search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vedaranyam"

    வேதாரண்யத்தில் இன்று அதிகாலையில் திடீரென மழை பெய்தது. அப்போது வீடுகளில் மின்னல் தாக்கி 14 பேர் காயம் அடைந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் கடந்த 2 மாதங்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் 3 மணிக்கு ஆயக்காரன்புலம் செட்டியார் குத்தகையில் திடீரென மழை பெய்தது.

    அப்பகுதியில் ஒரு சில கூரை வீடுகளில் மின்னல் தாக்கியது. அப்போது வீட்டில் தூங்கி இருந்த வீரமணி மற்றும் சந்திரா இருவரும் காயம் ஏற்பட்டது. மேலும் அடுத்தடுத்த வீடுகளில் தூங்கி கொண்டிருந்த 12 பேர் லேசான காயம் அடைந் தனர்.

    மின்னல் தாக்கிய 14 பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க பட்டனர் மின்னல் தாக்கியதில் வீடுகளில் இருந்த மிக்சி மற்றும் டி.வி. உள்ளிட்ட மின்சார பொருட்கள் சேதம் அடைந்தன.

    இதேபோல் தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் இன்று அதிகாலை 4 மணியளவில் மழை பெய்தது. மேலும் மதுக்கூர் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் லேசான மழை பெய்தது.

    கடந்த 2 மாதங்களாக வெயிலில் தவித்து வந்த மககள், திடீரென பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். மழையால் அப்பகுதியில் இதமான சீதோஷ்ண நிலை நிலவியது.

    வேதாரண்யம் அருகே தூக்கு போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினம் காவல்சரகம் மருதூர் வடக்கு ராஜாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர் கத்திரிப்புலத்தை சேர்ந்த பிரியா (வயது 35) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. வைத்தியநாதன் 108 ஆம்புலன்சில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டின் அருகே உள்ள மரத்தில் பிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்துவருகிறார்.

    வேதாரண்யம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா கரியாப்பட்டினத்தில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கரியாப்பட்டினத்தில் 7-வது நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டம் திருகாரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஏல அறிவிப்பு செய்துள்ளது.

    இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் விளைநிலங்கள் மற்றும் தண்ணீர் பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கரியாப்பட்டினம் அரசு மருத்துவமனை சாலையில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழுவினர் மற்றும் கரியாப்பட்டினம், செட்டிப்புலம், வடமலை மணக்காடு, தென்னம்புலம், மருதூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து 7-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வேதாரண்யம் தாலுக்கா முழுவதும் இன்று 1000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வர்த்தகர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கஜா புயல் பாதிப்புக்கு பிறகு வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டு உப்பு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    வேதாரண்யம்:

    தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் வேதாரண்யம் உள்ளது. உப்பு உற்பத்தியில் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தியாகிறது.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலத்திற்கும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு லாரிகள் மூலமாகவே அனுப்படுகிறது.

    இந்தநிலையில் கஜா புயலால் கடலிலிருந்து சேர் உப்பள பகுதியில் சேறு புகுந்து சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் தற்சமயம் உப்பு உற்பத்தி சீசனில் உப்பு உற்பத்தி செய்யமுடியாமல் உற்பத்தியாளர்கள் மத்திய அரசின் உப்பு இலாகா அதிகாரிகள் குழு கஜா புயலால் பாதிக்கப்பட்ட உப்பளங்களை பார்வையிட்டு சென்றுள்ளனர். அவர்களிட மிருந்து இதுவரை எந்த நிவாரண உதவியும் கிடைக்கவில்லை.

    இதனால் உப்பு உற்பத்தி பணிகள் தற்சமயம் 30 சதவீதமே நடந்துள்ளது. ஒருசிலர் மட்டுமே உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி உப்பு உற்பத்தி செய்கிறார்கள்.

    கஜா புயல் பாதிப்புக்கு பிறகு வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டு உப்பு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. முழு வீச்சில் உப்பு உற்பத்தி துவங்க ஒரு மாத காலம் ஆகும் என உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

    வேதாரண்யம் அருகே அம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தாணிகோட்டகம் கிராமத்தில் கோடியம்மன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலை அப்பகுதி சுற்றுவட்டார கிராம மக்கள் வழிபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை கிராம மக்கள் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தனர். அப்போது கோவிலில் இருந்த உண்டியல் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கோவில் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். நள்ளிரவில் மர்ம கும்பல் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை தூக்கி கொண்டு தப்பி விட்டது தெரிய வந்தது. மேலும் கோவிலில் இருந்த சிசிடிவி கேமிராவையும் உடைத்துள்ளதும் தெரிய வந்தது.

