search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veethiula"

    • முக்கியஸ்தர்கள் தலைமையில் ஆண்களும், பெண்களும் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    • பின்னிரவில் அம்பாள் வீதியுலாவில் அக்னி கப்பரை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதார ண்யம் அடுத்த தேத்தாகுடி குளுந்தாளம்மன் முனீஸ்வரர் கோவிலில் 65-வது ஆண்டு தேர் திருவிழா நடந்தது. கிராம முக்கியஸ்தர்கள் தலைமையில் ஆண்களும், பெண்களும் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    முன்னதாக, காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் திருவிழா தொடங்கி அன்று பகல் முழுவதும் பல்வேறு இறை வழிபாடுகளுக்கு பின் குளுந்தாளம்மன் தேர் திருவிழாவும் விடிய விடிய பலகலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

    தொடர்ந்து, பின்னிரவில் அம்பாள் வீதியுலாவில் அக்னி கப்பரை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை மறலாளிகள், நிர்வாக குழுவினர்கள் உள்பட தேத்தாகுடி கிராமமக்கள் செய்திருந்தனர்.

    விழாவில், கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சியும், அன்னதானமும் நடந்தது.

    • திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு பக்தர்கள் சீர்வரிசை தட்டு, தாம்பலம் எடுத்து வந்தனர்.
    • அக்னி வார்க்கப்பட்டு ஆகம விதிமுறைகள்படி சகல சடங்கு, சம்பிரதாயங்களுடன் விநாயகருக்கு அம்பாள் சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசித்தி, புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் விவாஹ வரம் அருளக்கூடியவர்.

    இங்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் 10 நாள் பிரமோற்சவத்தில் ஸ்ரீசித்தி, புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகருக்கு நடைபெறும் திருக்கல்யாண வைபத்தில் திருமணமாகாத பெண்கள் கலந்து கொண்டு ஸ்ரீதெட்சணாமூர்த்தியை பிரார்த்தனை செய்து கொண்டால் விரைவில் திருமணம் கைகூடிவரும் என்பது உண்மை.

    இந்த ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 22ந்தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து தினசரி சுவாமி பல்வேறு வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது 4ம்நாள் நிகழ்வாக காலை வெள்ளி பல்லக்கில் சுவாமி வீதியுலாவும், 5ம் நாள் நிகழ்ச்சியாக ஓலை சப்பரத்தில் ஸ்சுவாமி வீதியுலா நடைபெற்றது.

    பிரமேற்சவத்தின் 7-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று சுவாமி தெட்சணாமூர்த்திக்கு சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

    திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு பக்தர்கள் சீர்வரிசை தட்டு, தாம்பலம் எடுத்து வந்தனர்.

    அதனை தொடர்ந்து அக்னி வார்க்கப்பட்டு ஆகம விதிமுறைகள்படி சகல சடங்கு, சம்பிரதாயங்களுடன் சுவாமிக்கு அம்பாள் சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    திருக்கல்யாண வைபத்தில் திருமணம் தள்ளிபோகும் பெண்கள் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு விநாயகரை வணங்கி, மலர்மாலையும், மஞ்சள் கயறு அணிந்து கொண்டும் திருமண பிரார்த்தனை செய்து கொண்டனர்.

    திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருக்கல்யாண வைபவம் மற்றும் பிரமோற்சவ ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி எஸ்.குமார் மற்றும் கிராமமக்கள் செய்து இருந்தனர்.

