search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yemen"

    ஏமன் நாட்டில் உள்ள ஹொடைடா துறைமுகத்தில் பத்துக்கும் அதிகமான சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்களை ஹவுத்தி போராளிகள் சிறைபிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #Cargoshipsdetained
    சனா:

    ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரான் அரசின் ஆதரவுடன் அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடைடா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஈரான் அரசு மறைமுகமாக ஆயுத உதவிகளை அளித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    ஹொடைடா மாகாணத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் மீட்கும் நோக்கத்தில் சவுதி அரேபியா தலைமையிலான அமீரகப் படைகள் சமீபத்தில் அங்கு முற்றுகையிட்டு உச்சகட்ட தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல்களில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 30 லட்சம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.


    ஏமன் அரசுக்கும் ஹவுத்தி போராளிகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை முயன்றது. இருதரப்பினருக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கான இந்த முயற்சி கடந்த மாதம் தோல்வியை தழுவியது.

    இந்நிலையில், கோதுமை மாவு, சர்க்கரை என சுமார் 5700 டன் அளவிலான நிவாரணப் பொருட்களை ஏற்றிவந்த சரக்கு கப்பல்கள் மற்றும் சுமார் 20 ஆயிரம் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஏற்றிவந்த டேங்கர் கப்பல்களை ஹவுத்தி போராளிகள் சிறைபிடித்து வைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Cargoshipsdetained #oiltankersdetained #Houthimilitia #Hodeidahport
    ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய விமான தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து ஐநா சபை விசாரணை நடத்த ஆணையிட்டுள்ளது. #YemenAirStrikes
    சனா:

    ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுதி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அந்த பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர்.

    சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் சில நேரங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.

    இதற்கிடையே, ஏமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சடா நகரில் ஹவுதி புரட்சிப் படையினரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று விமானத் தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்தில் சென்ற 12 குழந்தைகள் இறந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த பேருந்தில் பயணம் செய்த 29 குழந்தைகளும் அந்த தாக்குதலில் பலியாகினர். 

    இந்நிலையில், ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய விமான தாக்குதலில் பேருந்தில் சென்ற 29 அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து ஐநா சபை விசாரணை நடத்த  ஆணையிட்டுள்ளது.

    இதேபோல், சவுதி கூட்டுப்படை நடத்திய விமான தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவும் விசாரணை நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #YemenAirStrikes
    ஏமன் நாட்டின் சடா பகுதியில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர். #YemenAirStrikes
    சனா:

    ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுதி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அந்த பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர்.

    சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் சில நேரங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.

    இந்நிலையில், ஏமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சடா நகரில் ஹவுதி புரட்சிப் படையினரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று விமானத் தாக்குதல் நடத்தினர். இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். #YemenAirStrikes
    ஏமன் நாட்டில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
    சனா :

    ஏமன் நாட்டின் வட மேற்கு பகுதிகள் மற்றும் தலைநகர் சனா உள்பட நாட்டின் பெரும்பகுதிகளை ஹூதி கிளர்ச்சியாளர்களும், அதனுடைய கூட்டணி படையினரும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு ஏமன் அதிபர் மன்சூர் ஹாதி வெளிநாடு தப்பி சென்றுவிட்டார்.

    ஏமனில் மீண்டும் மன்சூர் ஹாதி அரசை அமைக்கும் நோக்கில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சன்னி இஸ்லாமியர்கள் கூட்டணி மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் கடந்த 3 ஆண்டுகளாக ஈரான் ஆதரவுடன் இயங்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட்டு வருகிறது.

    ஏமனின் முக்கிய பகுதியான ஹூடேய்டாவில் உள்ள மருத்துவமனை, மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்கள் சந்தையில் சவுதி கூட்டணி படைகள் கடந்த2-ம் தேதி தாக்குதலில் ஈடுபட்டன. இதில், பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியது. 

