search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Worship tips"

    மன்னன் அஸ்வபதியின் அரண்மனையில் பணிபுரிந்தவள் மந்தரை மன்னனின் மகளான கைகேயியை தாய் போல் இருந்து வளர்த்தவள். மந்தரைக்கு கைகேயி மீது அளவு கடந்த பாசம் உண்டு.
    கேகய நாட்டு மன்னன் அஸ்வபதியின் அரண்மனையில் பணிபுரிந்தவள் மந்தரை. மன்னனின் மகளான கைகேயியை தாய் போல் இருந்து வளர்த்தவள். கைகேயியை தசரத சக்கரவர்த்தி மனம் முடித்து அயோத்தி அழைத்து வரும் போது, கைகேயிக்கு துணையாக மந்தரையும் அயோத்தி வந்து விட்டாள்.

    மந்தரைக்கு கைகேயி மீது அளவு கடந்த பாசம் உண்டு. அதனால் அவளுக்கு கவுசல்யாவின் மகனான ராமனின் மீது வெறுப்பு உண்டானது. மந்தரை கூன் விழுந்தவள் என்பதால் அவளை ‘கூனி’ என்றும் அழைப்பார்கள்.

    ஒரு முறை சிறுவனாக இருந்த ராமன், மந்தரையின் கூனை நேராக்க மண் உருண்டைகளை அவள் மீது வீசினான். அதில் மந்தரை நிலைதடுமாறி கீழே விழுந்தாள். அதைப் பார்த்து அங்கிருந்த பணிப்பெண்கள் பலரும் சிரித்துவிட்டனர். இதனால் ராமனின் மீதான மந்தரையின் வெறுப்பு அதிகமாகிவிட்டது.

    மந்தரை செய்த சூழ்ச்சியின் காரணமாகவே, ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டிய நிலை உருவானது.
    மகாபாரதத்தில் வரும், பல்வேறு சம்பவங்களின் பின்னணியில், நம் வாழ்வுக்கு தேவையான வாழ்வியல் தத்துவங்கள் பல சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க சம்பவம் தருமருக்கும், யட்சனுக்கும் நடந்த உரையாடல் ஆகும்.
    இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் வரும், பல்வேறு சம்பவங்களின் பின்னணியில், நம் வாழ்வுக்கு தேவையான வாழ்வியல் தத்துவங்கள் பல சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க சம்பவம் தருமருக்கும், யட்சனுக்கும் நடந்த உரையாடல் ஆகும். இன்றைய காலகட்டத்துக்கும் பொருத்தமாக பல விஷயங்கள் அதில் இருப்பதை படிப்பவர்கள் உணரலாம்.

    பஞ்ச பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாச காலம் முடிவடைந்து, ஓராண்டு காலம் அஞ்சாத வாசம் செய்ய வேண்டியதிருந்தது. அடர்ந்த வனத்தில் வசித்த அவர்களுக்கு ஒரு முறை தண்ணீர் தாகம் ஏற்பட்டது. அதனால் பக்கத்தில் உள்ள நீர்நிலைகளில் இருந்து குடிநீர் கொண்டு வரும்படி தருமர், நகுலனை அனுப்பினார்.

    அண்ணனது வார்த்தையை சிரமேற்கொண்டு சென்ற நகுலன், சற்று தொலைவில் தண்ணீர் நிறைந்த குளம் இருப்பதை பார்க்கிறான். முதலில் தனது தாகத்தை தணித்துக்கொண்டு, சகோதரர்களுக்கு நீர் எடுக்கலாம் என்று குளத்தில் இறங்கச் சென்றான்.

    அப்போது, “எனது கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர் தண்ணீரை அருந்து..” என்று ஒரு அசரீரி கேட்டது. அதை பெரிதாக எண்ணாமல் தண்ணீரை அருந்திய நகுலன் நினைவு இழந்து கரையில் விழுகிறான்.

    வெகு நேரமாகியும் நகுலன் வராததால் சகாதேவனை தருமர் அனுப்புகிறார். அவனுக்கும் அதே நிலை ஏற்படுகிறது. பின்னர், அர்ச்சுனன் மற்றும் பீமன் ஆகியோரும் குளத்திற்கு வந்து நீர் பருக முயன்று மயக்கம் அடைகின்றனர்.