    • திருமணமாகாத பெண்கள் கலந்து கொண்டு தெட்சணாமூர்த்தியை பிரார்த்தனை செய்து கொண்டால் விரைவில் திருமணம் கைகூடிவரும்.
    • இந்நாட்களில் சித்திபுத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் பலவித வாகனங்களில் காலையும், மாலையும் வீதியுலா வருவது சிறப்பாகும்.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா மெலட்டூரில் எழுந்தருளியிருக்கும் சித்தி புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் விவாஹ வரம் தந்து அருளக்கூடியவர் இங்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் 10 நாள் பிரமேற்சவத்தில் சித்திபுத்தி தெட்சணாமூர்த்தி விநாயகருக்கு நடைபெறும் திருக்கல்யாண வைபத்தில் திருமணமாகாத பெண்கள் கலந்து கொண்டு தெட்சணாமூர்த்தியை பிரார்த்தனை செய்து கொண்டால் விரைவில் திருமணம் கைகூடிவரும் என்பது உண்மை.

    இக்கோயில் ஞானபுரத்தில் கர்க மகரிஷியால் வர்ணிக்கப்பட்டிருக்கிற 108 கணபதி ஸ்தலங்களுள் 81-வது ஸ்தலமான உன்னதபுரம் என்கிற மெலட்டூரில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    இந்த கோவில் தஞ்சாவூரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் மெலட்டூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் மெலட்டூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் அய்யர், கணேச அய்யர், சிவராம அய்யர் ஆகியோரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இங்கு வருடந்தோறும் விநாயகர் சதுர்த்திவிழா 10 நாட்கள் பிரமோற்சவமாக நடந்து வருகிறது.

    இந்த நாட்களில் சித்திபுத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் பலவித வாகனங்களில் காலையும், மாலையும் வீதியுலா வருவது சிறப்பாகும்.

    தவிர பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7வது நாள் நடைபெறும் விநாயகர் திருக்கல்யாண நிகழ்ச்சி மிக அரிதான நிகழ்ச்சியாகும்.

    அன்றைய தினம் காலையில் தெட்சணாமூர்த்தி விநாயகருக்கு சித்திபுத்தியுடன் திருக்கல்யாணம் நடைபெறும் இது தமிழ்நாட்டிலேயே மிகவும் பிரசித்தி பெற்றதாகும்

    இந்நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

    திருமணம் ஆகாதவர்களும், திருமணம் காலதாமதமாகும் ஆண்களும், பெண்களும் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்து தரிசித்து பிரார்த்தனை செய்து மலர் மாலையும், மஞ்சள் கயறும் அணிந்து கொண்டால் விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது ஐதீகம்.

    இந்த ஆண்டு பிரமோற்சவ விழா நேற்று காலை விக்னேஸ்வர பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    4ம்நாள் காலை சுவாமி வெள்ளி பல்லக்கிலும், 5ம் நாள் ஓலை சப்பரத்திலும் வீதியுலா நடைபெற உள்ளது.

    7ம் நிகழ்ச்சியாக 28ம்தேதி காலை 9.30 மணியளவில் பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி, அம்பாள் சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் வைபவமும், 30ம்தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது.

    ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி எஸ்.குமார் மற்றும் கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கஞ்சி வார்த்தல், சக்தி கரகம் எடுத்தல், பூஜைகள் நடைபெற்றது.
    • முக்கிய நிகழ்ச்சியான சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை, இரவு தெய்வீக வேடங்களுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி வெள்ளத்திடலில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 10-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கஞ்சி வார்த்தல், சக்தி கரகம் எடுத்தல், பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்றுமுதல் நாள் முக்கிய நிகழ்ச்சியான சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை, இரவு தெய்வீக வேடங்களுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது. அம்மனுக்கு அபிஷேகம், அக்னி கப்பரை வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • ஆடிப்பூர அம்மனுக்கு வளையலங்காரம் ஆராதனை மற்றும் வெள்ளிப்படிச் சட்டத்தில் வீதிஉலா நடந்தது.
    • கயிலை வாத்திய இசை முழக்கங்களுடன் அம்மன்கோவில் வெளிப்பிர–காரத்தில் பக்தர்கள் ஏழுமுறை வலம் வந்து வழிபட்டார்கள்.

    திருவையாறு:

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஆடிப்பூர அம்மனுக்கு வளையலங்காரம் ஆராதனை மற்றும் வெள்ளிப்படிச் சட்டத்தில் வீதிஉலா நடந்தது. இரவு சப்த பிரதட்சணம் நடந்தது.