    இதையடுத்து வாய்மேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கோவிலில் புகுந்து காணிக்கை பணத்துடன் இருந்த உண்டியலை தூக்கி சென்ற கும்பல் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    வேதாரண்யம் பகுதியில் கடற்கரையில் ஒதுங்கிய 48 கிலோ கஞ்சா மூட்டைகள் இலங்கைக்கு கடத்தப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து இலங்கைக்கு போதை பொருட்கள், மற்றும் கஞ்சா ஆகியவை கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் கடலோர காவல் படையினர் 24 நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தாலும், இன்று வரை இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்துவது நடைபெற்று தான் வருகிறது.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுத்துறை கடற்கரையில் இன்று 13 மூட்டைகள் கரை ஒதுங்கி இருந்தன.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவ கிராம மக்கள், இதுபற்றி கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கடற்கரையில் ஒதுங்கிய மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. 13 மூட்டைகளிலும் தலா 2 கிலோ வீதம் மொத்தம் 26 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

    இதேபோல் பெரிய குத்தகை கடற்கரையிலும் இன்று தலா 2 கிலோ வீதம் 22 கிலோ கஞ்சா 11 மூட்டைகள் இருந்தன. இதையும் கடலோர காவல் படையினர் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள். இதன் மதிப்பு சர்வசேத சந்தையில் ரூ.2 லட்சம் ஆகும்.

    வேதாரண்யம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற கும்பல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற போது மர்ம கும்பல் இதை விட்டு சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    கடற்கரையில் கஞ்சா மூட்டைகள் கிடந்த சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேதாரண்யம் அருகே குழந்தையுடன் பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு பகுதியில் வசிப்பவர் ஐயப்பன் (வயது 35). சேலத்தை சேர்ந்தவர். நெல் அறுவடை செய்யும் எந்திரத்தை வேலை பார்த்துக் கொண்டு இந்த பகுதிக்கு வந்தபோது கோடியக் காட்டை சேர்ந்த கானேஸ்வரி (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இவருக்கு தினேஷ் (7) என்ற மகனும், யாழினி (3) என்ற மகளும் உள்ளனர். ஐயப்பன் தற்சமயம் ஆந்திராவில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று கோடியக்காடு வந்து பார்த்தபோது கானேஸ்வரி மகள் யாழினியுடன் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களை பல இடங்களிலும் தேடி பார்த்தும் கிடைக்காததால் வேதாரண்யம் போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முருகவேலு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    வேதாரண்யத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பார்வையிட்டார். #GajaCyclone #NirmalaSitharaman
    நாகப்பட்டினம்:

    கடந்த 16-ம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
     
    கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் மேற்கண்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

    புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார். கஜா புயல் சீரமைப்புக்காக ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவி கோரினார்.

    இதைத்தொடர்ந்து, டெல்லியில் இருந்து மத்திய உள்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழு சென்னை வந்தது. அவர்கள் 3 நாட்களுக்கு புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதற்கிடையே, தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு பகுதிகளை மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் நேற்று தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதிகளை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஹெலிகாப்டர் மூலம் கோடியக்கரை வந்தடைந்தார். அங்கிருந்து வேதாரண்யம் சென்ற அவர், கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார்.

    மேலும், கோடியக்காடு, அகஸ்தியம்பள்ளி பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட உப்பளங்களையும் பார்வையிட்டார்.

    அப்போது அவருடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் ஹெச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர். #GajaCyclone #NirmalaSitharaman
    கஜா புயல் சீரமைப்பு பணி நடைபெறுவதால் நாகப்பட்டினத்தில் உள்ள வேதாரண்யம், திருக்குவளை, கீழ்வேளூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #Nagai
    நாகப்பட்டினம்:

    கஜா புயலால் நாகை மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.

    இந்நிலையில், கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாகப்பட்டினத்தில் உள்ள வேதாரண்யம், திருக்குவளை, கீழ்வேளூர் தாலுகாக்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #Nagai
    11 நாட்களாக மின்சாரம் இல்லாமல் இருந்த வேதாரண்யம் நகரில், 75 சதவீத வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. #GajaCyclone
    சென்னை:

    நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்கள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

    இந்த மாவட்டங்களில் இருந்த 1 லட்சத்து 13 ஆயிரம் மின் கம்பங்கள், 201 துணை மின் நிலையங்கள், 841 மின்மாற்றிகள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டன. இவற்றை சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    மின்துறை அமைச்சர் தங்கமணி டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். தற்போது எந்த அளவுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

    மின் வினியோகத்தை பொறுத்தவரை நகராட்சி பகுதிகளில் ஓரளவு முழுமையாக மின் இணைப்பு கொடுத்து விட்டோம்.

