அவரது கணவரும் குழந்தையும் கொடூரமாக கொல்லப்பட்ட, இந்தியாவை பதைபதைக்க செய்த சம்பவத்தின் பதட்டமே இன்னும் ஓய்வுறாத நிலையில்,
இன்று மீண்டும் ஒரு பெண், அரசுக் கல்லூரியின் கேண்டினில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளாரே, என்பது குறித்து கேட்டால் அப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதே தெரியாது என்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள்.
அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும் கூட.
ஆயிரம் முறை நான் மீண்டும் மீண்டும் கூறிவருவதை போல திமுக ஆட்சியில் தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிப்போயுள்ளதையே இந்த தொடர் சம்பவங்கள் அழுத்தமாக நிரூபித்துள்ளது. இனியும் பொம்மை போன்று செயல்படாது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த விடியா அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2026 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெறும்.
- அ.தி.மு.க. ஆட்சியில் கடன் அதிகமாகி விட்டது என தி.மு.க. கூறுவது அனைத்தும் பொய்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
* தி.மு.க.வை பற்றி மக்கள் நன்றாக தெரிந்து கொண்டார்கள். வரும் தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்.
* 2026 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெறும்.
* அ.தி.மு.க. ஆட்சியில் கடன் அதிகமாகி விட்டது என தி.மு.க. கூறுவது அனைத்தும் பொய்.
* மக்களின் வரிப்பணத்தில் பலகோடி ரூபாய் விளம்பரம் செய்யப்படுகிறது.
* உதயநிதி முதலமைச்சராக வருவது ஒருபோதும் நடக்காது.
* வரும் சட்டசபை தேர்தல் தான் தி.மு.க.விற்கு இறுதித்தேர்தல், மக்கள் சரியான தண்டனை கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசியலை அரசியல் ரீதியாக முதலமைச்சர் பேச வேண்டும்.
- தி.மு.க. ஆட்சியின் அவலங்கள் குறித்து நாங்கள் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிக்காமல் அவதூறு பரப்புவதா?
சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
* மக்கள் பிரச்சனைகளை சட்டசபையில் எழுப்பினால் அதற்கு சரியான பதில் இல்லை.
* காலை பார்த்தால் தான் சரியான பாதையில் பயணிக்க முடியும்.
* அரசியலை அரசியல் ரீதியாக முதலமைச்சர் பேச வேண்டும்.
* தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது.
* தி.மு.க. ஆட்சியில் விலைவாசி பன்மடங்கு அதிகரித்துள்ளது. கடனாளி என்ற பட்டம் தான் மக்களுக்கு கிடைத்துள்ளது.
* தி.மு.க. ஆட்சியின் அவலங்கள் குறித்து நாங்கள் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிக்காமல் அவதூறு பரப்புவதா?
இவ்வாறு அவர் கூறினார்.
மேலே பார்க்காமல் கால்களை மட்டுமே பார்த்தால் சூரியன் எப்படித் தெரியும்? என எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அரசு ஊழியர்களையே ஏமாற்றிய கட்சிதான் தி.மு.க.
- சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் நான்கரை ஆண்டுகளில் ஊழல் நடந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
* நான்கில் ஒரு பங்கு வாக்குறுதிகளை கூட தி.மு.க. நிறைவேற்றவில்லை.
* ஆட்சிக்கு வந்தவுடன் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை தி.மு.க. மறந்துவிடும்.
* மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தை தான் புதிய பெயரில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.
* அரசு ஊழியர்களையே ஏமாற்றிய கட்சிதான் தி.மு.க.
* 100 நாள் வேலை திட்டம் ரத்து என தவறான தகவலை பரப்பி வருகிறது தி.மு.க.
* 100 நாள் வேலை திட்டத்தில் 125 நாட்கள் வேலை என அதிகரிக்கப்பட்டுள்ளது.
* அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும்.
* எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெற்று கொண்டிருக்கிறது.
* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது.
* சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் நான்கரை ஆண்டுகளில் ஊழல் நடந்துள்ளது.
* அமலாக்கத்துறை கடிதம் எழுதியும் ஊழல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவில்லை.
* நகர பேருந்தில் ஆண்களும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம்.
* அ.தி.மு.க. கொண்டு வந்த அம்மா மினி கிளீனிக் திட்டத்தை தி.மு.க. முடக்கி விட்டது.
* அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அம்மா மினி கிளீனிக் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.
* எந்தெந்த வகையில் ஊழல் செய்ய முடியுமோ, அப்படி எல்லாம் ஊழல் செய்கிறார்கள்.
* 2011-ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் கூட தி.மு.க. அமர முடியவில்லை.
* 2011 முதல் 2021 வரை பல தேர்தலில் தோல்வி கண்ட கட்சி தி.மு.க.
* தி.மு.க.வின் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக வெற்றிக் கழகத்திற்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.
- ஒரு காலத்திலும் எங்களுக்குள் பிளவு ஏற்படாது.
தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:-
தவெக vs திமுக என்பதில் ஃபைனலுக்கு வந்துவிட்டோம், அதிமுகவை அட்டாக் செய்ய வேண்டாம்.
தலைவர் சொன்னதைப்போல தவெக தொண்டர்கள் திமுகவை மட்டும் ஃபோகஸ் செய்யுங்கள், அதிமுகவை அட்டாக் செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை; அக்கட்சி எந்தக் கூட்டணி உருவாக்கினால் நமக்கென்ன?
இன்று தமிழக வெற்றிக் கழகத்திற்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.
வேங்கை வயல், வடகாடு, மதுரையில் கொடிக்கம்பம் ஏற்றும் சர்ச்சை உள்ளிட்டவையில் திருமாவளவனுக்கு இந்த ஆட்சியில் என்ன மரியாதை கொடுக்கப்பட்டது.
