search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரி ஆய்வு"

    • பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது
    • பணிகள் குறித்து ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் தீயணைப்பு நிலையத்தில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் எஸ்.பழனி தலைமையில் வருடாந்திர ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வின் போது தீ விபத்து மற்றும் தடுப்பு பணிகளுக்கான பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது.

    குடியாத்தம் தீயணைப்பு நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் விவரங்கள் அடங்கிய பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து இயற்கை இடற்பாடுகள் மற்றும் பேரிடர் காலங்களில் மீட்பு பணியின் போது கொண்டு செல்லப்படும் உபகரணங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    அந்த உபகரணங்கள் சரியானபடி உள்ளதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது மேலும் தீ தடுப்பு கருவிகள் சரியான முறையில் இயங்குகின்றதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது இந்த ஆய்வின் போது குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் கே. லோகநாதன் உடன் இருந்தார்.

    முன்னதாக குடியாத்தம் தீயணைப்பு வீரர்களின் தீ தடுப்பு பணிகள் குறித்து ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.

    • ரெயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படுகிறது
    • மாற்று பாதை அமைகிறது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் ரெயில் நிலையம் அருகே கே.பந்தாரப்பள்ளி பகுதியில் அரசனப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ரெயில்வே கேட் எண் 94 நிரந்தரமாக மூடப்படுகிறது.

    இதனால் அப்பகுதியில் வசித்து வரும் பாலன் வட்டம் பொது மக்களுக்கு மாற்று பாதை வழியாக கீழ் தரைப்பாலம் அமைப்பதற்கான இடத்தை திருப்பத்தூர் கோட்டாட்சியர் லட்சுமி நேற்று இடத்தை திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது நாட்டறம்பள்ளி தாசில்தார் த.குமார், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சந்தீப், உதவி கோட்ட பொறியாளர் விக்ரம் கஹானோலியா, மற்றும் பெங்களூர் கோட்டம் பாலன் வட்டம் பகுதி பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பருவ மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து சோதனை
    • குடிசைகளை அகற்றி மாற்று இடம் வழங்க உத்தரவு

    வந்தவாசி:

    வந்தவாசி பகுதியில் பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்து உதவி கலெக்டர் அனாமிகா ஆய்வு மேற்கொண்டார்.

    இன்னும் சில நாட்களில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக வந்தவாசி எள்ளுப்பாறை, சவுரியார் பாளையம், பிருதூர் உள்ளிட்ட தாழ்வான பகுதியில் மக்கள் வசிக்கும் இடங்களை பார்வையிட்டு அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் நீர்நிலையில் கட்டப்பட்டுள்ள குடிசைகளை உடனடியாக அகற்று மாறும் அவர்களுக்கு மாற்று இடம் வழங்க உத்தரவிட்டார். மழைக்காலங்களில் குடிசைவாழ் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்தார்.

    தாசில்தார் முருகானந்தம், நகராட்சி கமிஷனர் மங்கையர்கரசன், நகரத் தலைவர் ஜலால், வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் கிருபானந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • காட்டுப்புத்தூர் பகுதிகளில் உள்ள பொது கழிப்பிடங்களில் அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பள்ளிகள் மற்றும் அரசு அலுவவலகங்கள் ஆகியவற்றில் உள்ள கழிப்பிடங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    திருச்சி :

    பேரூராட்சிகளின் ஆணையர் டாக்டர்.ஆர்.செல்வராஜ், ஐ.ஏ.எஸ்.மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.பிரதீப்குமார், ஆகியோரின் அறிவுரைகளின்படி, திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி வார்டு எண். 15- காமாட்சியம்மன் கோவில் தெருவில் உள்ள சமுதாய கழிப்பிடம் மற்றும் வார்டு எண்.06, தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள ஆண்கள் கழிப்பிடம் ஆகியவற்றை செயல்அலுவலர் ச.சாகுல் அமீதுஆய்வுமேற்கொண்டார்.

