என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் கத்தி முனையில் பணம் பறித்த 4 பேர் கைது
Byமாலை மலர்26 Sep 2018 5:26 PM GMT (Updated: 26 Sep 2018 5:26 PM GMT)
மதுரையில் கத்தி முனையில் பணம் பறித்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
மதுரை ஹார்வி பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 18). இவர் பஜார் சாலையில் நடந்து சென்றபோது 2 பேர் வழி மறித்தனர். அவர்கள் கத்தியை காட்டி நாகராஜை மிரட்டி பணத்தை பறித்துச் சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, திடீர்நகர் மணிகண்டன் (28), அண்ணாநகர் பாலா பிரவீன் (25) ஆகியோரை கைது செய்தனர்.
மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, சிந்தாமணி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் சாலையில் நடந்து சென்றபோது 2 பேர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக கீரைத்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (19), திருச்சி காளீஸ்வரன் (22) ஆகியோரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X