search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "yamaha"

    • யமஹா நிறுவனத்தின் புதிய FZ-X மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • 2023 யமஹா FZ-X மாடலில் புது விண்ட்ஸ்கிரீன், டூயல் சேனல் ஏபிஎஸ் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

    யமஹா நிறுவனம் 2023 FZ-X மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது FZ-X மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புது மாடலின் டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்றே தெரிகிறது. இத்துடன் புது விண்ட்ஸ்கிரீன், வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், டியுபுலர் ஸ்டீல் ஃபிரேம் வழங்கப்படுகிறது.

    இதன் முன்புறம் ஹை-மவுண்ட் ஃபெண்டர் வழங்கப்படுகிறது. இதுதவிர 2023 FZ-X மாடல் புது நிறங்களில் கிடைக்கும் என்றும் தெரிகிறது. ஸ்பை படங்களில் உள்ள மாடல் கோல்டன் நிற அலாய் வீல்கள், ஆரஞ்சு நிற பாடி வொர்க் கொண்டிருக்கிறது. இதே போன்ற கோல்டு நிற ரிம்கள் FZS 25 போன்ற மாடல்களிலும் யமஹா ஏற்கனவே வழங்கி இருக்கிறது.

    இவற்றுடன் புதிய யமஹா 2023 FZ-X மாடலில் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது. அந்த வகையில், இந்த பைக் 149சிசி, ஏர் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கும்.

    இது 12.4 ஹெச்பி பவர், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. வரும் வாரங்களில் புதிய யமஹா FZ-X மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    Photo Courtesy: Rushlane

    • யமஹா நிறுவனம் தமிழ் நாட்டில் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • பொங்கல் பண்டிகையை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கும் சிறப்பு சலுகைகள் இம்மாத இறுதிவரை வழங்கப்பட இருக்கின்றன.

    இந்திய சந்தையில் முன்னணி இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளராக இருக்கும் யமஹா மோட்டார் இந்தியா தமிழ் நாட்டு வாடிக்கையாளர்களுக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகைகள் ஜனவரி 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். தற்போது பொங்கல் பண்டிகை சிறப்பு சலுகைகள் யமஹா FZ மற்றும் ஃபசினோ 125சிசி ஹைப்ரிட் மாடலின் டிரம் வேரியண்டிற்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    சலுகை விவரங்கள்:

    யமஹா FZ மாடலை வாங்குவோருக்கு ரூ. 7 ஆயிரம் வரை கேஷ்பேக், ரூ. 7 ஆயிரத்து 999 முன்பணம், மாதம் ரூ. 1999 எனும் குறைந்த மாத தவணை முறை மற்றும் 0 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

    யமஹா ஃபசினோ 125 Fi ஹைப்ரிட் டிரம் மாடலை வாங்கும் போது ரூ. 1500 வரை கேஷ்பேக், ரூ. 3 ஆயிரத்து 999 எனும் மிக குறைந்த முன்பணம், மாதம் ரூ. 1999 எனும் மாத தவணை, 0 சதவீத வட்டி போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகள் தமிழ் நாட்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சலுகைகள் யமஹா விற்பனை மையங்களில் பெற முடியும். இதுபற்றிய கூடுதல் விவரங்களை யமஹா விற்பனை மையங்களில் அறிந்து கொள்ள முடியும்.

    150சிசி யமஹா FZ சீரிசில் சக்திவாய்ந்த ஏர் கூல்டு 4 ஸ்டிரோக் 149சிசி, SOHC, 2 வால்வுகள் கொண்ட சிங்கில் சிலிண்டர் ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 12.4 பிஎஸ் பவர், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    யமஹா ஃபசினோ ஹைப்ரிட் மாடலில் ஏர் கூல்டு, 4 ஸ்டிரோக் SOHC, இரண்டு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.2 பிஎஸ் பவர், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதுதவிர ஏராளமான பயனுள்ள அம்சங்கள் இந்த மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • யமஹா நிறுவனத்தின் புதிய அட்வான்ஸ்டு மோட்டார்சைக்கிள் ஸ்டேபிலிட்டி அசிஸ்ட் சிஸ்டம் அறிமுகமாகி இருக்கிறது.
    • வாகனத்தை கீழே விழாமல் பார்த்துக் கொள்ளும் திறன் கொண்ட புது தொழில்நுட்பம் அதன் துவக்க கால உற்பத்தியில் உள்ளது.

