search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Younglady"

    • கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார்.
    • குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு கணவரின் தம்பியுடன் ஓடிய இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.

    கோவை:

    மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இவர்கள் குடும்பத்துடன் ஆர்.எஸ்.புரத்தில் வசித்து வருகின்றனர். இளம் பெண்ணின் கணவர் உணவு சமைத்து அந்த பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வரும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அந்தப் பகுதியில் வசித்து வந்த கணவரின் தம்பி உடன் பழக்கம் ஏற்பட்டது நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

    2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று இளம் பெண்ணின் கணவர் வெளியே சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த இளம்பெண் மாயமாகி இருந்தார். அக்கம்பக்கத்தில் தேடியபோது இளம்பெண் தனது தம்பியுடன் ஓடியது தெரிய வந்தது.

    இதுகுறித்து அவர் ஆர்எஸ் புரம் போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு கணவரின் தம்பியுடன் ஓடிய இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
    • திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    நெல்லை:

    அம்பை அருகே உள்ள சிவந்திபுரம் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார். இவரது மகள் நிவேதா(வயது 20). இவர் வீரவநல்லூர் பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்றஅவர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை சக ஊழியர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    ×