search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veethiula"

    • நாளை காலை 11.15 மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது.
    • 6-ம்நாள் யானை வாகனத்தில் சாமி வீதியுலா.

    பட்டீஸ்வரம்:

    கும்பகோணம் ராமசாமி கோவிலில் ராமநவமி பெருவிழா இன்று மாலை அனுக்ஞை, மிருத்சங்கி–ரஹணம், கருடப்ரதிஷ்டை பூஜை களுடன் தொடங்குகிறது.

    நாளை (புதன்கிழமை) காலை 11.15 மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது.

    இவ்விழாவினை–யொட்டி நாளை முதல் தினசரி காலை மங்கல இன்னிசை முழங்க சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் பல்லக்கிலும், மாலை வேளைகளில் 1- ம் திருநாள் இந்திர விமானம், 2-ம்நாள் சூர்யப்ரபை, 3-ம்நாள் சேஷ வாகனம், 4-ம் திருநாள் மின் விளக்குகள் ஒளிர ஓலைச்சப்பரத்தில் கருடசேவையும், 5-ம் நாள் அனுமந்த சேவையும், 6- ம்நாள் யானை வாகனத்திலும், 7-ம் திருநாள் கோரதம் மற்றும் புன்னைமரம் வாகனங்களிலும், 8-ம் நாள் குதிரை வாகனத்துடனும் வீதிஉலா நடைபெறும்.

    9-ம் திருநாள் காலை 8 மணிக்கு மேல் தேரோட்டமும்,

    10-ம் திருநாள் சப்தாவர்ண விழாவும், மறுநாள் (ஏப்ரல்.1) விடையாற்றி விழாவும் நடைபெற உள்ளது.

    மேலும் இவ்விழாவில் தினசரி காலை, மாலை வேளைகளில் பஞ்சராத்திர ஆகம பகவத் சாஸ்திரப்படி யாகசாலை பூஜை ஹோமமும், பூர்ணாஹீதியும் வேதபாராயண மத்ராமாயணம், திவ்யப்பிரபந்த பாராயணங்கள் சேவை சாற்று முறையும் மற்றும் வருகிற 29-ந் தேதி வரை கோவில் வளாகத்தில் தினசரி மாலை மருத்துவர் வெங்கடேஷ் பாசுரபடி ராமாயணம் உபன்யாசமும் நடைபெற உள்ளது.

    இவ்விழா ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் வெங்கடசுப்ரமணியன், செயல் அலுவலர் மகேந்திரன் மற்றும் பணியாளர்கள், ராமசரணம் டிரஸ்ட் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • கொடிமரம் அருகே ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பெருமாள் எழுந்தருளினார்.
    • பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்து முறை செய்விக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூரில் 108 திவ்யதேசங்களில் 11 திவ்ய தேச பெருமாள் கோவில்கள் அருகருகே அமைந்துள்ளன. இதில் பிரசித்தி பெற்ற வண்புருஷோத்தம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக கொடிமரம் அருகே ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் எழுந்த ருளினார். பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்து முறை செய்விக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    தொடர்ந்து கொடி மரத்துக்கு சிறப்பு திரு மஞ்சனம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உற்சவ கொடி ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவத்தின் முதல் நாள் பெருமாள் சந்திர பிரபை வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்து அருளி வீதி உலா நடைபெற்றது.

    • காலை, மாலை நேரங்களில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதியுலா.
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பட்டீஸ்வரம்:

    கும்பகோணத்தில் பிரசித்திபெற்ற வைணவ தலங்களில் ஒன்றான சுதர்சனவல்லி தாயார், விஜயவல்லி தாயார் சமேத

    சக்கரபாணி கோவிலில் மாசிமக பெருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கொத்தனார் சாரதிசுரேஷ் தலைமையில் நடைபெற்றது.