    என்ன நடக்கிறது என்பதை அறியாமல் குழப்பமடைந்த தருமர், தானே குளத்தை நோக்கி வந்தார். அப்போது மீண்டும் அசரீரி ஒலித்தது. அதை கவனமாக கேட்டு, அதன் கேள்விகளுக்கு தருமர் பதிலளித்தார். அந்த அசரீரியை கவனமாக கேட்டு, யட்சனின் கேள்விகளுக்கு பதிலளிக்க சம்மதிக்கிறார். அவற்றில் சில கேள்விகளுக்கான பதிலின் சாராம்சத்தை இங்கே பார்க்கலாம்.

    யட்சன்: மனிதனுக்கு சரியான துணை எது?

    தருமர்: துணிச்சல்.

    யட்சன்: ஒருவன் எப்போது புத்திமான் ஆகிறான்?

    தருமர்: பெரியோர்கள் அறிவுரைப்படி செயல்படும்போது.

    யட்சன்: பயிர் செய்பவருக்கு எது சிறந்தது?

    பதில்: மழைதான் சிறந்தது.

    யட்சன்: செல்வம், அறிவு இருந்தும் ஒருவன் இறந்தவன் ஆவது எப்போது?

    தருமர்: விருந்தினர், முன்னோர்களுக்கு மரியாதையுடன் உணவு தராதபோது.

    யட்சன்: பூமியை விட தாங்கும் சக்தி பெற்றது எது?

    தருமர்: ஒரு தாயின் மனம்.

    யட்சன்: ஒருவனுக்கு ஆகாயத்தை விட உயர்ந்தது எது?

    தருமர்: அவனது தந்தை.

    யட்சன்: காற்றை விட வேகமானது எது?

    தருமர்: மனிதனின் மனம்.

    யட்சன்: புல்லைவிட அலட்சியமாக கவனிக்கத்தக்கது எது?

    தருமர்: கவலை.

    யட்சன்: தனது வேகம் காரணமாக வளரு வது எது?

    தருமர்: நதி.

    யட்சன்: தனது ஊரை விட்டு செல்ப வனுக்கு நண்பன் யார்?

    தருமர்: அவன் பெற்ற கல்வி.

    யட்சன்: திருமணம் ஆனவனுக்கு நல்ல தோழமை தருவது யார்?

    தருமர்: அவன் மனைவி

    யட்சன்: நோயாளிக்கு நண்பன் யார்?

    தருமர்: நல்ல வைத்தியன்.

    யட்சன்: சாகப்போகிற நிலையில் உள்ளவ னுக்கு உற்ற தோழன் யார்?

    தருமர்: அவன் செய்த தர்மங்கள்.

    யட்சன்: புகழ் எதில் நிலை பெற்றிருக்கிறது?

    தருமர்: ஒருவன் செய்யும் தானம் மூலமாக.

    யட்சன்: மனிதனின் சுகம் எதனால் நிலை பெறுகிறது?

    பதில்: நல்லொழுக்கத்தின் மூலம்.

    யட்சன்: ஒரு மனிதன் பெறக்கூடிய சுகங் களில் உயர்ந்தது எது?

    தருமர்: மன திருப்தி.

    யட்சன்: சிறந்த தருமம் எது?

    தருமர்: ஜீவ காருண்யம்.

    யட்சன்: மற்றவர்களுடைய அன்புக்கு பாத்திரமாகிறவன் யார்?

    தருமர்: கர்வம் இல்லாதவன்.

    யட்சன்: எதை விடுவதன் மூலம் மனிதன் துன்பத்தைத் தவிர்க்கிறான்?

    தருமர்: கோபத்தை.

    யட்சன்: எதை விடுகிற மனிதன் பொருள் உள்ளவன் ஆகிறான்?

    தருமர்: தர்ம விரோதமான ஆசைகளை விடுபவன்.

    யட்சன்: செல்வம் மிகுந்தவன் யார்?

    தருமர்: அமைதி மற்றும் தெளிவுடன் பொருள்களை சமமாக நோக்குப வன்.

