search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "warned"

    • கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின் பேரில் மாநகரப் பகுதியில் கொலை,கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
    • குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அழைத்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின் பேரில் மாநகரப் பகுதியில் கொலை,கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தற்போது அதற்காக அந்த போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அழைத்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடும் 17 ரவுடிகளை அழைத்து அவர்களின் பெயர், போன் நம்பர், ஆதார் எண் பதிவு செய்யும் பணி உதவிக் கமிஷனர் பாபு முன்னிலையில் இன்ஸ்பெக்டர் செல்வி (பொறுப்பு) சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெய சீலன், மோனிகா ஈடுபட்டனர். பின்னர் அவர்களுக்கு உதவி கமிஷனர் பாபு பல்வேறு அறிவுரை வழங்கினார். மேலும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இந்த நடவடிக்கையால் அந்த பகுதியில் உள்ள ரவுடிகள் பயத்தில் இருந்து வருகின்றனர்.

    புதுவையில் மழை பெய்து வருவதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    கஜா புயலையொட்டி புதுவையில் கடந்த 15-ந்தேதி முதல் மழை கொட்டியது. புயல் கரையை கடந்த 15-ந்தேதி இரவு முதல் 16-ந்தேதி காலை வரை 6.5 செ.மீ. மழை பதிவானது.

    இந்நிலையில் மீண்டும் வங்கக்கடலில் தென் கிழக்கில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது தென்மேற்கு பகுதிக்கு நகர்ந்துள்ளது. இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறலாம் என்பதால் புதுவை, காரைக்காலில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது.

    இதன்படி புதுவையில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 12 மணிக்கு மேல் மழை கொட்டி தீர்த்தது. நேற்று இரவும் விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது.

    இன்று காலை முதல் வானம் கருத்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான தூறலுடன் மழை பெய்து வருகிறது. இன்று மாலை கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சினிமா திரையரங்குகளில் குடிநீர், பாப்கார்ன் உள்ளிட்ட உணவுப்பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Telangana #MovieTheatres
    ஐதராபாத்:

    திரையரங்குகளில் அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க பல்வேறு விதிமுறைகளை விதித்து தெலுங்கானா மாநிலத்தின் திரையரங்க கண்காணிப்பு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி. விலைக்கு மேல் உணவுப்பொருட்களை விற்பது சட்டவிரோதம் என்றும், அதற்கு அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதன்படி, முதல்முறை குற்றம்சாட்டப்படுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், 2-வது முறை கைதாகினால், 50 ஆயிரம் அபராதமும் தொடர்ந்து தவறு செய்யும் பட்சத்தில் அதிகபட்சமாக 1 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், அத்துடன் 6 மாதம் முதல் 1 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய நடைமுறை வருகிற 1-ம் தேதி முதல் கடைபிடிக்கப்படும் என்றும், தொடர்ந்து திரையரங்குகள் கண்காணிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சமீபத்தில் திரையரங்குகளில் உணவுப்பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Telangana #MovieTheatres
    ×