search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theni district"

    தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் சோத்துப்பாறை அணை நிரம்பி உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் குளங்கள், கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து கூடி வருகிறது. நேற்று பெரியகுளம், தேவதானப்பட்டி, கூடலூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.

    சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவான 127 அடியை எட்டியுள்ள நிலையில் தற்போது அணைக்கு 136 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 3 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 126.60 அடியாக உள்ளது.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.40 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 37.14 அடியாக உள்ளது.

    நீர்வரத்து 152 கன அடி. மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக 60 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.40 அடி. வரத்து 15 கன அடி.

    பெரியாறு 10.8, தேக்கடி 17.2, கூடலூர் 9.8, சண்முகாநதி அணை 2, உத்தமபாளையம் 10.2, வைகை அணை 38.2, மஞ்சளாறு 14, சோத்துப்பாறை 16 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    தேனி மாவட்டத்தில் நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 97.72 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். #SSLCResult #TNResult
    தேனி:

    தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தேனி மாவட்டத்தில் 8,111 மாணவர்களும், 7,874 மாணவிளும் என 15,985 பேர் தேர்வு எழுதினர்.

    இதில் 7,847 மாணவர்களும், 7,774 மாணவிகளும் என மொத்தம் 15,621 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 96.75 சதவீதமும், மாணவிகள் 98.73 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் 97.72 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மாநில அளவில் 6-வது இடமாகும்.

    தேனி மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு 96.57 சதவீதமும், கடந்த ஆண்டு 97.10 சதவீதம் மாணவ-மாணவிகளே தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த 2 ஆண்டுகளை விட இந்த ஆண்டு 97.72 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேனி மாவட்டத்தில் 81 அரசு பள்ளிகளை சேர்ந்த 5,199 மாணவர்களும், 5,067 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில் 97.46 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாவட்டத்தில் பார்வையற்ற 13 பேர், வாய்பேச இயலாத 17 பேர் உடல் ஊனமுற்ற 20 பேர், கண்பார்வையற்ற 13 பேர், காது கேளாத 17 பேர் என மாற்று திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் காதுகேளாத மாணவர்கள் 100 சதவீதமும், உடல் ஊனமுற்ற மாணவர்கள் 95 சதவீதமும், இதர மாணவர்கள் 100 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் தேர்வு முடிவுகள் அந்தந்த மாணவர்களின் செல்போனுக்கே குறுந்தகவலாக அனுப்பப்பட்டது. தரவரிசை பட்டியல் இல்லாமல் கிரேடு முறை அறிவிக்கப்பட்டதால் பள்ளிகளில் எவ்வித ஆரவாரம், கொண்டாட்டம் காணப்படவில்லை.

    பள்ளிகளிலும் குறைந்த அளவு மாணவர்களே வந்திருந்து தங்கள் தேர்வு முடிவுகளை பார்த்து சென்றனர். மாணவர்களின் உளவியல் பிரச்சனைக்கு இந்த மதிப்பெண் பட்டியல் வெளியீடு சிறந்த முறையில் இருப்பதாக பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். #SSLCResult #TNResult
    தேனி மாவட்டத்தில் மழை தொடர்வதால் வைகை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1¼ அடி உயர்ந்துள்ளது.

    கூடலூர்:

    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அக்னிநட்சத்திரம் தொடங்கியதில் இருந்து காலை நேரங்களில் வெயில் கொளுத்துகிறது.

    மாலையில் இடி மின்னலுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் கோடை வெயிலை சமாளிக்க முடிகிறது.

    பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் சாரல்மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து 473 கனஅடியாக உயர்ந்துள்ளது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து 902 கனஅடிநீர் வருகிறது. மேலும் அணையின் நீர்மட்டமும் ஒரேநாளில் 1¼ அடி உயர்ந்து 35.99 அடியாக உள்ளது. 48 கனஅடிநீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணை நீர்மட்டம் 35.40 அடியாக உள்ளது. 25 கனஅடிநீர் வருகிறது. நீர்திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.50அடியாக உள்ளது. 80 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 2.8, தேக்கடி 5.4, கூடலூர் 1.4, உத்தமபாளையம் 1.2, மஞ்சளாறு 8, சோத்துப்பாறை 5 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு கோடை மழை கைகொடுத்ததால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே மழை தொடரவேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.

    ×