    மேலும், பேருந்துநிலையம் மற்றும் பாரதியார் தெருவில் உள்ள 2பொதுகழிப்பிடங்கள், அனைத்து வார்டுகளிலும் உள்ள 16 -சமுதாய கழிப்பிடங்கள்

    மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடம் ஆகியவற்றில் உள்ள கழிவுநீர் சேகரிக்கும் தொட்டிகளை பாதுக்காப்பான முறையில் மூடிவைத்திடவும், கழிவுநீர் சேகரிக்கும் தொட்டிகளை சுற்றி உள்ள இடங்களில் முட்செடிகள் மற்றும் புல்பூண்டுகளை அகற்றி சுத்தமாக வைத்து பராமரித்து பாதுகாத்திட 3 -குழுக்கள் அமைத்து ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும், காட்டுப்புத்தூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 3000-க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவவலகங்கள் ஆகியவற்றில் உள்ள கழிப்பிடங்களை தூய்மையாக பராமரித்தும் மற்றும் கழிவுநீர் சேகரிக்கும் தொட்டிகளை (செப்டிக் டேங்க்) உரிமையாளர்கள் மூடி பாதுகாக்காவும், பழுதடைந்த நிலையில் உள்ள கழிவுநீர் தொட்டிகளை ஒரு வார காலத்திற்குள் சீரமைத்து பேரூராட்சி பணியாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளும் போது முறையாக பராமரித்து பேரூராட்சிக்கு ஒத்துழைப்பு நல்க இதன்வழி கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வின் போது பேரூராட்சி மன்ற தலைவர் சு.சங்கீதா, துணைத்தலைவர் சி.சுதா, இளநிலை உதவியாளர்கள் பாரதியார், இராஜேந்திரன், துப்புரவு மேற்பார்வையாளர் (பொ) கண்ணன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • விரைவாக பணிகளை முடிக்க உத்தரவு
    • அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்

    போளூர், செப்.24-

    போளூர் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று அரசின் முதன்மைச் செயலாளர் வணிகவரி ஆணையர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலரமான தீரஜ் குமார் ஆய்வு செய்தார்.

    அப்போது பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை நிராகரிக்கப்படும் போது அதன் காரணத்தை கணினியில் பதிவு செய்கிறீர்களா இல்லையா என்று தாசில்தார் கேட்டறிந்தார்.

    அவருடன் திருவண்ணாமலை கலெக்டர் முகேஷ் மற்றும் டி ஆர் ஓ டாக்டர் பிரியதர்ஷினி ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி ஏ பி ஆர் ஓ ஆசைத்தம்பி ஆகியோர் உடன் இருந்தனர்.

    அதே போல் அங்கிருந்து சென்று பேரூராட்சியின் மார்க்கெட் வணிக வளாகம் கட்டும் பணியை பார்வையிட்டார். அப்போது எத்தனை கடைகள் கட்டப்படுகின்றன. இதில் எத்தனை காய் காய்கறி கடைகள் மற்றும் இதர கடைகள் எத்தனை என்று கேட்டறிந்தார் இந்த பணியை எவ்வளவு நாளில் முடிப்பீர்கள் என்றும் கேட்டிருந்தார்.

    அப்போது கலெக்டர் முகேஷ் மண்டல அலுவலர் ஜிஜா பாய், பேரூராட்சி செயல் அலுவலர் முகமது ரஜ்வான் பேரூராட்சி தலைவர் ராணி சண்முகம், துணை தலைவர் சாந்தி நடராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ் குமார் போளூர் பேரூராட்சியின் உறுப்பினர் மல்லிகா கிருஷ்ணமூர்த்தி, ஜோதி குமரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • உணவின் தரம் குறித்து சோதனை
    • மாணவ மாணவிகளின் அறிவுத்திறனை சோதித்துப் பார்த்தார்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 6 தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 661 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளர் சம்பத் நேற்று ஆற்காடு தோப்புக்கானா நகராட்சி வடக்கு தொடக்கப் பள்ளிக்கு சென்று உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.

    பின்னர் ஆற்காடு ஒன்றியம் முப்பதுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் மூலம் கற்பித்தல் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவ மாணவிகளின் அறிவுத்திறனை சோதித்துப் பார்த்தார்.

    இதனைத்தொடர்ந்து பொது சுகாதாரத்துறை மூலமாக மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வீட்டிற்குச் சென்று முறையாக மருந்துகள் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிறதா மருத்துவர்கள் வீட்டிற்கு வந்து பரிசோதித்த பின்னர் மருந்துகள் வழங்கப் படுகிறதா என்பதையும் கேட்டறிந்தார்.

    அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, தாசில்தார் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் நடை–பெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவுடன் நேரில் சென்று பார்வை–யிட்டு ஆய்வு செய்தார்
    • பெரம்பலூர் தொழிற்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.

     பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் குன்னம் தாலுகா ஓலைப்பாடி, முருக்கன்குடி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆயத்த தையல் தொழிற்சாலையையும், பெரம்பலூர் தொழிற்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார். முன்னதாக அவர் பெரம்பலூர் அமோனைட்ஸ் மையத்தையும்,

    முத்துநகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்திற்காக கட்டப்பட்டுள்ள நவீன சமையல் கூடத்தையும், குன்னம் தாலுகா பரவாய் சமத்துவபுரத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, மகளிர் திட்ட அலுவலர் ராஜ்மோகன், உதவி மகளிர் திட்ட அலுவலர் மகேஸ்வரன், மாவட்ட தொழில் மைய மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • மாணவர்கள் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார்
    • 134 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர், ஊராட்சி ஒன்றியம் பெரிய கொழப்பலூர், கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 134 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை மூலம் 1 முதல் 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு என்னும், எழுத்தும், என்ற திட்டத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்க வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதை பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், நேரில் சென்று எண்ணும், எழுத்தும், திட்டத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கேள்வி கேட்டு மாணவர்களின் கற்றல் திறன் குறித்த ஆய்வு செய்தார்.

    அப்போது 1 முதல் 5 வரை திருக்குறள் வாசித்த மாணவன், மற்றும் தூய்மை, சுகாதாரம், குறித்து கேள்வி கேட்கப்பட்டு இதில் சரியான பதில் அளித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆய்வின் போது பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், உடன் இருந்தனர்.

    • 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம்
    • திட்டத்தின் பலன்களை விரிவுப்படுத்த ஆலோசனை

    வேலூர்:

    வேலூர் கூட்டு றவு சர்க்கரை ஆலை மூலம் செயல்படுத்தப்படும் கரும்பு மேம்பாட்டுத் திட்டப்பணிகளை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஸ்டீபன் ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

    வேளாண்மை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மூலம் , கரும்பு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும், நடைமுறையில் கரும்பு கரணைகளை வெட்டிப் பயிரிடும் முறையால் ஏக்கருக்கு ரூ.12,000 அளவுக்கு, அதாவது 4 டன் கரும்புகள் செலவாகிறது. இதைத் தவிர்க்க கரும்பு பருசீவல் நாற்றுகள் தயார் செய்து அளிக் கப்படுகிறது.

    இதன் மூலம் ஒரு டன் கரும்பு மூலம் ரூ.3,500 செலவில் 5,000 நாற்றுகள் உற்பத்தி செய்து அளிக்கப்படுகிறது. தவிர, கரும்பு ஆராய்ச்சி பனைகளில் இருந்து ஏக்கரைக்கு 60 டன் கரும்பு விளைச்சலை அதிகரிக்க கூடிய புதிய கரும்பு ரகங்களும் விவசாயிகளுக்கு மானிய விலையில் அளிக்கப்படுகின்றன.

    இந்த திட்டங்கள் குறித்தும், அதனால் கிடைக்கப்பெறும் பயன்பாடுகள் குறித்தும் வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஸ்டீபன் ஜெயக்குமார் கள ஆய்வு மேற்கொண்டார். காட்பாடி வட்டாரத்துக்குட் பட்ட ஏரந்தாங்கல் கிராமத்தில் உள்ள கரும்பு விவசாயிகளின் தோட்டங்களில் அவர் நேரில் பார்வையிட்டு திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்ததுடன், திட்டத்தின் பயன்களை மேலும் விரிவுப்படுத்த ஆலோசனைகள் வழங்கினார்.

