search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Budget 2019"

    தமிழகத்தில் அனைத்து துறை அரசு ஊழியர் ஊதியத்துக்காக ரூ.2,63,828.49 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    * பழங்கள் மற்றும் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு
    * நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.13,605 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
    * தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்துக்கு ரூ.172 கோடி ஒதுக்கீடு
    * கிராமப்புற இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக ரூ.230.89 கோடி ஒதுக்கீடு
    * ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.4570 கோடி ஒதுக்கீடு

    * சென்னையில் விரிவான திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ரூ.1546 கோடி செலவில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி
    * சிவகங்கை கோட்டத்தில் 622 கிமீ சாலை பணிகளுக்கு ரூ.715 கோடி ஒதுக்கீடு
    * தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.459 கோடி ஒதுக்கீடு
    * சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தின் கீழ் 654 கிலோ மீட்டர் சாலைப்பணிகள் நடந்துள்ளது
    * சிறு துறைமுகங்கள் துறைக்காக 13,605 கோடி ரூபாய் ஒதுக்கீடு



    * தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் அரசு பள்ளி மாணவர்கள் வேகமாக முன்னேறி வருகின்றனர்
    * மத்திய அரசிடமிருந்து உதவி மானியமாக ரூ.25,602.74 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது
    * 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.5000 தொடர்ந்து வழங்கப்படும்
    * அனைத்து துறை அரசு ஊழியர் ஊதியத்துக்காக ரூ.2,63,828.49 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு, திருமங்கலம், கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் மூன்று வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய்க்கோட்டம் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே அரசு சேவைகளை வழங்க இந்த அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2011-ம் ஆண்டு முதல், 79 புதிய வருவாய் வட்டங்களும், 10 புதிய வருவாய்க் கோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 2018-2019ஆம் ஆண்டில் மட்டும், எட்டு வருவாய் வட்டங்களை இந்த அரசு உருவாக்கியுள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு, திருமங்கலம், கள்ளிக்குடி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய்க்கோட்டம் ஒன்று 2019-2020ஆம் ஆண்டில் உருவாக்கப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் மொத்த கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    அத்திக்கடவு -அவினாசி திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அரசு-தனியார் பங்களிப்புடன் பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்ப திறன் பயிற்சி வழங்கப்படும். சுற்றுலா தலங்களில் தனியாருடன் இணைந்து கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் தமிழக திறன் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    உணவு மானியத்திற்காக ரூ.6 ஆயிரம் கோடி ரூபாயும், பொது விநியோக திட்டத்தை கூட்டுறவு சங்கங்கள் செயல்படுத்த 333.81 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திருமுடிவாக்கம், ஆலத்தூர் தொழிற்பேட்டைகள் விரிவாக்கப்படும்.  2019-20 நிதியாண்டில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மாநில அரசின் பங்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அனைத்து கிராமங்களிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1200 கோடி, தூய்மை இந்தியா திட்டத்திற்காக ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
     
    ரூ.116 கோடி செலவில் நீரோடி, மார்த்தாண்டத்துறை ஆகிய இடங்களில் கடலரிப்பு தடுப்பான்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    நகர்ப்புற ஏழைகளுக்கு வாடகை வீட்டு வசதியினை ஏற்படுத்தும் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.18,273 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறைக்கு ரூ.6,265.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமூக நலத்துறைக்கு ரூ.5,305 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை மாதவரம்- சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்படும். உயர்கல்வித்துறைக்கு ரூ.4,584.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.5,911 கோடி, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.482 கோடி, குடியிருப்புகள் மேம்படுத்த ரூ.100 கோடி, பழங்கள் மற்றும் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.50 கோடி, மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான பங்கு மூலதனம் மற்றும் கடனாக மொத்தம் ரூ.2,681 கோடி, குறைந்தபட்ச தேவைகள் திட்டத்துக்காக 364 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



    மத்திய அரசு புதிதாக அறிவித்துள்ள ஓய்வூதியத் திட்டத்தின் பயனை அமைப்புசாரா தொழிலாளர்கள் பெறும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும். கழிவில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக 5 ஆயிரத்து 269 கோடி திட்ட மதிப்பீடு பரிசீலனையில் உள்ளது

    2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் மொத்த கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக இருக்கும். கடந்த ஆண்டு தமிழகத்தின் கடன் ரூ.3.55 லட்சம் கோடியாக இருந்தது.

    பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 5.85 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்படும்.  சென்னை கோயம்பேட்டில் 296.50 கோடியில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நடுத்தர குடும்பங்களுக்கு வரும் ஆண்டில் 1.97 லட்சம் குடியிருப்புகளை கட்ட அனுமதி அளிக்கப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    தமிழகத்தில் வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.1,031 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    மீன்பிடி குழுக்களுக்கு நவீன தொலைத்தொடர்ப்பு கருவிகள் வழங்கப்படும். 80 ஆழ்கடல் மீன்பிடி குழுக்களுக்கு 240 நேவிக் தகவல் பெறும் கருவிகள், 160 ஐசாட்-2 தொலைபேசிகள் வழங்கப்படும்.  இயற்கை வேளாண்மையை மேம்படுத்த மாவட்டந்தோறும் மையங்கள் அமைக்கப்படும்.

    பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது. சத்துணவு திட்டத்திற்கான காய்கறி, தாளிதப் பொருட்களுக்கான விலை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உயர்த்தி வழங்கப்படும்.

    சிறப்பு திட்டத்தின் மூலம் ஆதி திராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறைக்கு ரூ.258.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் ஏழைகளுக்கு 38,000 குடியிருப்புகள் கட்டப்படும்.

    ஒட்டுமொத்தமாக விவசாயத் துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிறுவனங்களின் மறுகட்டமைப்பு தொடர்பான சொத்து பரிமாற்றங்களுக்கான பதிவுக்கட்டணம் அதிகபட்சமாக ரூ.3000 என நிர்ணயிக்கப்படும்.

    வரிகள் மூலம் தமிழக அரசுக்கு ரூ.1,37,964 கோடி வருவாய் கிடைக்கும். வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.1,031 கோடி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டிற்கு ரூ.6,265 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எரிசக்தி துறைக்கு ரூ.18,560.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



    மெட்ரோ ரெயில் திட்டத்தை மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளை தூர்வார ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு, நவீன பாசன வேளாண்மைத் திட்டத்திற்கு ரூ.235.05 கோடி நிதி ஒதுக்கீடு, அணைகள் புனரமைப்புக்காக ரூ.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த 8-வது பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:-

    2018-19-ம் ஆண்டில் உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி விகிதம் 8.16 சதவீதமாக உயர்ந்துள்ளது.  வரும் நிதியாண்டில் 1,986 கிமீ நீளமுள்ள சாலைகளில் ரூ.1142 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். உற்பத்தி சேவை துறைகளில் கூடுதல் முதலீடுகளை ஈர்க்க அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

    பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2698 டாஸ்மாக் கடைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன. வேளாண் இயந்திரமயமாக்கலுக்காக ரூ.172 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் விரிவான திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ரூ.1546 கோடி செலவில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



    கொடுங்கையூர்-பெருங்குடி குப்பை கிடங்கில் மின்சாரம் தயாரிக்கும் அலகினை தனியார் பங்களிப்புடன் ரூ.5259 கோடியில் செயல்படுத்த பரிசீலனை செய்யப்படுகிறது.

    அரவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் கூட்டு குடிநீர் திட்டங்களை மேற்கொள்ள ரூ.1558.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  2030ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீட்டு வசதி கிடைக்கும். நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் குடியிருப்பு கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் காவல்துறைக்கு மட்டும் ரூ.8084.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    * காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு ரூ.111.57 கோடி ஒதுக்கீடு

    * வரும் நிதி ஆண்டில் காவல்துறைக்கு மட்டும் ரூ.8084.80 கோடி ஒதுக்கீடு

    * தோட்டக்கலைத்துறை மேம்பாட்டிற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

    * தோட்டக்கலை மற்றும் வேளாண் கல்லூரிகளில் மேம்பாட்டிற்கு ரூ.79.73 கோடி ஒதுக்கீடு

    * தனிநபர்களின் ஆண்டு வருமானம் தமிழகத்தில் ரூ.1,42,267 ரூபாயாக உயர்ந்துள்ளது



    * மேலும் 2 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படும்- இதற்காக ரூ.1361 கோடி ஒதுக்கீடு

    * வரும் நிதியாண்டில் 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித்தரப்படும்

    * சூரிய சக்தியால் இயங்கும் 2000 பம்பு செட்டுகள் மூலம் நீர்மேலாண்மை மேம்படும்

    * வரும் நிதியாண்டில் சுகாதாரத்துறைக்கு ரூ.12,563 கோடி ஒதுக்கீடு

    * 2018-19-ம் ஆண்டில் உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி விகிதம் 8.16 சதவீதமாக உயர்வு

    * வரும் நிதியாண்டில் 1,986 கிமீ நீளமுள்ள சாலைகளில் ரூ.1142 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    சமூக பாதுகாப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக ரூ.3,985 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழ் வரும் குடும்பத்திற்கு விரிவான விபத்து- ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையும், நிரந்தர ஊனத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணத் தொகையும் வழங்கப்படும்.



    விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நலத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.14.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை, கோவை, மதுரையில் முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு ரூ.1,031.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.

    சத்துணவு திட்டத்திற்கு ரூ.1772.12 கோடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.18,273 கோடி, புதிய விரிவான காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி, நகராட்சிகளில் குடிநீர் வசதிக்காக ரூ.18,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும். ரூ.2000 கோடியில் சென்னையில் மல்டி லெவல் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு வரும் நிதியாண்டில் 3000 ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழகத்தில் 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை (நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடியது. காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-



    2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் வரி வருவாய் ரூ.1,97,721 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது. நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.284 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடுகள் கட்டித் தரப்படும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.1700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.  #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    ×