search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
    X

    கோவையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

    கோவையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மதுக்கரை யார்டு பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் ராணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கேரளாவில் இருந்து வந்த ரெயிலில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×