    11 நாட்களாக மின்சாரம் இல்லாமல் இருந்த வேதாரண்யம் நகரில், 75 சதவீத வீடுகளுக்கு நேற்று மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள வீடுகளுக்கும் மின் இணைப்பு 2 நாளில் கிடைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதேபோல் முத்துப்பேட்டை நகருக்கு மின் இணைப்பு கொடுக்க வேலைகள் நடந்து வருகிறது. நாளை அல்லது நாளை மறுநாளில் இருந்து அங்கு மின்சாரம் கிடைத்து விடும்.

    திருவாரூர் நகராட்சியில் 100 சதவீதமும், மன்னார்குடி நகராட்சியில் 92.66 சதவீதமும், கூத்தாநல்லூர் நகராட்சியில் 92.42 சதவீதமும், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 75.02 சதவீதமும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

    கிராம பகுதிகளில் 30 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின்சாரம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. மின்வாரிய ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள்.

    நிறைய வீடுகளில் மின் இணைப்பு சேதம் அடைந்திருப்பதால் 30-ந்தேதி வரை பில் கட்ட வேண்டாம் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலக்கெடுவை நீட்டிப்பது பற்றி முதல்-அமைச்சருடன் கலந்து பேசி அறிவிப்பு வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone
    வேதாரண்யம் அருகே வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டிணம் காவல் சரகத்திற்குட்பட்ட அண்டகதுறை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 27). இவர் நேற்று அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    அப்போது அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த ஒரு சிறுமி மகேந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முன்பு ஓடி வந்து விட்டார். இதை சுதாரித்து கொண்ட அவர் உடனே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டார். பின்னர் ஆத்திரமடைந்த மகேந்திரன் அந்த சிறுமியை அழைத்து இப்படி சாலையில் வந்து விளையாடலாமா? என்று அடித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது தந்தை பாரதி (45). ஏன் அழுகிறாய் என்று கேட்டதற்கு சிறுமி நடந்ததை கூறியுள்ளார். இதனால் தனது மகளை மகேந்திரன் எப்படி அடிக்கலாம் என்று ஆவேசம் அடைந்த பாரதி, அவரது உறவினரான தமிழ்ச்செல்வம் (26). என்பவருடன் மகேந்திரன் வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் பலத்த காயமடைந்த மகேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் இது குறித்து கரியாப்பட்டிணம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி வழக்கு பதிவு செய்து பாரதி மற்றும் தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

    தமிழகம் முன்னேற ஆட்சி மாற்றம் தேவை என்று வேதாரண்யத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார். #BJP #HRaja
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கரியாப்பட்டினம் கடைத்தெரு பகுதியில் பா.ஜனதா சார்பில் ‘‘உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்’’ மாநில கல்வியாளர் பிரிவு செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. தஞ்சை கோட்ட பொறுப்பாளர் வரதராஜன், நாகை தெற்கு மாவட்டத் தலைவர் நேதாஜி, மாவட்டச் செயலாளர் தமிழ்நேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

    காவிரி பிரச்சனைக்கு முக்கிய காரணம் தி.மு.க.வும், அதற்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சியும்தான். 50 ஆண்டு கால ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்யாமல் அதற்கு போடப்பட்ட நீதிமன்ற வழக்கையும் தள்ளுபடி செய்து துரோகம் செய்தது தி.மு.க.தான். மக்களை ஏமாற்றும் கட்சியாகவும், துரோகியாகவும் உள்ள தி.மு.க. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் கம்யூ. கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றனர். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தனது செயல்பாடுகள் மற்றும் பேச்சுகள் மூலம் தான் அரசியலில் இருப்பதற்கு தகுதியில்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

    தற்போது தமிழகம் உலகிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக உள்ளது. 50 ஆண்டு காலமாக தமிழ்நாடு திராவிட கட்சிகளால் முன்னேறவில்லை. தமிழகம் முன்னேற ஆட்சி மாற்றம் தேவை.

    இவ்வாறு எச்.ராஜா பேசினார்.

    முன்னதாக கோவில் பத்து ஊராட்சியிலிருந்து மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் தொடங்கிய சைக்கிள் பேரணியை மாநில செயலாளர் வேதரத்தினம் தொடங்கி வைத்தார். #BJP #HRaja
    ×