    ஆய்வின் போது, துணை இயக் குநர் (சொட்டுநீர் பாசனம் ) ஆர் . விஸ்வநாதன், காட்பாடி வட்டார வேளாண்மை அலுவலர் முருகன், சர்க்கரை ஆலை கரும்பு மேம்பாட்டு அலுவலர் மு.வேலாயுதம், ஆலைப்பகுதி கரும்பு அலுவலர் எம்.சக்திவேல், கரும்பு மேம்பாட்டு உதவியாளர் சி.ஆப்ரகாம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • ஒரு லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • 7 ஆயிரம் ஏக்கர் கரும்பு பதிவு செய்யவேண்டும் என்று குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மடத்துக்குளம் :

    உடுமலை கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு அரவைக்கு 3 ஆயிரத்து 10 ஏக்கர் கரும்பு பதிவு செய்து ஒரு லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் ஆலையில் அரவை துவங்கியது.இந்நிலையில் ரெட்டிபாளையம் விவசாயிகள், கொமரலிங்கம் சர்க்கரை கட்டுப்பாட்டு பகுதியில் அலுவலர்கள் நடவடிக்கையால் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். கரும்பு வெட்ட முன்னுரிமை பட்டியலை பின்பற்றவில்லை.

    குறித்த நேரத்தில்அறுவடை செய்யாமல், கரும்பு சக்கையாக மாறி கரும்பை தீயிட்டு அழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என முதல்வருக்கு புகார் மனு அனுப்பினர். இதையடுத்து, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் பால்பிரின்சிராஜ்குமார், கரும்பு பெருக்கு அலுவலர் கதிரவன் உள்ளிட்ட குழுவினர் ரெட்டிபாளையம் பகுதியில் ஆய்வு செய்தனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கரும்பு பதிவு செய்த விவசாயிகளிடம் அறுவடை குறித்து, அலுவலர்கள் எவ்வித தகவலும் தரவில்லை. வெட்டு ஆட்கள் அனுப்புவதிலும் குளறுபடி இருந்தது. ஓராண்டு கரும்பு சாகுபடிக்கு வாங்கிய கடனைக்கூட திருப்பிச்செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.கூ ட்டுறவு சங்கத்தில் சாகுபடிக்காக பெறப்பட்ட கடனை ரத்து செய்ய வேண்டும் என்றனர். பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவைப்பருவமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன்படி 2021-2022-ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கு 2,010 ஏக்கர் கன்னி கரும்பும், 1,000 ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தம் 3,010 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டு கரும்பு அரவை கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தொடங்கியது.

    இதன்மூலம் 1 லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டது. இந்த ஆலை நாள் ஒன்றுக்கு 1,200 டன் கரும்பு அரவை செய்யக்கூடிய அளவிற்கு பிழிதிறன் கொண்டது. ஆனால் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைந்து விடுவதால் அரவை நிறுத்தப்பட்டு, அவை சரி செய்யப்பட்ட பிறகு இயக்கப்பட்டு வருகிறது.

    கரும்பு வெட்டும் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும் போது வெட்டப்படும் கரும்பின் அளவு குறைந்து கரும்பு அரவை நிறுத்தப்பட வேண்டியதாகிறது. இந்த அரவைப்பருவத்தில் தற்போது வரை 80 ஆயிரத்து 451 டன் கரும்பு மட்டுமே அரவை செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் முதிர்ச்சியடைந்த கரும்புகளை வெட்டி ஆலை அரவைக்கு அனுப்புவதற்கு 13 மாதங்களுக்கு மேலாகிறது.

    இந்த நிலையில் 2022-2023-ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கு தேவையான கரும்பிற்கு 2021-2022நடவு பருவத்தில் 4 ஆயிரம் ஏக்கர் கன்னி கரும்பும், 3 ஆயிரம் ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தம் 7 ஆயிரம் ஏக்கர் கரும்பு பதிவு செய்யவேண்டும் என்று குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கரும்பு வெட்டப்படாமல் காலதாமதம் ஆகியவற்றால் இந்த ஆண்டு நடவு பருவத்தில், ஆலைக்கு கரும்பு பதிவு மந்தமாக உள்ளது. அதனால் இதுவரை கன்னி கரும்பு 110 ஏக்கர், கட்டை கரும்பு 610 ஏக்கர் என மொத்தம் 720 ஏக்கர் மட்டுமே பதிவாகியுள்ளது. இந்த நிலையில் ஆலையின் கரும்பு பிரிவு களப்பணியாளர்கள் கரும்பு விவசாயிகளை தொடர்ந்து நேரில் சந்தித்து, ஆலைக்கு கரும்பு பதிவு செய்யும்படி கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் கரும்பு பதிவு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.