    இந்நிலையில், ’இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது, தாக்குதல் நிகழ்ந்தற்கான சூழ்நிலை குறித்து இன்னும் துல்லியமாக கண்டறியப்படவில்லை.  பொதுமக்களின் வாழ்க்கையும் அவர்களின் சொத்துக்களும் மரியாதை குறைவான நிலையில் நடத்தப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது’ என ஏமனுக்கான சர்வதேச செஞ்சிலுவை குழுவின் தலைவர் ஜோன்னேஸ் ப்ரூவர்இன்று தெரிவித்துள்ளார். 
    ஏமன் கடல் பகுதியில் அகதிகளை அழைத்து வந்த படகு கவிழ்ந்ததில் 46 பேர் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Yemen #MigrantsDrown
    ஜெனிவா:

    ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். அதற்கு அம்மக்கள் ஏமன் நாட்டினை நுழைவாயிலாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், எத்தியோப்பியாவை சேர்ந்த அகதிகள் சட்டவிரோதமாக ஒரு படகில் ஏமனுக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த படகில் 100க்கு மேற்பட்ட அகதிகள் இருந்தனர். இதில் 83 ஆண்களும், 17 பெண்களும் அடங்குவர்.

    இந்த படகு ஏமன் அருகே வந்தபோது கடல் கொந்தளிப்பு காரணமாக கடலில் மூழ்கியதில் 46 பேர் மூழ்கினர். தகவல் அறிந்து அங்கு சென்ற மீட்புப்படையினர் மாயமான 16 அகதிகளை தேடி வருகின்றனர். #Yemen #MigrantsDrown 
    ஏமன் நாட்டில் உள்ள சொகோட்ரா தீவில் ஏற்பட்ட புயலில் சிக்கி தவித்த இந்தியர்களை இந்திய கப்பற்படை இன்று மீட்டுள்ளது. #Cyclone #Omen #Yemen
    சனா :

    அரபிக்கடலில் உருவான மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாடுகளை கடந்த மாதம் 28-ம் தேதி பயங்கரமாக தாக்கியது. ஏமனில் உள்ள சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியதுடன் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டது.

    மெகுனு புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் 3 பேர் இந்தியர்கள் என்று மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மேலும், இந்த புயலினால் சொகோட்ரா தீவில் 38 இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது.

    அவர்களை மீட்க இந்திய கப்பற்படைக்கு சொந்தமான சுனைனா என்ற கப்பல் ஏமன் நாட்டுக்கு விரைந்தது. அங்கு புயல் பாதிப்பினால் சிக்கித்தவித்த  38 இந்தியர்களை இன்று இந்திய கப்பற்படையினர் பத்திரமாக மீட்டனர். உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் இருந்த அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை, உணவு மற்றும் உறவினர்களுடன் தொடர்புகொண்டு பேச தொலைபேசி ஆகியவை வழங்கப்பட்டது. #Cyclone #Omen #Yemen
    ஓமன், ஏமனில் சொகோட்ரா தீவை மெகுனு என்ற புயல் தாக்கியது. இதில் இந்தியர் உள்பட 11 பேர் பலியாகினர். #Cyclone #Omen #Yemen
    துபாய்:

    அரபிக்கடலில் உருவான மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாடுகளை பயங்கரமாக தாக்கியது. ஏமனில் உள்ள சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியதுடன் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டது.

    மெகுனு புயலில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் 3 பேர் இந்தியர்கள் என்று மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதில் ஒருவரது பெயர் ஷாம்சர் அலி. மாயமான மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    புயல், மழையால் பாதிக்கப்பட்ட 145 இந்தியர்களும், 315 வங்காளதேசத்தை சேர்ந்தவர்களும் சலாலாவில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  #Yeman #Omen #Cyclone 
    ஏமன் நாட்டின் சனா பகுதியில் சவுதி கூட்டுப்படைகள் இன்று நடத்திய விமானத் தாக்குதலில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Yemen #SaudiledAirstrike #Sanaa

    சனா:

    ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பலப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைத்து அந்த பகுதிகைளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர்.

    சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் சில நேரங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.