    யட்சன்: மனிதனால் வெல்ல முடியாத பகை வன் யார்?

    தருமர்: கோபம்

    யட்சன்: முடிவே இல்லாத வியாதி எது?

    தருமர்: பேராசை.

    யட்சன்: யார் சாது?

    தருமர்: எல்லா உயிர்களிடத்திலும் அன்போடு இருப்பவன்.

    யட்சன்: எது தைரியம்?

    தருமர்: ஐம்புலன்களை அடக்குவது.

    யட்சன்: எந்த மனிதன் பண்டிதன் ஆகிறான்?

    தருமர்: தர்மத்தை கடைப்பிடிப்பவன்.

    யட்சன்: அறம், பொருள், இன்பம் ஆகி யவை ஒன்றாக சேருவது எப்படி?

    தருமர்: கணவனும், மனைவியும் இணைந்து செயல்படும்போது.

    யட்சன்: யார் அழிவற்ற நரகத்தை அடை வார்?

    தருமர்: தானம் கொடுப்பதாக கூறிவிட்டு இல்லை என்று சொல்பவன், தர்ம வழி செயல்கள், முன்னோர் சடங்குகளில் பொய் கூறுபவன், செல்வம் இருந்தும் பிறருக்கு தராத வன்.

    யட்சன்: இனிமையாக பேசுகிறவன் எதை பெறுகிறான்?

    தருமர்: மற்றவர்களின் அன்பை.

    யட்சன்: ஆலோசனை செய்து காரியம் செய்பவன் எதை அடைகிறான்?

    தருமர்: வெற்றி.

    யட்சன்: தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சி எது?

    தருமர்: உயிரினங்கள் மரணமடைவது.

    யட்சன்: எது ஆச்சரியம்?

    தருமர்: இறந்தவர்களை பார்த்தும்கூட, மனி தர்கள் தங்களுக்கு மரணமில்லா தது போல் நினைத்து வாழ்நாளை கழிப்பது.

    தன்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் தருமர் பதலளித்ததைக் கேட்டு, யட்சன் மகிழ்ந்தான். இதையடுத்து மயங்கி கிடந்த தருமரின் தம்பிகள் அனைவரும் எழுந்து அண்ணனுடன் சென்றனர்.

    மேற்கண்ட கேள்விகளுக்கு விடை தெரியும் வரை யட்சனாக இருக்கும்படி சாபம் பெற்றிருந்த யட்சன், தேவனாக மாறி தனது உலகத்திற்குச் சென்றான்.
    ஒவ்வொரு சிவாலயத்திற்கும் ஒவ்வொரு விருட்சம் ஸ்தல விருட்சமாக அமையும். கோவிலுக்குச் செல்லும் பொழுது அந்த விருட்சங்களை வழிபட்டு வந்தால் நமக்கு வாழ்வில் விருத்தி அம்சம் கூடுதலாகக் கிடைக்கும்.
    இயல்பாக இறைவனால் படைக்கப்பட்டது இயற்கை. மனிதனால் உருவாக்கப்பட்டது செயற்கை. என்ன இருந்தாலும் இயற்கை சக்தியை நம்மால் வெல்ல முடியாது. அதனால் தான் இயற்கைக்கு ஐம்பூதம் என்று பிரமாண்டமான உருவம் கொடுத்து அழுதும், தொழுதும் நம்முன்னோர்கள் வழிபட்டனர்.

    அதில் மண்ணில் முளைக்கும் தாவரங்கள் எண்ணில்லாத நற்பலன்களைத் தருவதாக அமைகின்றது. ஆரோக்கியம் சீராக வேண்டுமானால் மூலிகைகள், பழங்களை உண்ண வேண்டும். அதிர்ஷ்டம் நம்மை நாடிவரவேண்டுமானால் மாபெரும் மரங்களை நாம் ஆராதிக்க வேண்டும். மழை வரவேண்டுமானால், மரம் வளர்க்க வேண்டும். மழலை பிறக்க வேண்டுமானால் மரத்தைச் சுற்றி வந்து நாம் வழிபட வேண்டும்.

