search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "knife point"

    • திருச்சியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரரை கத்தி முனையில் மிரட்டிய ரவுடியை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்
    • போலீஸ்காரரை மிரட்டுவதை அங்கிருந்த சில இளைஞர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைரலாக்கி உள்ளனர்

    திருச்சி:

    திருச்சியை அடுத்த திருவெறும்பூர் கக்கன் காலனியில் டாஸ்மாக் கடை மற்றும் அதனையொட்டி பாரும் உள்ளது. இதில் திருவெறும்பூர் செல்வபுரம் காந்திநகர் 2-வது தெரு பகுதியைச் சேர்ந்த ரவுடி விஷ்ணு என்கிற வெங்கடேஷ் (வயது 27), திருச்சி கைலாஷ் நகர் மேற்கு கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் (35) ஆகிய இருவரும் இரவு வெகு நேரம் அமர்ந்து மது அருந்தினர்.

    பின்னர் மதுக்கடையை அடைக்க வேண்டிய நேரத்தை தாண்டியும் அவர்கள் வெளியேறாமல் மது கேட்டு டாஸ்மாக் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீஸ்காரர் வீரமணி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.

    பின்னர் பார் ஊழியர்களிடம் தகராறு செய்த ரவுடி விஷ்ணு மற்றும் பிரவீன் குமாரை அவர் பிடிக்க முயன்றார். அப்போது மது போதையில் இருந்த ரவுடி விஷ்ணு போலீஸ்காரருக்கு கத்தி முனையில் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றனர்.

    போலீஸ்காரரை மிரட்டுவதை அங்கிருந்த சில இளைஞர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.

    பின்னர் அதனை நண்பர்களுக்கு பகிர்ந்தனர். இதனால் கத்தி முனையில் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வீரமணி திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் ரவுடி விஷ்ணு அவரது நண்பர் பிரவீன் குமார் ஆகிய இருவரும் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெம்பாக்கத்தில் தந்தையை தாக்கி கத்தி முனையில் இளம்பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அருகே உள்ள சோதியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 52). கூலி தொழிலாளி. இவரது மகள் மகேஸ்வரி (19). சம்பவத்தன்று பச்சையப்பன் தனது மகள் மகேஸ்வரியை காஞ்சிபுரத்திற்கு பைக்கில் அழைத்து சென்று கொண்டிருந்தார்.

    சோதியம்பாக்கம் கோழிபண்ணை அருகே சென்றபோது எதிர காரில் வந்த 3 நபர்கள் பைக்கை மறித்து பச்சையப்பனை கத்தியை காட்டி மிரட்டி தாக்கினர். பின்னர் மகேஸ்வரியை காரில் கடத்தி சென்று விட்டனர்.

    இது குறித்து பச்சையப்பன் தூசி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை கடத்தி சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    மதுரையில் கத்தி முனையில் பணம் பறித்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை ஹார்வி பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 18). இவர் பஜார் சாலையில் நடந்து சென்றபோது 2 பேர் வழி மறித்தனர். அவர்கள் கத்தியை காட்டி நாகராஜை மிரட்டி பணத்தை பறித்துச் சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, திடீர்நகர் மணிகண்டன் (28), அண்ணாநகர் பாலா பிரவீன் (25) ஆகியோரை கைது செய்தனர்.

    மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, சிந்தாமணி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் சாலையில் நடந்து சென்றபோது 2 பேர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக கீரைத்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (19), திருச்சி காளீஸ்வரன் (22) ஆகியோரை கைது செய்தனர்.

    கிண்டி கத்திப்பாரா பாலம் அருகே கத்திமுனையில் வழிப்பறி செய்த 8 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

    ஆலந்தூர்:

    சென்னை பரங்கிமலை பட்ரோடு பகுதியில் வசித்து வருபவர் ஹரிஜ்குமார். இவர் கடந்த ஜூன் மாதம் தனது தந்தையுடன் காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    கிண்டி கத்திப்பாரா பாலம் அருகே போலீஸ் இணை கமி‌ஷனர் அலுவலகம் பகுதியில் சென்ற போது 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் காரை வழிமறித்தனர். பின்னர் கத்திமுனையில் மிரட்டி காரில் இருந்த 2 சூட்கேஸ்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இது தொடர்பாக ஹரிஜ்குமார் பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பரங்கிமலை துணை கமி‌ஷனர் முத்துஅலி உத்தரவின் பேரில் உதவி கமி‌ஷனர் மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் மோட்டார் சைக்கிள் எண்ணை போலீசார் கண்டுபிடித்தனர்.

    அதன் பேரில் விசாரணை நடத்தி வியாசர்பாடியை சேர்ந்த ரத்னம், ஜெகதீஸ்வரன் அபினேஷ், டில்லிபாபு, பிரகாஷ், சரவணன், திருவொற்றியூர் லியோ, அண்ணாநகர் லாரன்ஸ் ஆகிய 8 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வியாசர்பாடி பகுதியில் நகை பறிப்பு வழக்குகள் உள்ளன. 4 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாருக்கு துணை கமி‌ஷனர் முத்துசாமி ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.

    சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து கத்திமுனையில் மிரட்டி கற்பழித்த கார் டிரைவர் சிக்கினார்.

    சென்னை:

    சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து ஒரு கும்பல் காரில் கடத்தி கற்பழிப்பதாகவும், அவர்களிடம் நகைகளை கொள்ளையடிப்பதாகவும் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இது தொடர்பாக யாரும் புகார் அளிக்காத நிலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் புகார் அளித்தார். நீலாங்கரை போலீஸ் இன்ஸ் பெக்டர் நடராஜன் மற்றும் பெண் போலீசார் அடங்கிய தனிப்படையினர் பெண் கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    காரில் ஏமாற்றி அழைத்துச் சென்று ஆள் நட மாட்டம் இல்லாத இடத்தில் வைத்து வாலிபர் ஒருவர் காருக்குள்ளேயே வைத்து கற்பழித்து விட்டதாக திடுக்கிடும் தகவலை அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து உஷாரான போலீசார் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக துப்பு துலக்கினர்.

    பாதிக்கப்பட்ட பெண் புத்திசாலித்தனமாக செயல்பட்டு கார் நம்பரை குறித்து வைத்துக் கொண்டு போலீசிடம் கொடுத்திருந்தார். அதனை வைத்து விசாரணை நடத்திய போலீசார் குறிப்பிட்ட காரை ஓட்டி வந்த டிரைவர் சுரேசை மடக்கி பிடித்தனர்.

    கால்டாக்சி டிரைவரான அவர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், அடையாறு, திருவான்மியூர், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. சாலை யோரமாக நடந்து செல்லும் நடுத்தர வயதைச் சேர்ந்த திருமணமான பெண்களை குறி வைத்து காரில் ஏமாற்றி அழைத்துச் சென்று சுரேஷ் கற்பழித்து இருப்பது தெரியவந்தது.

    சுரேஷ் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    வேறு ஒருவருக்கு சொந்தமான கால் டாக்சியில் வாடகை ஓட்டுனராக பணி புரியும் எனக்கு திருமணமான பெண்கள் மீது எப்போதுமே ஒரு கண் உண்டு. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் சாலையில் நடந்து சென்றால் அவர்களிடம் நைசாக பேச்சு கொடுத்து காரில் ஏற்றுவேன்.

    அவர்கள் என்னை நம்புபடி பேசிக் கொண்டே காரை ஓட்டிச்செல்வேன். ஒதுக்குப்புறமான இடம் பார்த்து காரை நிறுத்தி விட்டு ஏ.சி.யை முழுவதுமாக ஓட விடுவேன். பின்னர் கார் கண்ணாடிகளை ஏற்றி விட்டு பின்னால் அமர்ந் திருக்கும் பெண்ணிடம் சத்தம் போட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டுவேன்.

    இதனால் பயந்து போய் ஒரு சிலர் சத்தம் போட மாட்டார்கள். அப்படியே யாராவது சத்தம் போட்டாலும் கண்ணாடிகள் முடி இருப்பதால் அது வெளியில் கேட்காது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு காருக்குள் வைத்தே அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளேன்.

    கடந்த ஓராண்டாக இது போல சுமார் 10 பெண்களிடம் கைவரிசை காட்டியுள்ளேன். எல்லாம் முடிந்த பின்னர் பெண்கள் அணிந்திருக்கும் நகைகள் அனைத்தையும் பறித்துக் கொள்வேன்.

    இதுபோன்று பாதிப்புக் குள்ளானவர்கள் புகார் எதுவும் கொடுக்காததால் தப்பி வந்தேன்.

    இவ்வாறு சுரேஷ் போலீசிடம் கூறியுள்ளார்.

    கண்ணகி நகரைச் சேர்ந்த சுரேஷ் மீது கற்பழிப்பு வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்சென்னை இணை கமி‌ஷனர் மகேஸ்வரி, அடையாறு துணை கமி‌ஷனர் சசாங்ஷாய் ஆகியோரது மேற்பார்வையில் தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு சுரேசை கைது செய்துள்ளனர்.

    புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவனை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் அண்டு 15 வயது சிறுமியை கற்பழித்த வழக்கும் சுரேஷ் மீது உள்ளது.

    இந்த வழக்கில் புகார் அளித்துள்ள பெண் சாலையோரமாக கடை வைத்திருப்பவர் என்று போலீசார் தெரிவித்தனர். முதலில் புகார் அளிக்க தயங்கிய அவரிடம் பெண் போலீசார் நீண்ட நேரமாக விசாரணை செய்து சுரேஷ் நடத்திய லீலைகளை அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளனர். சுரேசால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது இருந்தால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இப்படி புகார் அளிக்கும் பெண்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்படாது என்றும் அவர்கள் பற்றிய ரகசியங்கள் காக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #tamilnews

    ×