search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women Molestation"

    ஆண்டிப்பட்டி அருகே மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த கணவன் நாட்டு வைத்தியரை கத்தியால் குத்தினார்.
    ஆண்டிப்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியை சேர்ந்தவர் மணி(வயது55). இவர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கு திருமலாபுரம் பிரிவு பகுதியில் நாட்டு வைத்தியம் பார்த்து வருகிறார். தேனி பொம்மணம்பட்டியை சேர்ர்ந்தவர் சின்னராஜ்.

    இவரது மனைவி மணியிடம் சிகிச்சைக்காக சென்றுள்ளார். சிகிச்சை பார்க்கும் சாக்கில் அவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார்.

    ஆத்திரமடைந்த சின்னராஜ் இளம்பெண்ணின் சகோதரர் செல்வம் ஆகியோர் மணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென சின்னராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணியை சரமாரியாக குத்தினார்.

    இதில் படுகாயமடைந்த மணி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் சின்ராஜ், செல்வம் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் மணி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். #kanimozhi #pollachimolestation
    சென்னை:

    பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் குறித்து கனிமொழி எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தில் “பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது. 

    இந்த கூட்டத்தையும், இதில் சம்பந்தப்பட்டவர்களையும், அரசும் அமைச்சர்களும் காப்பாற்ற முனையாமல், சிறப்பு நீதிமன்றத்தை நிறுவி, உடனடியாக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்” என பதிவிட்டுள்ளார். #kanimozhi #pollachimolestation
    சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து கத்திமுனையில் மிரட்டி கற்பழித்த கார் டிரைவர் சிக்கினார்.

    சென்னை:

    சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து ஒரு கும்பல் காரில் கடத்தி கற்பழிப்பதாகவும், அவர்களிடம் நகைகளை கொள்ளையடிப்பதாகவும் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இது தொடர்பாக யாரும் புகார் அளிக்காத நிலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் புகார் அளித்தார். நீலாங்கரை போலீஸ் இன்ஸ் பெக்டர் நடராஜன் மற்றும் பெண் போலீசார் அடங்கிய தனிப்படையினர் பெண் கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    காரில் ஏமாற்றி அழைத்துச் சென்று ஆள் நட மாட்டம் இல்லாத இடத்தில் வைத்து வாலிபர் ஒருவர் காருக்குள்ளேயே வைத்து கற்பழித்து விட்டதாக திடுக்கிடும் தகவலை அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து உஷாரான போலீசார் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக துப்பு துலக்கினர்.

    பாதிக்கப்பட்ட பெண் புத்திசாலித்தனமாக செயல்பட்டு கார் நம்பரை குறித்து வைத்துக் கொண்டு போலீசிடம் கொடுத்திருந்தார். அதனை வைத்து விசாரணை நடத்திய போலீசார் குறிப்பிட்ட காரை ஓட்டி வந்த டிரைவர் சுரேசை மடக்கி பிடித்தனர்.

    கால்டாக்சி டிரைவரான அவர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், அடையாறு, திருவான்மியூர், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. சாலை யோரமாக நடந்து செல்லும் நடுத்தர வயதைச் சேர்ந்த திருமணமான பெண்களை குறி வைத்து காரில் ஏமாற்றி அழைத்துச் சென்று சுரேஷ் கற்பழித்து இருப்பது தெரியவந்தது.

    சுரேஷ் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    வேறு ஒருவருக்கு சொந்தமான கால் டாக்சியில் வாடகை ஓட்டுனராக பணி புரியும் எனக்கு திருமணமான பெண்கள் மீது எப்போதுமே ஒரு கண் உண்டு. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் சாலையில் நடந்து சென்றால் அவர்களிடம் நைசாக பேச்சு கொடுத்து காரில் ஏற்றுவேன்.

    அவர்கள் என்னை நம்புபடி பேசிக் கொண்டே காரை ஓட்டிச்செல்வேன். ஒதுக்குப்புறமான இடம் பார்த்து காரை நிறுத்தி விட்டு ஏ.சி.யை முழுவதுமாக ஓட விடுவேன். பின்னர் கார் கண்ணாடிகளை ஏற்றி விட்டு பின்னால் அமர்ந் திருக்கும் பெண்ணிடம் சத்தம் போட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டுவேன்.

    இதனால் பயந்து போய் ஒரு சிலர் சத்தம் போட மாட்டார்கள். அப்படியே யாராவது சத்தம் போட்டாலும் கண்ணாடிகள் முடி இருப்பதால் அது வெளியில் கேட்காது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு காருக்குள் வைத்தே அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளேன்.