    • கருமருது உட்பட, 28 வகை மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
    • இலக்கு முழுவதையும் பூர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    அவிநாசி:

    அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, நடுவச்சேரி ஊராட்சியில் நர்சரி அமைக்கப்பட்டு, 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் மூலம் நாற்று உற்பத்தியும், பராமரிப்புப்பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அங்கு புங்கை, புன்னை, ஆனை குன்றிமணி, சேத்தான் குட்டை, வில்வம், ஆலமரம், புளியமரம், சிவகுண்டலம், மந்தாரை, உதியன், பூவரசன், வன்னி, மகிழம்பூ, தான்றிக்காய், விதைப்பந்து, குறிஞ்சிக்காய், பாதானிக்காய், முருங்கை, கொடுக்காப்புளி, அத்தி, அலுஞ்சி, கருமருது உட்பட, 28 வகை மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுணன், நர்சரி அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். ஆண்டுக்கு 15 ஆயிரம் மரக்கன்று என்ற அடிப்படையில் 3 ஆண்டில் 50 ஆயிரம் மரக்கன்று உற்பத்தி செய்ய இலக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை 20 ஆயிரம் மரக்கன்று உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என ஊராட்சி நிர்வாகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்த ஆண்டிலேயே, இலக்கு முழுவதையும் பூர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். ஆய்வின் போது அவிநாசி பி.டி.ஓ.,க்கள் மனோகரன், விஜயகுமார், செயற் பொறியாளர்கள், ஊராட்சி செயலர் மணிகண்டன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

    • ரூ.1 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்தது வருகிறது
    • 2 இடங்களில் புதிதாக விடுதி கட்ட மனு

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் கட்டப்படும் பள்ளி கட்டிடத்தினை அதன் தலைவர் மதிவாணன் நேற்று பார்வையிட்டார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் செயல்பாடு எப்படி மாணவர்களின் கல்வித் திறன் எப்படி உள்ளது மேலும் கட்டிடத்தின் வசதிகள் குறித்து புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடங்கள் பார்வையிடுவதற்காக இங்கு வந்துள்ளேன்.

    தற்போது பட்டறை காடு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் ரூ.46 லட்சம் மதிப்பீட்டிலும் ஆட்டியானூர் பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 46 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பு வரை கொண்ட கட்டிடமும் அரசு பழங்குடியினர் நல ஒன்று உறைவிட உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் மூன்று வகுப்பறை கட்டிடம் ரூ. 51.60 லட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    மலைவாழ் மக்களின் வாழ்க்கை திறன் உயர்வதற்காக தாட்கோ மூலம் கடனுதவி பெறுவதற்காக வரும் செவ்வாய்க்கிழமை ஜமுனாமரத்தூர் யூனியன் அலுவலகத்தில் சரவணன் எம்.எல்.ஏ. தலைமையில் அனைத்துப் பகுதி மக்களையும் அழைத்து விழிப்புணர்வு கூட்டம் போடப்பட்டு அதன் மூலம் யார் யாருக்கு என்னென்ன தொழில் செய்ய வேண்டுமோ அவர்களுக்கெல்லாம் வங்கிகள் மூலம் 50 சதவீத மானியத்தில் கடன் உதவி அளிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளேன்.

    மேலும் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் மற்றும் மாவட்டத்தின் அமைச்சர் எ.வ.வேலுவிடமும் 2 இடங்களில் ஹாஸ்டல் புதிதாக கட்டுவதற்கும் மேலும் கூடுதலாக ஆசிரியர்களை நியமிப்பதற்கும் மனு கொடுத்து உடனடியாக பணிகளை செய்து முடிக்க உள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.

    ஆய்வின் போது எம்எல்ஏ சரவணன், வேலூர் மாவட்ட தாட்கோ செயற்பொறியாளர் சுதா, உதவி செயற்பொறியாளர்கள் இமாம்காசிம், கண்ணன், திருவண்ணாமலை மாவட்ட தாட்கோ மேலாளர் ஏழுமலை, யூனியன் சேர்மன் ஜீவா, துணைச் சேர்மன் மகேஸ்வரி, பிடிஓ பிரகாஷ் உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×