    யமஹா நிறுவனம் இருசக்கர வாகன பாதுகாப்பை கருத்தில் கொண்டு புது தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறது. அட்வான்ஸ்டு மோட்டார்சைக்கிள் ஸ்டேபிலிட்டி அசிஸ்ட் சிஸ்டம் (AMSAS) என அழைக்கப்படும் புது தொழில்நுட்பம் எலெக்ட்ரிக் R3 டம்மி யூனிட்டில் பொருத்தப்பட்டு இருக்கிறது.

    எலெக்ட்ரிக் R3 மாடலின் தோற்றம் அதன் பெட்ரோல் மாடலை போன்றே ட்சியளிக்கிறது. எனினும், இதன் முன்புறம் இரண்டு மோட்டார்கள் இடம்பெற்றுள்ளன. முன்புற சக்கரம் மற்றும் ஸ்டீரிங் ஹெட் உள்ளிட்டவைகளில் இவை பொருத்தப்பட்டு இருக்கின்றன. மோட்டார்சைக்கிளுக்கு இவற்றில் உள்ள ஆக்டுவேட்டர்கள் வாகனம் கீழே விழாமல் இருக்க வலது, இடது, முன்புறம் மற்றும் பின்புறம் என எந்த பக்கம் சாய வேண்டும் என்ற தகவலை வழங்குகிறது.

    இதில் உள்ள AMSAS பைக்கை பேலன்ஸ் செய்து அதிகபட்சம் மணிக்கு 5 கிலோமீட்டர் வேகம் வரை நிலையாக வைத்துக் கொள்கிறது. இதில் 6-ஆக்சிஸ் இனர்ஷியல் மெஷர்மெண்ட் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்று மேம்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது யமஹா நிறுவனத்திற்கு முதல் முறை ஆகும். முன்னதாக 2015 மோட்டோபாட் மற்றும் 2017 மோட்டோராய்டு நிகழ்வுகளில் இந்த தொழில்நுட்பம் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

    தற்போதும் இந்த AMSAS தொழில்நுட்பம் அதன் துவக்க கட்டத்திலேயே உள்ளது. யமஹா மட்டுமின்றி ஹோண்டா நிறுவனமும் பாதுகாப்பை வழங்கும் சிஸ்டம்களை உருவாக்கி வருகிறது. ஹோண்டா நிறுவனம் செமி ஆட்டோனோமஸ் ரைடிங் மற்றும் ஏர்பேக் சிஸ்டம்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    • யமஹா நிறுவனத்தின் RX100 மாடல் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்று விற்பனையில் அசத்தியது.
    • இன்றும் பயன்படுத்திய வாகனங்கள் சந்தையில் யமஹா RX100 மாடலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    யமஹா RX100 மோட்டார்சைக்கிள் மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என யமஹா மோட்டார் இந்தியா நிறுவன தலைவர் எய்ஷின் சிஹானா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். எனினும், புதிய மாடல் பழைய 2-ஸ்டிரோக் வெர்ஷன் போன்று இல்லாமல் அதிநவீன ரெட்ரோ தோற்றம் கொண்டிருக்கும்.

