என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
- சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
- திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் வழங்கினார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில், சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் அலுவலக்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் கலந்து கொண்டு, அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலத்தில் சிறப்பாக செயல்பட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் செல்வகுமாரி, சைபர் கிரைம் வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கண்டுபிடித்த ஆய்வாளர் செங்குட்டுவன், உதவி ஆய்வாளர் மணிகண்டன், உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) சிவனேசன், கஞ்சா வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், தலைமை காவலர் ரவி, முதல் நிலைக் காவலர் தமிழ்ச்செல்வன் மற்றும்
காவலர்கள் முகமது தஸ்லீம், சிவாஜி, விமல் ராஜ், ஐயப்பன், மேலும் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த காவலர்களான பெண் தலைமை காவலர் வரலட்சுமி, முதல்நிலைப் பெண் காவலர்கள் வனிதா மற்றும் லதா ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
முன்னதாக, அரியலூர் மாவட்ட குற்ற பதிவேடுகள் பிரிவில் ஆய்வு செய்த அவர், அந்த பதிவேடுகளை பராமரிக்க தேவையான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் அலுவலர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உடனிருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்