என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "train youth death"
கோவை:
கோவை மதுக்கரை யார்டு பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் ராணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கேரளாவில் இருந்து வந்த ரெயிலில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரமக்குடி:
மதுரை பாரதி நகரைச் சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 38). இவர் மதுரை ரெயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். பால்பாண்டி தனது நண்பருடன் நேற்று ராமேசுவரத்துக்கு பயணிகள் ரெயிலில் புறப்பட்டார்.
மதியம் 12.30 மணி அளவில் பரமக்குடி ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றது. மீண்டும் புறப்பட்டபோது பால்பாண்டி எதிர்பாரத விதமாக ரெயிலில் இருந்து தவறி விழுந்து விட்டார்.
அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் அடுத்த ரெயில் நிலையத்தில் இறங்கினார். பின்னர் பரமக்குடி வந்து ரெயில் நிலைய மேலாளரிடம் தகவல் தெரிவித்தார். புகார் கூறியவர் போதையில் இருந்ததால் நிலைய அதிகாரி அதனை கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் தண்டவாளத்தில் ஒருவர் ரத்தக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக பொது மக்கள் ரெயில்வே உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் ராமேசுவரம் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பால்பாண்டியை மாலை 5.30 மணி அளவில் மீட்டு பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
செல்லும் வழியிலேயே பால்பாண்டி பரிதாபமாக இறந்தார். ரெயிலில் இருந்து தவறி விழுந்த சிறிது நேரத்திலேயே பால் பாண்டியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்தால் உயிர் பிழைத்திருப்பார் என்று பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர். #accidentcase
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்