என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அசாம்"
- கடந்த ஆண்டு இரு மாநில அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இரு மாநில எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.
ஷில்லாங்:
கடந்த 1972-ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் இருந்து மேகாலயா மாநிலம் உதயமானது. அப்போது முதல் இரு மாநிலங்களுக்கும் இடையே எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது.
மத்திய அரசின் சமரசத்தால் கடந்த ஆண்டு இரு மாநில அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும் இருமாநில எல்லையில் மோதல் சம்பவங்கள் தொடர் கதையாய் உள்ளன.
இந்த நிலையில் மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்துக்கும் அசாமின் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்துக்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ள லபங்காப் கிராமத்தில் நேற்று இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது.
இருதரப்பினரும் வில் மற்றும் அம்புகளை பயன்படுத்தி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். எனினும் இந்த மோதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் இரு மாநில எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.
- ஆத்திரம் அடைந்த பொது மக்கள் வாலிபரை கண்மூடித்தனமாக தாக்கினார்கள்.
- சட்டத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம் என்று போலீஸ் எச்சரிக்கை.
மராட்டிய மாநிலத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் என நினைத்து 4 சாமியார்களை கிராம மக்கள் கொடூரமாக தாக்கினார்கள்.
இதேபோன்று அசாம் மாநிலத்திலும் வாலிபர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள கல்சார் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் தனது காரில் சென்றார். பின்னர் அவர் அங்கு ஒரு இடத்தில் நின்று கொண்டு இருந்தார்.
அவர் குழந்தையை கடத்த வந்திருப்பதாக அப்பகுதியில் வதந்தி பரவியது. இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் அவரை கண்மூடித்தனமாக தாக்கினார்கள்.
அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற அந்த வாலிபரை கீழே தள்ளி கொடூரமாக தாக்கினார்கள். இதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் அவர் வந்த காரையும் அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இது பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி நுமல் மகாட்டா கூறும்போது வதந்தியை யாரும் நம்பாதீர்கள், யாராவது சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்தால் உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் சட்டத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
- 24 லட்சத்துக்கும் அதிகமான அசாம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- சில மாவட்டங்களில் நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்தில் காவல் நிலையம் ஒன்று ஆற்றுக்குள் மூழ்கியது குறித்த வீடீயோ வெளியாகி உள்ளது.
நல்பாரி மாவட்டத்தில் இரண்டு அடுக்குமாடி கொண்ட காவல்நிலையத்தை சுற்றி வெள்ளநீர் அதிகரித்து வந்த நிலையில், அரிப்பு காரணமாக அந்த கட்டிடம் இடிந்து விழுந்து ஆற்றுக்குள் மூழ்கியது. இதை அங்கிருந்த கிராம மக்கள் தங்களது செல்போனில் பதிவு செய்தனர். அந்த காவல்நிலைய கட்டிடம் நீண்ட நாட்களாக காலியாக இருப்பதால் உயிரிழப்பு ஏதுவும் ஏற்படவில்லை.
#WATCH | A part of the two-storied building of Bhangnamari police station sinks due to flood in Assam's Nalbari district
— ANI (@ANI) June 28, 2022
(Source: Unverified) pic.twitter.com/CMHpcgpHmN
பிரம்மபுத்திரா ஆற்றின் அருகே அமைந்துள்ள பல பகுதிகளில் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ள நிலையில், கச்சார், கரீம்கஞ்ச் மற்றும் ஹைலகண்டி மாவட்டங்க ளில் நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
28 மாவட்டங்களில் 24 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கச்சார் மாவட்டத்தில் உள்ள சில்சார் நகரம் உள்ளிட்ட பல பகுதிகள் ஒரு வாரத்திற்கும் மேலாக நீரில் மூழ்கியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5 பேர் வெள்ள பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா சுமார் 3000 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்குத் தாயகமாக விளங்கி வருகிறது. அவற்றில் 90 சதவீத காண்டாமிருகங்கள் அசாமின் காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் ஒராங் தேசிய பூங்காவில் வசித்து வருகின்றன.
கெரட்டின் என்னும் பொருள் நிறைந்துள்ள காண்டாமிருக கொம்புகளுக்கு கள்ளச்சந்தையில் ஏகப்பட்ட கிராக்கி. இவை மருந்து தயாரிக்கவும், குத்துவாள், கத்தி உள்ளிட்டவைகளை அலங்காரப் பொருள்களாக உருவாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் சமூக விரோதிகளால் காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டு அவற்றின் கொம்புகள் முறைகேடான வழியில் விற்கப்படுகின்றன.
இந்நிலையில், வேட்டைக்காரர்களை துடைத்தெறியும் நோக்கில் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் அசாம் மாநில போலீசார் இணைத்து கூட்டாக ஒராங் தேசிய பூங்கா வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கும்பல் போலீசார் கண்டதும் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதற்கு பதிலடியாக அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் சத்தம் வராமக் சுடுவதற்கு பயன்படும் துப்பாக்கி சைலன்சர் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் கூறினர்.
இந்தியாவில் உள்ள காண்டாமிருகங்களின் எண்ணிக்கை கடந்த 10 வருடங்களில் சுமார் 27% உயர்ந்திருந்தாலும், அவை இன்னமும் ஆபத்தான சூழலிலேயே இருக்கின்றன. தொடரும் மிருக வேட்டை, நகரமயமாதல், சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றால், காண்டாமிருகங்கள் அழியும் விளிம்பில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்