    இறைவன் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றான். அதனால் தான் “தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்” என்று இறைவனைக் குறிப்பிடுகிறார்கள். நீராய், நிலமாய், தீயாய், காற்றாய், நெடுவானாய் நிற்பவன் இறைவன்.

    கண்களுக்குத் தெரியாமல் இருக்கும் கடவுளை வழிபடுவதற்கு எண்ணற்ற முறைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தாவரங்கள். தாவர வழிபாட்டின் மூலம் இறையருளைப் பெறமுடியும். தாவரங்களை, ‘விருட்சம்’ என்று நாம் அழைக்கின்றோம்.

    பழமை வாய்ந்த ஒவ்வொரு சிவாலயங்களிலும் பாருங்கள். ஒவ்வொரு சிவாலயத்திற்கும் ஒவ்வொரு விருட்சம் ஸ்தல விருட்சமாக அமையும். கோவிலுக்குச் செல்லும் பொழுது அந்த விருட்சங்களை வழிபட்டு வந்தால் நமக்கு வாழ்வில் விருத்தி அம்சம் கூடுதலாகக் கிடைக்கும்.

    சரணாகதி தத்துவத்தை உணர்ந்த பொழுதுதான் வழிபாடுகள் உருவாகத் தொடங்கின. நெருப்பை, ‘செந்தீ’ என உருவ வழிபாடாகவும், வாயு பகவானின் மகனை அனுமனாகவும் உருவங்களைக் கொடுத்து வழிபடத் தொடங்கினான்.

    இந்த வழிபாட்டினால் உள்ளம் சீராகியது. உடல் சீராவதற்கு மூலிகைகளைப் பறித்துச் சாப்பிட்டான். பின் ஆரோக்கியம் சீரானது. பிறகு இறைவழிபாட்டில் ஆர்வம் மிகுந்து தாவரங்களையும் போற்றி வழிபடத் தொடங்கினர். இப்படி உருவாகியது தான் தாவர வழிபாடு.

    வில்வம், துளசி, வேம்பு, அரசு, அருகு போன்றவை தெய்வீக மூலிகைகள். ‘வில்வம்’ என்பது சிவனுக்கு உகந்ததாகும். வில்வ தீர்த்தத்தை நமக்கு சிவாலயங்களில் தருவார்கள். வில்வ இலையை சிவனுக்கு அர்ச்சனை செய்தால் எண்ணற்ற பலன் கிடைக்கும். சிவராத்திரியன்று ஒரு வேடன் சிவனுக்கு வில்வ இலைகளை அர்ச்சித்து முக்தியடைந்த கதையைப் புராணங்கள் கூறுகின்றன.

    ‘துளசி இலை’ என்பது திருமாலிற்கு உகந்ததாகும். இது உஷ்ண குணம் வாய்ந்ததாகும். இருமல், சளி போன்றவற்றைப் போக்கும் தன்மையும், விஷ முறிவுத் தன்மையும் இந்த மூலிகைக்கு உண்டு.

    ‘வேப்பிலை’ என்பது அம்பிகைக்கு உகந்ததாகும். கிருமி நாசினி என்பதால் வீட்டில் வேம்பு வளர்த்து அதன் காற்றைச் சுவாசித்தால் எந்த நோயும் நன்மை அணுகாது.

    அரச மரங்களின் அடியில் வீற்றிருக்கும் நாகர், விநாயகர் போன்றவற்றை குழந்தை இல்லாத தம்பதியர் அதிகாலையில் சுற்றி வந்து வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். ஏனென்றால், அரச மரத்தின் காற்று, குழந்தைப் பேற்றைக் கொடுக்கும் தன்மை வாய்ந்தது. அரச மரத்தில் அத்தனை தேவதைகளும் குடியிருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன.

    அருகம்புல் என்பது விநாயகருக்கு மிகவும் உகந்தது. மிகுந்த குளிர்ச்சி மிக்கது. ரத்தத்தைச் சுத்தமாக்கும், விஷத்தைப் போக்கும் தன்மை கொண்டது. ஒவ்வொரு நாளும் விநாயகருக்கு 16 அருகம்புல் வைத்து வழிபட்டால் மூன்று வருடங்களுக்குள் முன்னேற்றம் பலமடங்காக உயரும். அணிவிக்கும் பொழுது அதற்கான சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.