    கடந்த ஓராண்டாக இது போல சுமார் 10 பெண்களிடம் கைவரிசை காட்டியுள்ளேன். எல்லாம் முடிந்த பின்னர் பெண்கள் அணிந்திருக்கும் நகைகள் அனைத்தையும் பறித்துக் கொள்வேன்.

    இதுபோன்று பாதிப்புக் குள்ளானவர்கள் புகார் எதுவும் கொடுக்காததால் தப்பி வந்தேன்.

    இவ்வாறு சுரேஷ் போலீசிடம் கூறியுள்ளார்.

    கண்ணகி நகரைச் சேர்ந்த சுரேஷ் மீது கற்பழிப்பு வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்சென்னை இணை கமி‌ஷனர் மகேஸ்வரி, அடையாறு துணை கமி‌ஷனர் சசாங்ஷாய் ஆகியோரது மேற்பார்வையில் தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு சுரேசை கைது செய்துள்ளனர்.

    புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவனை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் அண்டு 15 வயது சிறுமியை கற்பழித்த வழக்கும் சுரேஷ் மீது உள்ளது.

    இந்த வழக்கில் புகார் அளித்துள்ள பெண் சாலையோரமாக கடை வைத்திருப்பவர் என்று போலீசார் தெரிவித்தனர். முதலில் புகார் அளிக்க தயங்கிய அவரிடம் பெண் போலீசார் நீண்ட நேரமாக விசாரணை செய்து சுரேஷ் நடத்திய லீலைகளை அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளனர். சுரேசால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது இருந்தால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இப்படி புகார் அளிக்கும் பெண்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்படாது என்றும் அவர்கள் பற்றிய ரகசியங்கள் காக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #tamilnews

    கேரளாவில் பாவமன்னிப்பு கேட்ட பெண் கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக பாதிரியார்களை கைது செய்ய போலீசார் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு முன்பு பாதிரியார் ஒரு வரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு திருமணமும் நடைபெற்றது. தன்னை பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்ததை பாவமன்னிப்பு அறிக்கை செய்ய அந்த பெண் அந்த பகுதியில் உள்ள ஒரு ஆலயத்திற்கு சென்று பாதிரியாரிடம் நடந் தவைகளை கூறி பாவமன்னிப்பு கேட்டார்.

    ஆனால் அதை வைத்தே அந்த பெண்ணை மிரட்டி அந்த ஆலயத்தைச் சேர்ந்த பாதிரியார்கள் ஜோசப் மேத்யூ, ஆபிரகாம் வர்க்கீஸ், ஜாண்சன் வி.மேத்யூ, ஜெய்ஸ் கே.ஜார்ஜ் ஆகிய 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    இது பற்றி அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வந்ததும் அவர் அது பற்றி வாட்ஸ்-அப்பில் தகவல் வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதைத் தொடர்ந்து அந்த 4 பாதிரியார்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். தங்கள் மீதான புகாரை மறுத்த பாதிரியார்கள் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

    முதலில் ஜோசப் மேத்யூ, ஆபிரகாம் வர்க்கீஸ் ஆகியோரும் அதைத் தொடர்ந்து ஜாண்சன் வி.மேத்யூ, ஜெய்ஸ் கே.ஜார்ஜ் ஆகியோரும் முன்ஜாமீன் கேட்டு மனு செய்தனர். இந்த மனு மீதான விசாரணையை கோர்ட்டு வருகிற 9-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

    இதற்கிடையில் பாதிரியார்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது பற்றி பாதிக்கப்பட்ட பெண் திருவல்லா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலமும் அளித்தார். இதனால் இந்த விவகாரம் சூடு பிடித்தது.

    அடுத்த கட்டமாக பாதிரியார்கள் 4 பேரும் கைது செய்யப்படுவார்கள் என்ற பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா கூறியதாவது:-

    இளம்பெண்ணை 4 பாதிரியார்கள் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முக்கிய ஆதாரங்களை போலீசார் திரட்டி வருகிறார்கள். ஆதாரங்கள் கிடைத்த பிறகு தான் கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

    குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக போலீசார் கைது நடவடிக்கையை தாமதபடுத்துவதாக கூறுவதை ஏற்க முடியாது. இந்த சம்பவம் நடந்து 9 வருடங்கள் ஆகிவிட்டதால் ஆதாரங்களை சேகரிக்க போலீசாருக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது என்றார். #tamilnews
    ×