search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vedaranyam"

    கம்யூனிஸ்டு கட்சி கொடி கம்பங்களை சேதப்படுத்திய பா.ம.க.வினர் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு காடந்தெத்தி பேருந்து நிறுத்தம் அருகில் அ.தி.மு.க., தி.மு.க., இந்திய கம்னியூஸ்டு, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்டு பாமக ஆகிய அரசியல் கட்சிகளின் கொடி மரங்கள் உள்ளன. நேற்று பா.ம.க. கொடி மரத்தில் இருந்த பழைய கொடியை அகற்றிய அக்கட்சியினர் புதிய கொடியை ஏற்றி காடுவெட்டி குரு இறந்ததையொட்டி அரைக்கம்பத்தில் பறக்க விட்டிருந்தனர். 

    அப்போது அந்த இடத்தில் இருந்த தி.மு.க., அ.தி.மு.க, கம்னியூஸ்டு கட்சிகளின் கொடி கம்பங்களை சேதப்படுத்தி உளளனர்.இதைத் தொடர்ந்து கொடி கம்பங்களை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி இந்திய கம்னியூஸ்டு கட்சி ஒன்றியச் செயலாளர் மகேந்திரன், தலைமையில் தி.மு.க., அ.தி.மு.க., கம்னியூஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

    இதுபற்றி தலைஞாயிறு போலீசார் வழக்கு பதிவுசெய்து காடந்தெத்தியைச் சேர்ந்த பா.ம.க. ஒன்றிய விவசாய சங்க ஒன்றியத்தலைவர் காந்தி மற்றும் முருகேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    வேதாரண்யத்தில் தம்பியை தாக்கிய அண்ணன் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் மேலவீதியில் வசிப்பவர்கள் குமரசாமி (வயது 55), குமரேசமூர்த்தி (54). இருவரும் சகோதரர்கள். குமரேசமூர்த்தி அரசு கல்லூரி பேராசிரியர்.

    குமரசாமி வேதாரண்யத்தில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். இவர் மேல வீதியில் உள்ள கடை மற்றும் வீடுகளை சமமாக பிரித்துக்கொண்டனர். இதில் மேலத்தெருவிற்கு செல்ல பொதுப்பாதை ஒன்று இருந்து வருகிறது.

    இந்த பொதுப்பாதையில் தென்னை மட்டைகளை குமரசாமி போட்டிருந்தாராம். இதை அவரது தம்பி குமரேசமூர்த்தி அப்புறப்படுத்தியுள்ளார். இதை குமரசாமி தட்டிக்கேட்டதில் தகராறு ஏற்பட்டு குமரேசமூர்த்தியை குமரசாமியும், அவரது நண்பரும் சேர்ந்து கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதில் படுகாயமடைந்த குமரேசமூர்த்தி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்பு தீவிர சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அவர் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதேபோல் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ள குமரசாமியும் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    வேதாரண்யத்தில் 45 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட மாணவர்களும் ஆசிரியர்களும் பழைய நினைவுகளை பேசி மகிழ்ந்தனர். பின்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கத்தரிபுலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 1973-ம் ஆண்டு முதல் படித்த முன்னாள் மாணவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் 45 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் படித்த மாணவர்களும் அவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

    விழாவில் இப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்று பல்வேறு ஊர்களில் வாழ்ந்துவரும் ஆசிரியர்கள் ஆதிநெடுஞ்செழியன், நாகராஜன், ரசல், ராஜ்குமார், ராமநாதன், வீரப்பத்திரன், வடிவேல், சுந்தரேசன், ராமசந்திரன், கணேசன், ராமலிங்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    மாணவர்களும் ஆசிரியர்களும் பழைய நினைவுகளை பேசி மகிழ்ந்தனர். பின்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

    கொல்கத்தா, சென்னை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வேதாரண்யம் பகுதிகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் கத்தரிப்புலம் கிராமத்தில் பிறந்து இப்பள்ளியில் படித்த தமிழரசன் கொல்கத்தாவில் அரசு பணியில் உள்ளார். அவர் வாட்ஸ்-அப்பில் இந்த சந்திப்பு விழா அழைப்பை பார்த்து கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து அங்கு உள்ள தனது குடும்பத்தாரையும் அழைத்து கொண்டு வந்து விழாவில் கலந்து கொண்டார்.

    விழா ஏற்பாடுகளை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சாம்பசிவம், சிவகடாட்சம், தருமையன், இளவழகன், சாமியப்பன், ஜெகநாதன், சரவணன், வீரமணி, ராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

    விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் கூறும்போது, 45 ஆண்டுகளுக்கு பிறகு தங்களுடன் படித்தவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களின் ஆசிரியர்களை சந்தித்து ஆசி வாங்கியதை பெருமையாக நினைக்கிறோம். நாங்கள் படித்த பள்ளியை மேம்படுத்தவும், இப்பகுதி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஜ.ஏ.எஸ் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த உள்ளோம் என்றனர்.

    ×