என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "THE POLICE"
- கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின் பேரில் மாநகரப் பகுதியில் கொலை,கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
- குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அழைத்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம்:
சேலம் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின் பேரில் மாநகரப் பகுதியில் கொலை,கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தற்போது அதற்காக அந்த போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அழைத்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடும் 17 ரவுடிகளை அழைத்து அவர்களின் பெயர், போன் நம்பர், ஆதார் எண் பதிவு செய்யும் பணி உதவிக் கமிஷனர் பாபு முன்னிலையில் இன்ஸ்பெக்டர் செல்வி (பொறுப்பு) சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெய சீலன், மோனிகா ஈடுபட்டனர். பின்னர் அவர்களுக்கு உதவி கமிஷனர் பாபு பல்வேறு அறிவுரை வழங்கினார். மேலும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இந்த நடவடிக்கையால் அந்த பகுதியில் உள்ள ரவுடிகள் பயத்தில் இருந்து வருகின்றனர்.
- பெண்கள் திடீரென சென்னிமலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
- பட்டாசு வெடித்தவர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்த அம்மாபாளையம் பகுதியில் ஒருவர் அடிக்கடி இரவு நேரத்தில் சம்பந்தமில்லாமல் பட்டாசு வெடித்து வந்ததாக கூறப்படுகிறது.
பட்டாசு சத்தத்தால் கால்நடைகள் கயிற்றை அவிழ்த்து கொண்டு ஓடி விடுவதாக பொதுமக்கள் போலீசில் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை அந்த நபர் மீண்டும் அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசை வெடித்ததாக தெரிகிறது.
இதில் இருந்த தீ பரவி அங்குள்ள ஊஞ்சலாங்காட்டை சேர்ந்த தங்கராசு என்பவரின் தோட்டத்தில் உள்ள வேலியில் தீப்பிடித்து எரிந்தது.
இதைகண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்த உடனடியாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த நிலையில் அடிக்கடி பொது மக்களுக்கு இடை யூறாக பட்டாசு வெடிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி நேற்று இரவு அம்மாபாளையத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திடீரென சென்னிமலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது பொது மக்களுக்கு இடையூறாக பட்டாசு வெடித்தவர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.
இதைத் தொடர்ந்து பொது மக்கள் 2 மணி நேரத்துக்கு பிறகு அங்கு இருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் போலீசார் பட்டாசு வெடித்தவரை பிடித்து விசாரணை நடத்தி னர்.
இதையடுத்து அவரை போலீசார் இது போன்று நடந்து கொள்ள கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
- திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் வழங்கினார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில், சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் அலுவலக்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் கலந்து கொண்டு, அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலத்தில் சிறப்பாக செயல்பட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் செல்வகுமாரி, சைபர் கிரைம் வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கண்டுபிடித்த ஆய்வாளர் செங்குட்டுவன், உதவி ஆய்வாளர் மணிகண்டன், உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) சிவனேசன், கஞ்சா வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், தலைமை காவலர் ரவி, முதல் நிலைக் காவலர் தமிழ்ச்செல்வன் மற்றும்
காவலர்கள் முகமது தஸ்லீம், சிவாஜி, விமல் ராஜ், ஐயப்பன், மேலும் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த காவலர்களான பெண் தலைமை காவலர் வரலட்சுமி, முதல்நிலைப் பெண் காவலர்கள் வனிதா மற்றும் லதா ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
முன்னதாக, அரியலூர் மாவட்ட குற்ற பதிவேடுகள் பிரிவில் ஆய்வு செய்த அவர், அந்த பதிவேடுகளை பராமரிக்க தேவையான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் அலுவலர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உடனிருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்