search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traffic Police"

    திருப்பதி மலைப்பாதைகளில் ஏப்ரல், மே மாதங்களில் 41 விபத்துகள் நடந்துள்ளதாக போக்குவரத்துப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்கள் வந்து செல்ல வசதியாக திருப்பதியில் இருந்து திருமலைக்கும், திருமலையில் இருந்து திருப்பதிக்கும் தனித் தனி மலைப்பாதைகள் உள்ளன. திருப்பதி மலைப்பாதைகளில் தினமும் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், பக்தர்களின் சொந்த வாகனங்கள், தேவஸ்தான மற்றும் அரசு வாகனங்கள் வந்து செல்கின்றன. பகல் நேரத்தில் ஒரு மணிநேரத்தில் 250-லிருந்து 300 அரசு பஸ்களும், 200-லிருந்து 250 மோட்டார்சைக்கிள்களும், 10-லிருந்து 20 தேவஸ்தான வாகனங்களும், 100-லிருந்து 150 பக்தர்களின் சொந்த வாகனங்களும் திருப்பதி மலைப்பாதைகளில் இயக்கப்படுகின்றன.

    கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, அதிக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அந்த வாகனங்கள் மலைப்பாதைகளில் எங்குப் பள்ளம், மேடு, வளைவு இருக்கிறது என்பது தெரியாமல் ஓடுகின்றன. மலைப்பாதைகளில் வந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. அந்த விபத்துகளில் பக்தர்களுக்கு எந்தவித உயிர்சேதமும் ஏற்பட்டதில்லை. எனினும், வாகனங்களுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளன.

    அலிபிரி டோல்கேட்டை கடந்து திருமலையை நோக்கி மலைப்பாதையில் வரும் வாகனங்களுக்கு 28 நிமிடமும், திருமலையில் இருந்து திருப்பதியை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு 40 நிமிடமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை 4 ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைக்கு வந்து விட்டது. கால தாமதமாக வரும் வாகனங்களை எளிதில் அனுமதிப்பதில்லை. அந்த வாகனங்களுக்கு அலிபிரி மற்றும் திருமலையில் உள்ள ஜி.என்.சி. டோல்கேட்டில் அபராதம் விதிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.

    வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் மலைப்பாதைகளில் அதிக வேகத்தில் இயக்கப்படுகின்றன. இதனால் தான் மலைப்பாதைகளில் விபத்துகள் நடக்கின்றன. கடந்த ஏப்ரல், மே மாதத்தில் மட்டும் திருப்பதி மலைப்பாதைகளில் மொத்தம் 41 விபத்துகள் நடந்துள்ளதாக போக்குவரத்துப் போலீசார் தெரிவித்துள்ளனர். டிரைவர்கள் தூங்கி கொண்டே வாகனங்களை ஓட்டுவது, பான் பராக் உள்ளிட்ட போதை பாக்குகளை வாயில் போட்டுக்கொண்டு வாகனங்களை ஓட்டுவது, செல்போன் பேசி கொண்டே வாகனங்களை ஓட்டுதல், முன்னால் செல்லும் வாகனங்களை முந்திச்செல்ல முயலும்போது, சிலர் மலைப்பாதையில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி வைப்பதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன.

    திருப்பதி மலைப்பாதைகளில் விபத்துகள் நடக்காமல் தடுக்க போக்குவரத்துப் போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். #tamilnews
    புனேவில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை அப்புறப்படுத்திய போக்குவரத்து காவல் துறையினர் அதன் மீது உட்காந்தவரையும் சேர்த்து தூக்கிச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.
    புனே:

    இந்தியாவில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் அப்புறப்படுத்துவது வழக்கமான காரியம் தான். எனினும் வாகனத்துடன் சேர்த்து அதன் மீது உட்காந்து இருந்தவரையும் சேர்த்து போலீசார் அப்புறப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.

    புனேவின் விமன் நகரில் பகுதியின் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டு இருந்த பைக்கை அதன் உரிமையாளருடன் போக்குவரத்து போலீசார் அப்புறப்படுத்தும் வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

    மார்ச் 30-ம் தேதி விமன் நகரில் நடைபெற்றிருக்கும் சம்பவத்தில், சாலையில் தவறான இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் இளைஞர் ஒருவர் அமர்ந்து இருக்கிறார். மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கும் படி கூறியதால் போலீசாருடன் நடைபெற்ற வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த போலீசார் வாகனம் மற்றும் இளைஞரையும் சேர்த்து அப்புறப்படுத்தும் வாகனத்தில் ஏற்றியிருக்கின்றனர்.



    பின் சிறிது தூரம் சென்றதும் இளைஞரை போலீசார் இறக்கிவிட்டிருக்கின்றனர். இந்த விவகாரத்தில் மோட்டார்சைக்கிள் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    “இது போன்ற நடவடிக்கை முற்றிலும் தவறு. இதுகுறித்து பதில் அளிக்க சம்பவ இடத்தில் இருந்த துணை ஆய்வாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதே போன்று சம்பவத்தில் தொடர்புடைய மற்ற அதிகாரிகள் தவறு செய்தது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட இளைஞரின் பைக் அது கிடையாது. மேலும் காவல் துறையினருடன் இளைஞர் தவறாக நடந்து கொண்டதாக துணை ஆய்வாளர் என்னிடம் தெரிவித்தார்.” என போக்குவரத்து ஆய்வாளர் பி,ஜி. மிசல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அஜின்கியா ரிக்ஷா நிறுவனத்தை சேர்ந்த நிதின் புஜ்பல் கூறும் போது, பொது இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தும் அதிகாரிகள் பெரும்பாலும், பொதுமக்களை தரக்குறைவாக நடத்துகின்றனர் என்றார். மேலும் போலீசார் பொது மக்களுக்கு உரிய மறியாதை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    காவல் துறையினர் மோட்டார்சைக்கிள் மற்றும் அதன் மீது அமர்ந்து இருப்பவரையும் சேர்த்து தூக்கும் வீடியோவை கீழே காணலாம்..,


    ×