    விழாவையொட்டி இன்று சிறப்பு மங்கள இன்னிசை முழங்க, வேத பாராயணம் ஒலிக்க சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் தேரில் எழுந்தருளினார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரராஜா.. சக்கரராஜா.. பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இதனை தொடர்ந்து, அம்புஜவல்லிதாயார் சமேத ஆதிவராஹபெருமாள், ருக்மணி தாயார், சத்யபாமா தாயார், செங்கமல தாயார் சமேத ராஜகோபாலசாமி (பெரிய கடைத்தெரு) ஆகிய கோவில்களில் ரதாரோஹணமும் நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள், சுதர்சன பக்தர்கள் செய்திருந்தனர்.

    கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் கிழக்கு,மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்கள் அழகேசன், பேபி மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • பெருமாள் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பெருமாள் தங்க கருட வாகனத்துடன் கூடிய ஓலை சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் அடுத்த திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு 108 திவ்ய தேசங்களுள் 17-வது தலமாக போற்றப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா 15 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டு மாசிமக விழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 4-ம் நாளில் காலை பெருமாள் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, இரவு பெருமாள் தங்க கருட சேவை நடந்தது.

    இதில் பெருமாள் தங்க கருட வாகனத்துடன் கூடிய ஓலை சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதில் தக்கார் முருகன்,செயல் அலுவலர் குணசேகரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழா வருகிற 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (5-ந் தேதி) நடைபெறுகிறது. தொடர்ந்து, 7-ம் தேதி காலை சவுரிராஜ பெருமாள் புறப்பட்டு திருமருகல் வரதராஜபெருமாள் கோவிலுக்கு வந்து அங்குள்ள வரதராஜபெருமாள் உடன் சேர்ந்து 2 பெருமாள்களும் தீர்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும், அன்று மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    பின்னர், 12-ம் தேதி இரவு 10 மணிக்கு சவுரிராஜ பெருமாள் கோவில் முன்பு உள்ள நித்ய புஷ்கரணி குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெற இருக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், கிராமமக்களும் செய்து வருகின்றனர்.

    • மூவரால் பாடல் பெற்ற தலம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்டது.
    • மல்லாரி மற்றும் சிவன் கீர்த்தனையோடு வீதியுலா காட்சி சிறப்பாக நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள தர்மபுர ஆதீனத்திற்கு சொந்தமான தியாகராஜ சுவாமி கோவில் அமைந்து ள்ளது.

    மூவரால் பாடல் பெற்ற தலம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த கோவில் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு விமர்சையாக நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று இரவு திருக்கல்யாண உற்சவமும் பின்னர் சிறப்பு திருவீதி உலா காட்சி நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் சுவாமி அம்பாள், வள்ளி தெய்வானை உடன் முருகப்பெருமான் மற்றும் விநாயகர், சண்டிஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்கள்.

    தொடர்ந்து திருக்குவளை சகோதரிஞகள் முனைவர் சுந்தரி, சாவித்திரி ஆகியோரின் மல்லாரி மற்றும் சிவன் கீர்த்தனையோடு வீதியுலா காட்சி சிறப்பாக நடைபெற்றது.

    தவதருமை ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடந்த வீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • பட்டோலை வாசித்தல், பந்தக்கால் முகூர்த்தம், தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • சிறிய வெள்ளி ரிஷப வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதியுலா.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா வருகிற 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி பட்டோலை வாசித்தல், பந்தக்கால் முகூர்த்தம், தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    தொடர்ந்து, நிகழ்ச்சி விவரங்கள் அடங்கிய பட்டோலை வாசித்தல், கணபதி பூஜையுடன் நடந்த பின்னர் சாமி சன்னதி முன்பு கோவில் ஸ்தலத்தார்கள் கயிலை மலை வேதரத்னம் மற்றும் உபயதாரர்கள் முன்னிலையில் அலுவல மேலாளர் விஜயகுமார் திருவிழாக்கள் குறித்த பட்டோலை விவரம் வாசித்தார்.

    பின்னர், சிறிய வெள்ளி ரிஷப வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதியுலா சென்று நாகை சாலையில் உள்ள வேதாமிர்த ஏரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு, சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.
    • ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    திருக்கடையூர் அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவாரம் நடைபெற்றது.

    இதில் 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு, சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.