    வீட்டின் முன்புறம் துளசி மாடம் வைத்து வழிபட வேண்டும். சுமங்கலிப் பெண்கள் துளசிக்கு மஞ்சள், குங்குமம் வைத்து கோலமிட்டு தினமும் துளசி பாடல்கள் மற்றும் லட்சுமி பாடல்களைப் பாடி வழிபட்டால் தனவரவு தாராளமாக வந்து சேரும். தாலி பாக்கியமும் கிடைக்கும்.

    இப்படி அற்புதமான தெய்வீக மூலிகைகளை அவசியம் ஒவ்வொருவரும் வழிபட வேண்டும். ஒவ்வொரு கோவிலுக்கும் செல்லும் பொழுது விருட்சங்களை மறக்காமல் வழிபட்டு வாருங்கள்.

    விருச்சிக ராசிக்காரர்கள் கண்டிப்பாக விருட்ச வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். மற்ற ராசி நட்சத்திரக்காரர்கள் அவரவர்களுக்குரிய விருட்சங்களைத் தேர்ந்தெடுத்து அவை இருக்கும் ஸ்தலங்களில் சென்று வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். நிம்மதி கிடைக்கும்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள மாத்தூரில் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய விருட்சங்களை கோவிலின் முன்புறம் வைத்துள்ளனர். அவரவர் களுக்குரிய விருட்சங்களை வழிபட்டு வருவதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

    வாழை மரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்ட கோவிலில் சென்று வழிபட்டால் வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு கிடைக்கும். சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடி என்ற ஊரிலுள்ள சிவாலயத்தில் ஸ்தல விருட்சமாக வாழை உள்ளது.

    பலா மரத்தை விருட்சமாகக் கொண்ட தலம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள கீழ்ச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம். இங்குள்ள பலா மர விருட்சத்தை வழிபட்டால் குடும்ப ஒற்றுமை கூடும்.

    இயற்கையைப் போற்றுவோம், வாழ்வில் இன்பங்களை நாளும் பெறுவோம்.
    இந்து சமயத்தில் சில வழிபாடுகள் ஐந்தாக அமைந்துள்ள. அவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பஞ்ச கன்னியர்: அகலிகை, சீதை, தாரை, திரவுபதி, மண்டோதரி.
    பஞ்சவாசம்: லவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.
    பஞ்சாமிர்தம்: சர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.
    பஞ்சபாண்டவர்: தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன்.

    பஞ்சசீலம்: கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை.
    பஞ்சபட்சி: வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.
    பஞ்சபுராணம்: தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்
    பஞ்சரத்தினம்: வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.

    பஞ்சவர்ணம்: வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.
    பஞ்சாங்கம்: கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம்.
    பஞ்சமூலம்: செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு.
    பஞ்சபாதகம்: பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.

    பஞ்சபாணம்: முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.
    பஞ்சாயுதம்: சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.
    பஞ்சபரமோட்டி: அருகர், சித்தர், உபாத்தியாயர், ஆசிரியர், சாதுக்கள்.
    பஞ்சசிகை: தலை, உச்சி, கண், புருவம், முழங்கை.

    பஞ்சதேவர்: பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன்.
    பஞ்சஸ்தலம்: காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்.
    பஞ்ச பூதங்கள்: நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்
    ஆன்மீகத்தில் ஒரு செயலை செய்யும்போது கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தால், அந்த செயல் நல்லதாகவே அமையும்.
    ஆன்மீகத்தில் ஒரு செயலை செய்யும்போது கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தால், அந்த செயல் நல்லதாகவே அமையும்.

    அது போன்றதுதான் நாம் ஆன்மிகத்தில் பின்பற்றும் சில பழக்க வழக்கங்கள். மேலோட்டமாக பார்க்கும்போது இவை சாதரணமானதாக் தெரியலாம். ஆழ்ந்து நோக்கினால் அதன் உண்மைப் பொருளை உணரலாம்.

    சில நம்பிக்கைகள்....