    இதில் ஆடிப்பூர அம்மன் முன்னே வர, சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் திருமுறைகள் பாடியவாறும், வேத விற்பன்னர்கள் வேதபா ராயணம் பாடியவாறும். தவில், நாதஸ்வரவித்வா ன்களின் மேள தாள இசையுடனும், கயிலை வாத்திய இசை முழக்கங்க ளுடனும் பரதநாட்டியம், ஆன்மீக இன்னிசை பாடல்க ளுடனும் அம்மன்கோயில் வெளிப்பிர–காரத்தில் பக்தர்கள் ஏழுமுறை வலம் வந்து வழிபட்டார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர்கோயில் நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.

    • ஆடிப்பூர நாயகி ஆண்டாள் ஐக்கியமான விஷ்ணுவின் அம்சத்தில் அருள்பாலிப்பவர் என்பதும், உற்சவர் ஆடிப்பூர அம்மன் என்பதும் சிறப்புடையது.
    • திருவையாறு புஷ்யமண்டபத்துறை காவிரி ஆற்றில் ஆடிப்பூர அம்மனின் தீர்த்தவாரியும், வீதியுலாவும் நடைபெற்றது.

    திருவையாறு:

    தருமையா தீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 23-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9-ம் நாளில் நேற்று பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்த தேரோட்டம் நடைபெற்றது.

    10-ம் நாளான இன்று ஆடிப்பூர திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அறம்வளர்த்த நாயகி உடனாகிய அறம்வளர்த்த நாயகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த அம்மன் ஆடிப்பூர நாயகி ஸ்ரீஆண்டாள் ஐக்கியமான விஷ்ணுவின் அம்சத்தில் அருள்பாலிப்பவர் என்பதும், உற்சவர் ஆடிப்பூர அம்மன் என்பதும் சிறப்புடையது.இதையடுத்து திருவையாறு புஷ்யமண்டபத்துறை காவிரி ஆற்றில் ஆடிப்பூர அம்மனின் தீர்த்த வாரியும், திருவீதி உலாவும் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இன்றிரவு சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் திருமுறைகள் பாடியவாறும், தவில், நாதஸ்வர இசையுடனும், கயிலை வாத்திய இசை முழக்குடனும், பரதநாட்டியக் கலை இசை நிகழ்ச்சியுடனும் அம்மன் கோயில் வெளிப்பிரகாரத்தை பக்தர்கள் ஏழு முறை சுற்றி வரும் சப்தப்பிரதட்சணம் நடக்கிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • தினமும் இரவு வேதநாயகி அம்மன் பூதவாகனம், வெள்ளி ரிஷப வாகனம் ஆகியவற்றில் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.
    • வேதநாயகி அம்மனுக்கு பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதார ண்யேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், தினமும் இரவு வேதநாயகி அம்மன் காமதேனு வாகனம், அன்ன வாகனம், இந்திரா விமானம், பூதவாகனம், வெள்ளி ரிஷப வாகனம் ஆகியவற்றில் வீதியுலா வரும் காட்சி நடைபெறும். அதன்படி, நேற்று இரவு அம்மன் மகாரதோற்சவக்காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.

    நேற்று அரசு போக்கு வரத்து தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வேதநாயகி அம்மனுக்கு பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர். பின்னர், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெ ற்றது. இரவு தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சார்பாக புஷ்ப பல்லக்கில்அம்மன் வீதியுலா காட்சி நடைபெ ற்றது. விழாவில் யா ழ்ப்பாணம் பவரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி மற்றும் உபயதாரர்கள் ஓதுவார் மூர்த்திகள்கோவில் அலுவலர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கள்ளிமேடு கேசவன் குழுவி னரின் நாதஸ்வர இன்னிசை கச்சேரியும், அன்னதானமும் நடைபெற்றது.

    ×