    பின்னர், சிவாச்சாரியார்கள் புனிதநீர் நிரப்பப்பட்ட சங்குகளுடன் கொடி மரம் மற்றும் கோயிலை வலம் வந்து, அமிர்தகடேஸ்வரருக்கு சங்காபிஷேகம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

    இதில் தருமபுர ஆதினம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரம்மச்சாரிய சாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

    இதில் கோவில் குருக்கள்கள் கணேசன், ரவி, மகேஷ், ஆடிட்டர் குருசம்பத், கோவில் கண்காணிப்பாளர் மணி, காசாளர் களியராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பிரம–புரீஸ்வரர் கோவிலுக்கு சென்று பெருமானை வழிபாடு செய்தார்.
    • சுவாமி அம்பாள் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஆயிரம் ஆண்டுகள் பழமையான குமரக்கோயில் அமைந்துள்ளது

    இக்கோயிலில் வள்ளி தேவசேனா உடனாகிய குமரப் பெருமான் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

    இக்கோயிலில் அசுரர்களை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமான் திருச்செந்தூர் சென்ற போது மாலைப் பொழுது முடிந்து இருள் வந்துவிட்டபடியால் தனக்கு துணையாக வீரபாகு முதலிய ஒன்று துணை வரும் தங்குவதற்கு இந்திரனை அழைத்து ஒரு கோயில் அமைக்க கூறியதாகவும், மறுநாள் சூரிய உதயம் ஆனதும் குமரக் கடவுள் தாம் வீற்றிந்தருளிய ஆலயத்தில் எதிரே தடாகம் அமைக்க செய்து கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களை அதில் வரவித்து சிவபெருமானுக்கு திருமஞ்சனம் எடுத்துக் கொண்டு இந்திராதி தேவர்–களோடு பிரம–புரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று பெருமானை வழிபாடு செய்தார் என்பதும் குமரனே கோயில் கட்ட ஆணையிட்டு கோயிலில் தானே தங்கியதால் இக்கோயில் குமரக்–கோட்டம் என கந்த புராணம் கூறுகிறது.

    இத்தகைய புகழ்பெற்ற கோயிலில் கடந்த 36 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடந்த நிலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது அப்போது சுவாமி அம்பாளுக்கு ஐதீக முறைப்படி சிவாச்சாரி–யார்களால் தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்பு சுவாமி அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது அப்போது திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    அப்போது கோயில் கட்டளை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள் மயிலாடுதுறை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் மார்கோனி, கோயில் நிர்வாகி செந்தில், கவுன்சிலர்கள் ஜெயந்தி பாபு, நித்யாபாலமுருகன், தமிழக திருக்கோயில் சொத்து பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.

    • காலை சண்முகர் காவேரி ஆற்றில் குருதி கழுவுதல் நிகழ்ச்சி, இரவு தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
    • விரதம் இருக்கும் பக்தர்களுக்கு தினமும் மதியம் கல்கண்டு பால் வழங்கப்பட்டது.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 24-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, அணுக்கை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 4-ந் தேதி நிறைவடைகிறது.

    தினமும் இரு வேலையும் சந்திரசேகர் வீரபாகு மற்றும் வீரகேசரி ஆகியோர் சூரபத்மனுடன் எதிர்கொண்டு யாகசாலை பூஜை நடைபெற்ற பின் வீதியுலா நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    சண்முகர் ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்து சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து கிழக்கு சன்னதியில் கஜமுக சூரன் மற்றும் சிங்கமுகசூரன் ஆகியோரை வதம் செய்தல் நிகழ்வும், தெற்கு வீதியில் சூரபத்மனை வதம் செய்தல் நிகழ்வும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவீதியுலா நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று காலை சண்முகர் காவேரி ஆற்றில் குருதி கழுவுதல் நிகழ்ச்சி, இரவு தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.