    யமஹா இந்தியா நிறுவனத்தின் பிரபல பிளாட்ஃபார்மாக யமஹா FZ பிளாட்ஃபார்ம் உள்ளது. அந்த வகையில் இதே பிளாட்ஃபார்மில் புது மாடலை உருவாக்கி அதில் இருந்து லாபம் பார்க்க யமஹா இந்தியா முடிவு செய்து இருக்கலாம். இவ்வாறு செய்யும் பட்சத்தில் மாடலின் உற்பத்தி செலவீனங்கள் குறையும். ஆனால், யமஹா நிறுவனம் இவ்வாறு செய்யாது என்றும் புது மாடலில் 149சிசி அல்லது FZ 25 மாடலில் உள்ள என்ஜின் எதுவும் புது மாடலுக்கு பொருந்த்தமாக இருக்காது என்றும் கூறப்படுகிறது.

    அந்த வகையில் புது மாடலுக்காக யமஹா நிறுவனம் முற்றிலும் புது பிளாட்ஃபார்மை உருவாக்கும் என்றே தெரிகிறது. தற்போதைய 155சிசி, லிக்விட் கூல்டு மோட்டார் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 2008 ஆம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே இந்த மோட்டார் அதிக விற்பனையை பெற்று கொடுக்கிறது. அந்த வகையில் இந்த என்ஜின் புதிய RX100 மாடலில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். 2026 வரை புதிய யமஹா RX100 மாடல் அறிமுகம் பற்றி எந்த தகவலும் வெளியாகாது என்றே தெரிகிறது.

    • இந்திய இருசக்கர வாகன சந்தையில் யமஹா மோட்டார் இந்தியா முன்னணி நிறுவனமாக இருக்கிறது.
    • இருசக்கர வாகனம் மட்டுமின்றி சமூக நல்லிணக்க செயல்களிலும் யமஹா அவ்வப்போது தன்னை ஈடுப்படுத்திக் கொண்டு வருகிறது.

    சமூக வளர்ச்சியை வளர்க்கவும் அவர்களின் நல்வாழ்வுக்கு பங்களிப்பை வழங்குவதற்கும் சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக, இந்திய இரு சக்கர வாகனத் துறையில் முன்னணி நிறுவனமான இந்தியா யமஹா மோட்டார் (IYM) ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்கி இருக்கிறது.

    தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் மற்றும் பண்ருட்டியில் உள்ள பொது சுகாதார மையங்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கருவிகளில் இரத்த அணுக் கவுண்டர் இயந்திரத்தின் இரண்டு அலகுகள் மற்றும் செமி அனலைசர் இயந்திரத்தின் இரண்டு அலகுகள் உள்ளன.

    இம்முயற்சியைக் குறிக்கும் வகையில், யமஹாவின் சிரேஷ்ட மருத்துவ உறுப்பினர்கள் முன்னிலையில் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தலைவர் திரு. ஈஷின் சிஹானா, இயக்குநர் திரு. மசடோ டகேயாமா மற்றும் துணைத் தலைவர் (HR மற்றும் ER) திரு. P S கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில், பொது சுகாதார மையங்கள் (வல்லம் மற்றும் பண்ருட்டி) சார்பில், பொது சுகாதாரத் துறை (டிபிஎச்) துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஷியாம் குமார் ஆகியோர் கலந்து கொண்டு நன்கொடையை பெற்றுக் கொண்டனர். இரண்டு மையங்களிலும் மருத்துவப் பரிசோதனைகளை விரைவுபடுத்த நன்கொடை நிச்சயமாக பயனுள்ளதாகவும் முக்கியமானதாகவும் இருக்கும்.

    IYM தனது செயல்பாடுகளின் பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் நல்வாழ்வை உறுதிப்படுத்த கடந்த காலங்களிலும் இதேபோன்ற முயற்சிகளை எடுத்துள்ளது. சுகாதாரம், கல்வி, சாலைப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் நன்கொடைகள் மற்றும் பிற முயற்சிகள் மூலம் பிந்தையவர்களின் நலனுக்காக, நிர்வாகம் மற்றும் சமூகங்களுடன் நிறுவனம் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றும்.

    • யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் புளூ ஸ்கொயர் பெயரில் பிரத்யேக விற்பனை மையங்களை கட்டமைத்து வருகிறது.
    • நாடு முழுக்க யமஹா புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் மூலம் சர்வதேச மாடல்களை விற்பனை செய்ய யமஹா திட்டமிட்டுள்ளது.

    இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் நாடு முழுக்க 100 புளூ ஸ்கொயர் விற்பனை மையங்களை கட்டமைத்துள்ளது. இந்திய சந்தையில் ரிடெயில் விற்பனையை உறுதிப்படுத்த 3s நெட்வொர்க்கை யமஹா புளூ தீமிற்குள் கொண்டு வரவும் யமஹா திட்டமிட்டுள்ளது.

    இதுமட்டுமின்றி புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் யமஹா சர்வதேச சந்தையில் விற்பனை செய்யும் மாடல்களை இந்தியாவுக்கு கொண்டுவரும் என யமஹா தெரிவித்துள்ளது. எந்தெந்த மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், யமஹா டெனர் 700 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஒற்றை களமாக புளூ ஸ்கொயர் விற்பனை மையம் துவங்கப்பட்டது. யமஹாவின் ரேசிங் டிஎன்ஏவுடன் வாடிக்கையாளர்கள் இணையும் நோக்கில் புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. யமஹா உருவாக்கி இருக்கும் புளூ ஸ்டிரீக்ஸ் ரைடர் குழுவில் வாடிக்கையாளர்கள் இணையவும் புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் பாலமாக செயல்படுகின்றன.

    இந்தியாவில் ஒவ்வொரு புளு ஸ்கொயர் விற்பனையகமும் யமஹா நிறுவனத்தின் பிரீமியம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள்- யமஹா YZF R15M, யமஹா ஏரோக்ஸ் 155 போன்ற மாடல்களை காட்சிப்படுத்தி வருகின்றன. இத்துடன் புளூ ஸ்கொயர் விற்பனை மையங்களில் யமஹாவின் சர்வதேச மாடல்களை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    • யமஹா நிறுவனத்தின் புதிய மேக்சி ஸ்கூட்டர் மாடல் ஐரோப்பா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய 2023 மாடலில் ஏராளமான புது அம்சங்கள், டிசைன் அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    யமஹா நிறுவனத்தின் எக்ஸ்மேக்ஸ் மேக்சி ஸ்கூட்டர்கள் ஐரோப்பா உள்பட பல்வேறு நாடுகளில் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது. ஐரோப்பாவில் மட்டும் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்கூட்டர்களை யமஹா விற்பனை செய்து இருக்கிறது. இந்த ஸ்கூட்டரை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்ற எக்ஸ்மேக்ஸ் மாடல்களில் புது அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது.

    2023 யமஹா எக்ஸ்மேக்ஸ் மாடல்கள் ஏராளமான மாற்றங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது. இந்த 300சிசி மாடல் தற்போது ஸ்டாண்டர்டு மற்றும் டெக் மேக்ஸ் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் 4.2 இன்ச் கலர் டிஎப்டி டிஸ்ப்ளே, 3.2 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதன் டிஎப்டி யூனிட் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதி கொண்டிருக்கிறது. இதன் காரணமாக குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் நோட்டிபிகேஷன்களை பார்க்க முடியும். வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனில் யமஹா மைரைடு செயலி மூலம் மோட்டார்சைக்கிளை கனெக்ட் செய்து கொள்ள வேண்டும். இது மியூசிக் கண்ட்ரோல் வசதியையும் கொண்டுள்ளது. இதன் பேஸ் வேரியண்டில் எல்சிடி டேஷ் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஸ்கூட்டரின் என்ஜினில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடலில் 292சிசி,சிங்கில் சிலிண்டர் என்ஜின், CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 27.6 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. சஸ்பென்ஷனுக்கு முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் டூயல் ஸ்ப்ரிங்குகள், இருபுறமும் சிங்கில் டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவது கேள்விக்குறியான விஷயம் தான்.

    • யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் தனது MT 15 V2 விலையை மாற்றியமைத்து இருக்கிறது.
    • புதிய விலை MT 15 V2 அனைத்து நிற வேரியண்ட்களுக்கும் பொருந்தும் என யமஹா தெரிவித்து இருக்கிறது.

    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் அக்டோபர் மாதம் MT 15 V2 மோட்டார்சைக்கிள் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு யமஹா MT 15 V2 அனைத்து நிற வேரியண்ட்களுக்கும் பொருந்தும். இம்முறை யமஹா MT 15 V2 மாடலின் விலை ரூ. 500 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் யமஹா இதே மாடல் விலையை ரூ. 1500 உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    புதிய விலை விவரம்:

    யமஹா MT 15 V2 மெட்டாலிக் பிளாக் ரூ. 1 லட்சத்து 63 ஆயிரத்து 900

    யமஹா MT 15 V2 ஐஸ் புளோ, ரேசிங் புளூ ரூ. 1 லட்சத்து 64 ஆயிரத்து 900

    யமஹா MT 15 V2 மோட்டோ ஜிபி எடிஷன் ரூ. 1 லட்சத்து 65 ஆயிரத்து 900

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    விலை தவிர யமஹா MT 15 V2 அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடல் 155 சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 18.14 ஹெச்பி பவர், 14.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் யமஹா MT 15 V2 மாடலில் அப்சைடு-டவுன் போர்க்குகள், அலுமினியம் ஸ்விங் ஆரம், பிரேக்கிங்கிற்கு சிங்கில் டிஸ்க் மற்றும் சிங்சில் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் எல்இடி ஹெட்லேம்ப், டெயில் லேம்ப், எல்சிடி கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, 10 லிட்டர் பியூவல் டேன்க் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • யமஹா வாடிக்கையாளர்களுக்கு ரைடிங் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பிராண்டு அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வீக்கெண்ட் நிகழ்வு நடத்தப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சியில் ஆயிரம் யமஹா ரசிகர்கள் கலந்து கொண்டு, ரைடிங் மற்றும் யமஹா தொழில்நுட்பங்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டனர்.

    "தி கால் ஆஃப் தி ப்ளூ" என்ற பிராண்டு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, யமஹா மோட்டார் இந்தியா குழுமம் சார்பில் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஐடிஏ ஸ்கடர் ஆடிட்டோரியத்தில் 'தி கால் ஆஃப் தி ப்ளூ வீக்கெண்ட்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    ப்ளூ ஸ்ட்ரீக்ஸ் (உணர்ச்சிமிக்க யமஹா உரிமையாளர்களின் சமூகம்) 500 க்கும் மேற்பட்ட ரைடர்ஸ் மற்றும் 1000 யமஹா ரசிகர்கள் இந்த வீக்கெண்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் மூலம், ஒவ்வொரு மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களும் யமஹாவின் பிரீமியம் மாடல் வரம்பில் சிறந்த தொழில்நுட்பம், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் பயணம் செய்யும் வாய்ப்பைப் பெற்றனர்.

    நிகழ்ச்சியின் போது, ​​பங்கேற்பாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும், அவர்களின் சவாரி திறனை கூர்மைப்படுத்தும் நோக்கிலும் ஜிம்கானா ரைடு போன்ற நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. மேலும் உற்சாகத்தை உருவாக்க, டெஸ்ட் ரைடு செயல்பாடு, யமஹா தயாரிப்பு வரம்பின் காட்சி மற்றும் ஒரு அக்சஸரீக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

    வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறையில் ஒரு பகுதியாக ரைடிங் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் யமஹா பிராண்டின் அர்ப்பணிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழ்நாட்டின் பிற இடங்களிலும் 'தி கால் ஆஃப் தி ப்ளூ வீக்கெண்ட்' நிகழ்வை தொடர்ந்து நடத்த திட்டமிட்டு இருப்பதாக யமஹா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    • யமஹா நிறுவனத்தின் 2023 FZ-15 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புது யமஹா மோட்டார்சைக்கிள் பெட்ரோல் மற்றும் எத்தனால் மூலம் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    யமஹா நிறுவனம் 2023 FZ-15 மோட்டார்சைக்கிளை பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் தென்னமெரிக்காவில் பேசர் FZ-15 என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் புதிய FZ-15 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    இந்த மோட்டார்சைக்கிளின் மிகப் பெரும் மாற்றமாக அதன் ஸ்டைலிங் உள்ளது. இதன் முன்புறம் மேம்பட்ட ஹெட்லேம்ப் செட்டப் உள்ளது. இது தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் FZ-25 போன்றே காட்சியளிக்கிறது. இது தவிர மோட்டார்சைக்கிளின் மற்ற ஸ்டைலிங் முழுக்க FZ-V 3 போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. 2023 FZ-15 மாடலில் பிரானி பியூவல் டேன்க், ஃபாக்ஸ் ஏர் வெண்ட்கள், சிறிய டெயில் லேம்ப், ஸ்டபி எக்சாஸ்ட் வழங்கப்பட்டு உள்ளது.


    இத்துடன் பைரெலி டையப்லோ ரோசோ 2 டயர்கள் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் 11.9 லிட்டர் பியூவல் டேன்க் கொண்டிருக்கிறது. இத்துடன் அதிகளவு கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் நீளமாக உள்ளது. இந்த மாடலில் 149சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த என்ஜின் பெட்ரோல் மட்டுமின்றி எத்தனால் மூலமும் இயங்கும்.

    செயல்திறனை பொருத்தவரை 12.2 ஹெச்பி பவர், 12.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. FZ-V3 மாடலில் உள்ள என்ஜின் 12.4 ஹெச்பி பவர், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த பைக்கின் இருபுறங்களிலும் 17 இன்ச் வீல்கள் உள்ளன.

    புதிய யமஹா FZ-15 மாடல் - ரேசிங் புளூ, மிட்நைட் பிளாக் மற்றும் மேக்மா ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் இந்த மோட்டார்சைக்கிள் பஜாஜ் பல்சர் N160, டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V மற்றும் சுசுகி ஜிக்சர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

    • யமஹா நிறுவனம் தனது பிராண்டு பிரச்சாரத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
    • இதன் மூலம் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயல்பாடுகளை தீவிரப்படுத்த இருக்கிறது.

    தி கால் ஆஃப் தி ப்ளூ பிராண்டு பிரச்சாரத்தின் கீழ், வலுவான பந்தய பாரம்பரியத்துடன் உலகளாவிய பிராண்டாக வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட பிறகு, இந்தியா யமஹா மோட்டார் பிரைவேட் லிமிடெட் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயல்பாடுகள் மற்றும் அறிமுகங்கள் மூலம் ஆர்வமுள்ள மதிப்பை தீவிரப்படுத்துவதன் மூலம் தனது இமேஜை உயர்த்திக் கொள்ள தேசிய பிராண்ட் பிரச்சாரத்தின் 3வது பதிப்பை இன்று அறிமுகப்படுத்தியது.

    2018 ஆம் ஆண்டு முதல், தி கால் ஆஃப் தி ப்ளூ பிராண்ட் பிரச்சாரத்தின் ஒவ்வொரு கட்ட அறிவிப்புடன், நிறுவனம் தனது தயாரிப்பு திட்டமிடல், சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாடு உத்திகளை பிராண்டின் உலகளாவிய பிம்பமான உற்சாகம், உடை மற்றும் விளையாட்டுத்தன்மை ஆகியவற்றிற்கு ஏற்ப செயல்படுத்தி வருகிறது.