    1. மளிகை பொருட்களை மற்ற நாட்களில் வாங்கிவிட்டு உப்பு மட்டும் வெள்ளிக்கிழமைகளில் வாங்கினால் வீட்டில் செல்வம் எப்போதும் சேர்ந்து கொண்டே இருக்கும்.

    2. அஷ்டமி, நவமி நாட்களில் வெளியே செல்ல நேர்ந்தால் துளசி செடியை வலமாக 3 முறை வலம்வந்து வணங்கிச் சென்றால் நினைத்த காரியம் கைகூடும்.

    3. செவ்வாய், வெள்ளி, பவுர்ணமி நாட்களில் வீட்டில் குத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது சகல சந்தோஷத்தையும் அள்ளித்தரும்.

    4. உப்பு, வெந்தயம், கருப்பு எள் ஆகியவற்றை சிறிது இடித்து அதை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வீட்டின் தென்மேற்கு மூலையில் (கன்னிமூலை) வைத்து விட்டால், வரவேண்டிய பணம் விரைவில் வந்து சேரும். 48 நாட்களுக்கு ஒருமுறை வெள்ளைத்துணியை பிரித்து மாற்றிக் கொள்ளலாம்.

    5. வீட்டிற்கு வருபவர்களுக்கு குங்குமம் கொடுப்பது பண்டைய தமிழர்களின் மரபு. அதை வீட்டிற்கு வந்தவுடன் கொடுக்க வேண்டும். வந்தவர்கள் வெளியே செல்லும்போது கொடுத்தால் நம் வீட்டின் சக்தி அவர்களுடன் சென்றுவிடும் என்பது நம்பிக்கை.
    அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்கியமாக இருக்கும்.
    அதிகாலை வேலையில் எழுவது பல நன்மைகளைத்தரும் என்று சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புதுத்தெம்பையும், உற்சாகத்தையும் கொடுக்கின்றன. கண்கள் ஆரோக்கியத்தையும், உடல் வலிமையையும் பெறுகின்றன. அதனால் தான், சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள்.

    சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்பதால், அன்றைய தினம் நல்லெண்ணெய் குளியல் செய்வது மிகவும் சிறப்புடையது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    இந்த அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்கியமாக இருக்கும். மனஅழுத்தம் இல்லாமலும், பரபரப்பில்லாமலும் காரியங்கள் சிறப்பாக முடியும். உடலுக்கும், உள்ளத்துக்கும் ஊட்டம் தருவது காலையில் கண் விழிப்பதாகும். உஷத்காலம் உஷஸ் என்னும் பெண் தேவதையைப் பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகிறான்.

    இதனாலேயே விடியற்காலை நேரம் உஷத் காலம் எனப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப் பாய்வதால் தான் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடு தல்விசேசமாக சொல்லப்படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படுகிறது. அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

    பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணிவரை.
    பெரியவர்கள் வாழ்த்தும் போது 16-ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துவார்கள். இது கீழ்கண்ட 16 வகையான செல்வங்களைக் குறிக்கும்.
    பெரியவர்கள் வாழ்த்தும் போது 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துவார்கள். இது கீழ்கண்ட 16 வகையான செல்வங்களைக் குறிக்கும்.

    வாழ்க்கையில் நமக்கு வழிகாட்டக்கூடிய கல்வி, நீண்ட ஆயுள், நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள், வாழ்க்கைக்கு தேவையான செல்வம், உழைப்புக்கு தேவையான ஊதியம், நோயற்ற வாழ்க்கை, எதற்கும் கலங்காத மனவலிமை, அன்புள்ள கணவன் மனைவி, அறிவு ஒழுக்கம் ஆற்றல் கொண்ட குழந்தைகள், மேன்மேலும் வளரக்கூடிய புகழ், மாறாத வார்த்தை, தடங்கலில்லாத வாழ்க்கை, வருவாயைச்சிக்கனமாக செலவழித்து சேமிப்பு அதிகரித்தல், திறமையான குடும்ப நிர்வாகம், நமக்கு உதவக்கூடிய பெருமக்களின் தொடர்பு, பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல்.

    இந்த பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.
    ×