search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tirupati elumalaiyan"

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சனிக்கிழமை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சனிக்கிழமை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசன பக்தர்கள் செல்லும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பி வழிந்தன. அதனையும் தாண்டி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் காத்திருக்கின்றனர். இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரத்திற்கு மேலாகிறது.

    ரூ.300 கட்டணத்தில் 5 மணி நேரத்திலும், நடை பாதை பக்தர்கள் 3 மணி நேரத்திலும் சாமி தரிசனம் செய்தனர். விரைவு தரிசனம், நடைபாதை தரிசனம் உள்ளிட்டவற்றில் டோக்கன் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரத்துக்குள் சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று முதல் இன்று காலை வரை 86 ஆயிரத்து 744 பேர் சாமி தரிசனம் செய்தனர். 36,455 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். நேற்று முன்தினம் 3.50 கோடியும் நேற்று 2 கோடியே 78 லட்சம் உண்டியல் வசூலானது. தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பக்தர்களுக்கு தேவையாக அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தானம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருமலையில் பக்தர்கள் தங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து புகார் அளிக்க 18004254141 என்ற டோல் ப்ரீ எண் மற்றும் 9399399399 என்ற தேவஸ்தானத்தின் வாட்ஸ்அப் எண் உள்ளிட்டவற்றை தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் உடனுக்குடன் தீர்வு காண எப்.எம்.எஸ். என்ற ஹெல்ப் லைன் சேவையை தேவஸ்தானம் தொடங்கி உள்ளது. இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஊழியர்கள் பேசுவார்கள்.

    சிறிய பிரச்சனைகளை ஊழியர்களும், பெரிய பிரச்சனைகளை அதிகாரிகளும் உடனுக்குடன் அறிந்து தீர்வு காண்பர். அதற்காக பக்தர்கள் 1800425111111 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
    திருப்பதி ஏழுமலையானின் அனைத்து நகைகளையும், பக்தர்களின் பார்வைக்கு வைக்க அறங்காவலர் குழுவில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
    திருமலை:

    திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய பவனில் நடந்தது. திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் புட்டா.சுதாகர்யாதவ் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தேவஸ்தானம் மீதும் அதில் பணியாற்றிய அதிகாரிகள் மீதும் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் மற்றும் சிலர் ஏழுமலையானின் நகைகள் மாயமாகி விட்டதாகவும், மைசூர் மகாராஜா காணிக்கையாக அளிக்க பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிங்க் வைரத்தை காணவில்லை என்பன உள்பட பல்வேறு அவதூறு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர்.

    அவர்கள் மீது தேவஸ்தானம் சார்பில் இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடர்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 நாட்களில் வழக்கு தொடர உள்ளவர்களின் பெயர்கள் வெளியிடப்படும்.

    24 ஆண்டுகள் தேவஸ்தான தலைமை அர்ச்சகராகப் பணியாற்றிய ரமண தீட்சிதருக்கு தைரியம் இருந்தால் அவர் அறங்காவலர் குழுவின் முன்னால் வந்து தனது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும். ஏழுமலையானின் அனைத்து நகைகளையும், பக்தர்களின் பார்வைக்கு வைக்க அறங்காவலர் குழுவில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.



    ஆனால் இதற்கு ஆகம விதிகள் ஒப்புக் கொள்கிறதா என்பதை அறிய ஆகம வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்கப்பட உள்ளது. பின்னர் இது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும்.

    ஆந்திர மாநிலத்தில் தலித் வாடா, கிரிஜன வாடா, மச்சக்கார காலனி ஆகிய பகுதிகளில் ரூ.8 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை செலவு செய்து வெங்கடாஜலபதி கோவில், ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. சித்தூர் மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் கோவில் பிரசித்திப் பெற்றதாகும். அங்கு, வேத பாட சாலை தொடங்கப்பட உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. அதற்காக, திருமலையில் பழைய அன்னதானக்கூடத்தில் பொது காவல் மைய கட்டுப்பாட்டு அலுவலகம் அமைத்து, அங்கு ரூ.1 கோடியே 60 லட்சம் செலவில் அகண்ட ஒளித்திரைகள் அமைக்கப்பட உள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திடம் அதற்கான பணியை ஒப்படைக்கப்பட உள்ளது.

    சென்னையில் உள்ள தேவஸ்தான தகவல் மையத்தில் பத்மாவதி தாயாருக்கு தினமும் புஷ்ப அலங்காரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக பக்தர்கள் தினமும் புஷ்பங்களை காணிக்கையாக வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருப்பதி ஏழுமலையானுக்கு சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள், விஜயநகர பேரரசர்கள், மைசூர் மகாராஜாக்கள், ஆங்கிலேயர்கள், நவாப்புகள், ஜமீன்கள், மிராசுதாரர்கள் உட்பட தற்போதைய அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பலர் கோடிக்கணக்கிலான தங்க, வைர ஆபரணங்களை காணிக்கையாக வழங்கி உள்ளனர். இதன் மதிப்பு பல்லாயிரம் கோடி இருக்கும்.

    இந்த நகைகள் யாவும், பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டால் அதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்ய வேண்டியிருக்கும்.
    ×