    இதனை காண வரும் பக்தர்களுக்காக பஸ் வசதி, கழிவறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, முதியோர் மற்றும் ஊனமுற்றோர் எளிதில் கீழ்ப்பிரகாரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் வசதி, மேலும், மருத்துவ வசதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விரதம் இருக்கும் பக்தர்களுக்கு தினமும் மதியம் கல்கண்டு பால் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோவில் துணை ஆணையர் உமாதேவி, கோவில் கண்காணிப்பாளர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை வழிபாடு நடைபெற்று வருகிறது.
    • பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவ ட்டம், சீர்காழி அடுத்த திருவெள்ளக்குளம் கிராமத்தில் 108 வைணவ தலங்களில் 39-வது திவ்யதேசமான, குமுதவல்லி தாயார் சமேத அண்ணன் பெருமாள் கோவில் உள்ளது.

    குமுதவள்ளி தாயார் அவதரித்த இத்தலத்தில் அண்ணன் பெருமாளை வேண்டி திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்கள் பாடி மங்களாசாசணம் செய்துள்ளார்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் திருப்பதியை போன்று புரட்டாசி மாதம் 12 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 27-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நாள்தோறும் பெருமாள் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை வழிபாடு நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது.

    முன்னதாக பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று, ஆபரணங்கள், மலர்கள் கொண்டு அலங்காரம் நடைபெற்றது.

    தொடர்ந்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆடிப்பூர அம்மனுக்கு நவராத்திரி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடக்கிறது.
    • பன்னிரு திருமுறை நூல்கள் அலங்கரிக்கப்பட்டு யானை மீது வைத்து அம்பாள் திருவீதியுலா நடக்கிறது.

    திருவையாறு:

    தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோயிலில் இன்று நவராத்திரி உற்சவ விழா தொடங்குகிறது.

    இன்று முதல் அடுத்த மாதம் அக்டோபர் 4 ந்தேதி வரையில் நடக்கும் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு மூலவர் பிரகாரத்தில் 2 பக்கமும் கொலுக் காட்சி வைக்கப்பட்டுள்ளது.

    இக்கொலுவை பக்தர்களும் குழந்தைகளும் கண்டு களித்து வழிபடுகிறார்கள்.

    மேலும் 'தினமும் மாலையில் ஆடிப்பூர அம்மனுக்கு நவராத்திரி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறதுவேத சாஸ்திரிகளின் வேதபாரா யணம், தேவி மகாத்மியம், அபிராமி அந்தாதி பாரா யணம் நடக்கிறது.

    அம்மன் பிரகார உலா நடக்கிறது.

    5 ஆம் நாள் 30 ந்தேதி காலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் ஆராதனையும் மாலையில் பன்னிரு திருமுறை நூல்கள் அலங்கரி க்கப்பட்டு யானை மீது வைத்து அம்பாரித் திருவீதி உலா வருகிறது. 2 ந்தேதி ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது.

    கொலு மண்டபத்தில் ஆன்மீக சான்றோரின் நவராத்திரி சொற்பொழிவுகளும் இன்னிசைக் கலை நிழ்ச்சிகளும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர் கோயில் நிர்வாகிகள் செய்திருக்கிறார்கள்.

    • தாயாருடன் பெருமாள் வீதியுலா வந்தும், வெண்ணை குடம், திருக்கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுடன் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
    • பூஜைகளுடன் கொடி இறக்கப்பட்டும், பல்லாக்கு சேவை, விடையாற்றியுடன் விழா நிறைவடைந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தோப்புதுறை அபீஷ்ட வரதராஜ பெரு மாள் கோவிலின் ஆண்டுப்பெருவிழா கொடி இறக்கம், விடையாற்றியுடன் நிறைவடைந்தது.

    இக்கோவிலில் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 31ம் தேதி கொடி ஏற்றப்பட்டு துவங்கியது. நாள்தோறும் உபயதாரர் சார்பில் பல்லாக்கு சேவை, கருட சேவை, அனுமந்த வாகனம், யானை, இந்திர விமானம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தாயாருடன் பெருமாள் வீதி உலா வந்தும், வெண்ணை குடம், திருக்கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுடன் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

    நேற்று பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகளுடன் கொடி இறக்கப்பட்டும், பல்லாக்கு சேவை, விடையாற்றியுடன் விழா நிறைவடைந்தது.

    இதில் ஏராளமான பக்த ர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    ×