என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The police"

    • பெண்கள் திடீரென சென்னிமலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
    • பட்டாசு வெடித்தவர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்த அம்மாபாளையம் பகுதியில் ஒருவர் அடிக்கடி இரவு நேரத்தில் சம்பந்தமில்லாமல் பட்டாசு வெடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    பட்டாசு சத்தத்தால் கால்நடைகள் கயிற்றை அவிழ்த்து கொண்டு ஓடி விடுவதாக பொதுமக்கள் போலீசில் புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை அந்த நபர் மீண்டும் அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசை வெடித்ததாக தெரிகிறது.

    இதில் இருந்த தீ பரவி அங்குள்ள ஊஞ்சலாங்காட்டை சேர்ந்த தங்கராசு என்பவரின் தோட்டத்தில் உள்ள வேலியில் தீப்பிடித்து எரிந்தது.

    இதைகண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்த உடனடியாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    இந்த நிலையில் அடிக்கடி பொது மக்களுக்கு இடை யூறாக பட்டாசு வெடிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி நேற்று இரவு அம்மாபாளையத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திடீரென சென்னிமலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    அப்போது பொது மக்களுக்கு இடையூறாக பட்டாசு வெடித்தவர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.

    இதைத் தொடர்ந்து பொது மக்கள் 2 மணி நேரத்துக்கு பிறகு அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் போலீசார் பட்டாசு வெடித்தவரை பிடித்து விசாரணை நடத்தி னர்.

    இதையடுத்து அவரை போலீசார் இது போன்று நடந்து கொள்ள கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின் பேரில் மாநகரப் பகுதியில் கொலை,கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
    • குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அழைத்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின் பேரில் மாநகரப் பகுதியில் கொலை,கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தற்போது அதற்காக அந்த போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அழைத்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடும் 17 ரவுடிகளை அழைத்து அவர்களின் பெயர், போன் நம்பர், ஆதார் எண் பதிவு செய்யும் பணி உதவிக் கமிஷனர் பாபு முன்னிலையில் இன்ஸ்பெக்டர் செல்வி (பொறுப்பு) சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெய சீலன், மோனிகா ஈடுபட்டனர். பின்னர் அவர்களுக்கு உதவி கமிஷனர் பாபு பல்வேறு அறிவுரை வழங்கினார். மேலும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இந்த நடவடிக்கையால் அந்த பகுதியில் உள்ள ரவுடிகள் பயத்தில் இருந்து வருகின்றனர்.

    ×