    இந்நிலையில், ஏமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சனா நகரில் ஹவுத்தி புரட்சிப் படையினரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் இன்று விமானத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் ஒரு பெட்ரோல் நிரப்பும் நிலையத்தின் மீது நடத்தப்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட 4 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய கிழக்கு நாடுகளான ஏமன், சிரியா, ஈராக் மற்றும் லெபனானில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஈரான் மற்றும் சவுதி அரேபியா நாடுகள் முயற்சித்து வருகின்றன. அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் இதுவரை பத்தாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Yemen #SaudiledAirstrike #Sanaa
    ஏமனில் சொகோட்ரா தீவை மெகுனு என்ற புயல் தாக்கியது. இதில் இந்தியர் உள்பட 5 பேர் பலியாகினர். மேலும் 40 பேரை காணவில்லை.
    துபாய்:

    ஏமனில் சொகோட்ரா தீவை நேற்று மெகுனு என்ற புயல் தாக்கியது. இந்த தீவு தெற்கு ஏமனுக்கும், ஆப்பிரிக்கா கண்டத்துக்கும் இடையே அமைந்துள்ளது.

    புயல் கரையை கடக்கும் போது பயங்கரமாக காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது. இதனால் சொகோட்ரா தீவில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

    கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுகள் மூழ்கின. சொகோட்ரா தீவு பகுதியில் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

    புயல் தாக்குதலுக்கு 5 பேர் பலியாகினர். அவர்களில் ஒருவர் இந்தியர். மேலும் 40 பேரை காணவில்லை. அவர்கள் ஏமன், இந்தியா மற்றும் சூடான் நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

    புயல் தாக்கியுள்ள சொகோட்ரா தீவில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. #Tamilnews
    ஏமன் நாட்டின் சோகோட்ரா தீவில் வெப்பமண்டல புயல் தாக்கியதையடுத்து, அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. #TropicalStorm
    துபாய்:

    அரபிக் கடலில் அமைந்துள்ளது சோகோட்ரா தீவு. ஏமன் நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட இந்த தீவில் இன்று கடுமையான வெப்பமண்டல புயல் தாக்கியது. இதன் காரணமாக தீவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு உயரமான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒருசில பகுதிகளில் உள்ளவர்கள் ஊரை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர். 

    2 படகுகள் மூழ்கியதால் அதில் பயணம் செய்த 17 பேர் என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை. அவர்கள் வெள்ளத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், தீவு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மழை வெள்ளம் காரணமாக ஊரைவிட்டு வெளியேறி மலைகளில் வசிக்கும் மக்கள் மற்றும் கிராமங்களில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அவசர உதவி தேவைப்படுவதாக அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 

    இதேபோல் கிழக்கு ஆப்ரிக்காவில் நேற்று வெப்பமண்டல புயலின் தாக்கத்தினால் சோமாலிலேண்டில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #TropicalStorm
    ஏமன் நாட்டின் புரட்சி இயக்கமான ஹவுதி நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாக சவுதி அரசின் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.#Houthimovement #missileattack #Yemen #SaudiArabiya #civilianskilled
    சனா:

    ஏமன் நாட்டில் பதவியிறக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் அப்த் ரப்போ மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு இந்த கிளர்ச்சியானது ஆயுதப் போராட்டமாக திசைமாறியது.

    ஏமன் நாட்டின் அண்டை நாடான ஈரானின் ஆதரவுடனும், அல் கொய்தா பயங்கரவாதிகளின் துணையுடனும் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப்படையினர் தலைநகர் சனா உள்ளிட்ட பல பகுதிகளை கைப்பற்றி, தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

    இந்த பகுதிகளை மீட்பதற்காக சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டமைப்பு படைகள் ஏமன் அரசுக்கு உதவிசெய்து வருகின்றன.

    இந்நிலையில், ஏமன் நாட்டில் உள்ள மரிப் நகரின் மீது ஹவுதி படை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டிருப்பதாக சவுதி அரேபியாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. #Houthimovement #missileattack #Yemen #SaudiArabiya #civilianskilled
    ×