திருமாவின் மனசு எனக்கு தெரியும், என்னுடைய மனசு திருமாவுக்கு தெரியும், ஒரு காலத்திலும் எங்களுக்குள் பிளவு ஏற்படாது .
பாஜகவின் பி டீம் என்று தவெகவை திமுகவினர் கூறுகின்றனர்; பாஜகவின் பி டீம் திமுகதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2019-ல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கான மசோதாவை ஆதரித்தது அதிமுக.
- இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்களின் பட்டியல் மிக நீளமானது.
கும்பகோணம் அருகே தாராசுரம் பைபாஸ் மைதானத்தில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிக் லீக் மாநாட்டில் முதல்வர் உரையாற்றுகிறார்.
சிறுபான்மை உரிமையை காப்போம் எனும் தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
அப்போது, எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அவர் கூறியதாவது:-
இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்களின் பட்டியல் மிக நீளமானது. அவருக்கு தெரிந்தது காலில் விழுவதும், காலை வாருவதும்தான்.
இஸ்லாமியர்களை காக்கக்கூடிய காவல் அரணாக திமுக ஆட்சி இருப்பதால்தான் தமிழ்நாட்டில் உணவு அரசியல், கும்பல் வன்முறை தலை எடுக்காமல் இருக்கிறது.
2019-ல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கான மசோதாவை ஆதரித்தது அதிமுக.
இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்களின் பட்டியல் மிக நீளமானது.
அதிமுக ஆதரவால்தான் குடியுரிமை திருத்த சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கொலைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்.
- 2 வயது குழந்தையை தரையில் அடித்து கொன்றிருப்பதும் கொடூரத்தின் உச்சம்.
சென்னை தரமணியில் பீகார் மாநில இளைஞர், அவரது மனைவி, குழந்தை கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் பீகார் மாநில இளைஞர் கவுரவ் குமார் , அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகிய மூவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மதுபோதையில் வெறிபிடித்த கும்பல் ஒன்று கவுரின் மனைவியை வன்கொடுமை செய்து கொன்றிருப்பதும், அதை தடுக்க வந்த கணவரை கொலை செய்திருப்பதும், அதனைத் தொடர்ந்து அவர்களது
2 வயது குழந்தையை தரையில் அடித்து கொன்றிருப்பதும் கொடூரத்தின் உச்சம்,
சில நாட்களுக்கு முன்பு தான் திருத்தணியில் மகாராஷ்டிரா மாநில இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பேரலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது தமிழ்நாட்டில் ஒரு வடமாநில குடும்பம் மொத்தமாக கொல்லப்பட்டிருப்பது,"வந்தாரை வாழ வைக்கும்" தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நாடு முழுவதும் சந்தி சிரிக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
மனித குலத்திற்கே இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றுள்ள இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வன்மையாக கண்டிப்பதுடன், யாருக்கும் பாதுகாப்பற்ற, மோசமான ஆட்சியை நடத்தி வரும் விடியா திமுக அரசிற்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன், தமிழ்நாட்டில் பெண்களுக்கும் வெளி மாநிலத்தவருக்கும் பாதுகாப்பு கேடயமாக திமுக அரசு திகழ்வதை போல் வாய்ச்சவடால் பேசும் பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்த கொலைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார் பொம்மை முதல்வர்?.
இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மகாராஷ்டிராவின் அரசியலுக்கும், மக்களுக்கும் ஒரு பெரிய இழப்பாகும்.
- அவரது குடும்பத்தினர், கட்சியினர் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகாராஷ்டிர துணை முதல்-மந்திரி அஜித் பவார் மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மகாராஷ்டிராவின் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவருமான அஜித் பவார், ஒரு துயரமான விபத்தில் காலமானார். இது மகாராஷ்டிராவின் அரசியலுக்கும், மக்களுக்கும் ஒரு பெரிய இழப்பாகும்.
பரந்த நிர்வாக அனுபவம் மற்றும் தீர்க்கமான தலைமைத்துவத்திற்கு பெயர் பெற்ற அஜித் பவாரின் அகால மறைவு நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டுச் செல்கிறது.
அவரது குடும்பத்தினர், கட்சியினர் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா நித்திய சாந்தியடையட்டும் என்று கூறியுள்ளார்.
- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவசரப்பட்டு முடிவு எடுத்து விட்டார்.
- தமிழகத்தில் கூட்டணி விவகாரங்களில் பா.ஜ.க. தலைமை எப்போதும் தலையிடுவதில்லை.
மதுரை:
மதுரையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இணைந்ததற்கு மகிழ்ச்சி. அவர் எதிர்பார்த்தபடியே நல்ல முடிவை எடுத்துள்ளார். இதனால் கூட்டணி பலம் அதிகரிக்கும். ஓ.பன்னீர் செல்வம் எங்களுடன் தான் இருப்பார். வேறு பாதையில் செல்ல மாட்டார் என நினைக்கிறேன். நிச்சயமாக அவர் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து செயலாற்றுவார்.
2-வது முறையாக தி.மு.க. ஆட்சி கட்டிலில் அமர்ந்தது கிடையாது. இதில் கருணாநிதி பலமுறை முயற்சி செய்து தோல்வியடைந்தார். எனவே வருகிற தேர்தலில் அதற்கு சாத்தியம் இல்லை.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவசரப்பட்டு முடிவு எடுத்து விட்டார். த.வெ.க.வில் இணைந்து தவறான பாதையில் சென்று விட்டார். அவரை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கூட்டணி விவகாரங்களில் பா.ஜ.க. தலைமை எப்போதும் தலையிடுவதில்லை. இங்கு கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிசாமி தான். அவருடைய தலைமையில் தான் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்றார்.