    இதன் விளைவாக, பிரீமியம் பிரிவை மையமாகக் கொண்டு எட்டு புதிய உலகளாவிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது பிரீமியம் மோட்டார்சைக்கிள் பிரிவில் யமஹாவின் சந்தைப் பங்கை ஈர்க்க வழிவகுத்தது, இது 2018-இல் 10 சதவீதத்திலிருந்து 2021 இல் 15 சதவீதமாக உயர்ந்தது.

    இந்த நிகழ்ச்சியில், யமஹா மோட்டார் இந்தியா குழும நிறுவனங்களின் தலைவர் திரு. ஈஷின் சிஹானா, "இந்தியாவில், 'தி கால் ஆஃப் தி ப்ளூ' பிராண்ட் பிரச்சாரம், யமஹாவை வலுவான பந்தய பாரம்பரியம் கொண்ட பிரீமியம் பிராண்டாக நிலைநிறுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. பிராண்டை மேலும் கட்டியெழுப்பவும், இந்திய இளைஞர்களுக்குள் உரிமையின் பேரார்வம் மற்றும் பெருமையை உருவாக்கவும், தி கால் ஆஃப் தி ப்ளூ பதிப்பு 3.0 திட்டத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்."

    "மோட்டார்சைக்கிள் ஓட்டுவதை அவர்களின் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட பரந்த அளவிலான வாடிக்கையாளர்களை நாங்கள் அணுகுவோம். கூடுதலாக, நாங்கள் எங்கள் விளம்பர நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவோம். வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவத்தை வழங்க எங்கள் பிரீமியம் ப்ளூ ஸ்கொயர் ஸ்டோர்களின் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவோம்." என தெரிவித்தார்.

    • யமஹா நிறுவனத்தின் பிரீமியம் விற்பனை பிரிவாக புளூ ஸ்கொயர் செயல்பட்டு வருகிறது.
    • தமிழ் நாட்டில் இரண்டு புதிய புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் திறக்கப்பட்டன.

    யமஹா நிறுவனம் 'தி கால் ஆப் தி புளு' பிரச்சாரத்தின் கீழ் புதிதாக இரண்டு புளூ ஸ்கொயர் விற்பனை மையங்களை தமிழ் நாட்டில் திறந்துள்ளது. இவை முறையே வேலூர் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் அமைந்துள்ளன. யமஹாவின் ரேசிங் டிஎன்ஏ, பந்தய தன்மையை வெளிப்படுத்தும் வகையில் சுமார் ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிய புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

    புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் சமூக உணர்வை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் பிராண்டின் நெறிமுறைகளுடன் இணைவதற்கான தளத்தை உருவாக்கி இருக்கிறது. சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் -இல் யமஹாவின் பாரம்பரியத்தை வரையறுக்கும் பணியை புளூ ஸ்கொயர் மேற்கொள்கிறது. புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் யமஹாவின் பந்தய பாரம்பரியத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது.


    'தி கால் ஆப் தி புளு' பிரச்சாரத்தின் அங்கமாக தமிழ் நாட்டில் இரண்டு புதிய புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் திறப்பதில் யமஹா உற்சாகம் அடைகிறது. இந்தியா எங்களுக்கு மிக முக்கியமான சந்தை. இந்த பிரீமியம் விற்பனை மையங்கள் சர்வதேச மோட்டார் விளையாட்டுகளில் யமஹாவின் செழுமையான பாரம்பரியத்தை பிரதிநிதித்துப்படுத்துகிறது, என யமஹா மோட்டார் இந்தியா நிறுவன தலைவர் ஈஷின் சிஹானா தெரிவித்தார்.

    வலுவான சில்லறை வர்த்தக வலையமைப்பை உருவாக்க புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் வழி வகுக்கும். புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பிராண்டுடன் தொடர்பு கொள்ளவும், வாகன விவரங்களை அறியவும், உதிரிபாகங்கள் மற்றும் ஆடைகளை பார்க்க உதவும், என அவர் கூறினார்.

    ×