search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Telangana CM"

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மீதிருந்த அளவு கடந்த அன்பு காரணமாக போலீஸ்காரர் அவருக்கு கோவில் கட்டியுள்ளார். #TelanganaCM #ChandrashekarRao
    நகரி:

    நல்கொண்டா மாவட்டம் நிதிமனூரு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசலு. சாட்டப்பல் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

    இவர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் தீவிர ஆதரவாளர். இந்த நிலையில் சந்திரசேகர் ராவ் மீதிருந்த அளவு கடந்த அன்பு காரணமாக அவருக்கு கோவில் கட்ட சீனிவாசலு முடிவு செய்தார்.

    இதுபற்றி அவர் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து தனது சொந்த ஊரான நிதிமனூரு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் சந்திரசேகர் ராவுக்கு கோவில் கட்டும் பணியை தொடங்கினார்.

    இக்கோவிலை ரூ.2 லட்சம் செலவில் கட்டி முடித்தார். அதில் சந்திரசேகர் ராவின் மார்பளவு சிலையை வைத்துள்ளார். இக்கோவிலை முதல்வர் சந்திரசேகர் ராவ் திறக்க வேண்டும் என்று சீனிவாசலு கோரிக்கை விடுத்து இருந்தார்.

    சந்திரசேகர் ராவ் தனது கிராமத்துக்கு வரும்போது கோவிலின் திறப்பு விழாவை நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். #TelanganaCM  #ChandrashekarRao
    தெலுங்கானாவில் இப்போது தேர்தல் நடத்தினால் சந்திரசேகர ராவ் கட்சிக்கு 95 இடங்கள் கிடைக்கும் என்று புதிய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. #Telangana #Chandrasekharrao

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் ஆட்சி நடந்து வந்தது.

    சமீபத்தில் முதல்-மந்திரி சந்திரசேகரராவ் தெலுங்கானா சட்டசபையை முன் கூட்டியே கலைத்தார். எனவே விரையில் அங்கு சட்டசபை தேர்தல் நடத்தும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

    இந்த நிலையில் தெலுங்கானா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என்று ஒரு சர்வே நடத்தப்பட்டது. அதில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிய வந்தது.

    தற்போது ஆகஸ்டு 27-ந்தேதி தொடங்கி கடந்த 12-ந்தேதி வரை புதிய கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

     


    புதிய கருத்துக் கணிப்புப்படி இப்போது தேர்தல் நடத்தப்பட்டால் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 95 இடங்களை சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ் டீரிய சமிதி கட்சி கைப்பற்றும் என்று தெரிய வந்துள்ளது. மொத்த வாக்காளர்களில் சுமார் 48 சதவீதம் பேரின் வாக்குகள் சந்திரசேகரராவ் கட்சிக்கு கிடைக்கும் என்று சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சிக்கு 10 முதல் 20 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. முஸ்லிம் கட்சிக்கு 8 இடங்களும் பா.ஜ.க.வுக்கு 6 இடங்களும் மற்றவர்களுக்கு 3 இடங்களும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தங்களுக்கு பிடித்த முதல்-மந்திரி யார்? என்ற கேள்விக்கு பெரும்பாலானவர்கள் சந்திரசேகர ராவை சுட்டிக் காட்டி உள்ளனர். கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 52.58 சதவீதம் பேர் தெலுங்கானாவில் மீண்டும் டி.ஆர்.எஸ். கட்சி ஆட்சியே வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

    முதல்-மந்திரியாக சந்திர சேகரராவ் மிக சிறப்பாக செயல்பட்டதாக 67.26 சதவீதம் பேர் திருப்தி தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. #Telangana #Chandrasekharrao

    தெலுங்கானா மாநிலத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்த முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ள நிலையில், சட்டசபையை கலைப்பதற்கு அமைச்சரவையில் இன்று முடிவு செய்யப்பட்டது. #Telangana #Chandrasekharrao
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அவரது ஆட்சி காலம் முடிய இன்னும் 9 மாதங்கள் உள்ளன.

    ஆனால் ஆட்சியை கலைத்து விட்டு முன்கூட்டியே சட்டசபை தேர்தலை சந்திக்க சந்திரசேகரராவ் முடிவு செய்து இருக்கிறார். அதற்காக கட்சி நிர்வாகிகளிடம் தீவிர ஆலோசனை நடத்தி வந்தார்.

    கடந்த வாரம் ஐதராபாத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது ஆட்சியை கலைப்பதாக இருந்தால் முன்கூட்டியே தொண்டர்களிடம் தெரிவிப்பேன் என்று சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

    இந்த நிலையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை சந்திரசேகரராவ் நாளை வெளியிடுகிறார். இதற்காக 2 நாட்களாக பண்ணை வீட்டில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வேட்பாளர்களை இறுதி செய்து உள்ளார். அதன்பின் நேற்று தலைமை செயலாளர் மற்றும் சட்ட சபை செயலாளருடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில் இன்று சந்திரசேகரராவ் தனது அமைச்சரவையை கூட்டினார். இதில் சட்டசபையை கலைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



    உடனடியாக அவர் தீர்மான நகலுடன் கவர்னரை சந்திக்க சென்றார். அங்கு கவர்னரை சந்தித்து தீர்மான நகலை வழங்கினார். அடுத்த கட்டமாக கவர்னர் ஒப்புதல் அளித்ததும் சட்டசபை முறைப்படி கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்படும்.

    சந்திரசேகரராவ், நாளை வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார். முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 15 பேர் பெயர்கள் இடம் பெறுகிறது.

    தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்களில் 15 பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்பட மாட்டாது என்று தெரிகிறது. இவர்களுக்கு மக்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடமும் எதிர்ப்பு இருப்பதால் சீட் தரக்கூடாது என்று முடிவு செய்து உள்ளார். முதல் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறும் 15 பேரில் பெரும்பாலும் தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்களும் எந்தவித புகார்களுக்கும் ஆளாகாதவர்கள் என்று தெரிகிறது.

    காமரெட்டி தொகுதியில் கோவர்தன் எம்.எல்.ஏ.வும் ஜெகிட்யல் தொகுதியில் சஞ்சய் மோகம் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிதாக உதயமான தெலுங்கானாவில் 2014-ம் ஆண்டு நடந்த முதல் சட்டசபை தேர்தலில மொத்தம் உள்ள 119 இடங்களில் சந்திரசேகரராவின் கட்சி 90 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 12-ந்தேதி தெலுங்கானா மாநிலத்துக்கு வருகிறார். மெகபூப்நகர் மாவட்டத்தில் பா.ஜனதா தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார். இந்த தகவலை மாநில பா.ஜனதா தலைவர் லட்சுமண் தெரிவித்துள்ளார். #Telangana #Chandrasekharrao
    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவிடம் நாட்டையே வழிநடத்தி செல்லும் திறமை இருப்பதால் பிரதமர் ஆவார் என்று அவரது மகனும், மந்திரியுமான தரகா ராமராவ் கூறியுள்ளார். #ChandrashekarRao
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி அரசு அமைந்து 4½ ஆண்டுகள் ஆவதையொட்டி ஐதராபாத்தில் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிகளை சேகரிக்க டெல்லியில் இருந்து தனியாக பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகனும், மந்திரியுமான தரகா ராமராவ் பேட்டி அளித்தார்.

    தெலுங்கானா மாநிலத்தில் எங்களது கட்சி மிக வலுவாக உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 17 இடங்களில் 15 இடங்களை நாங்கள் கைப்பற்றுவோம். அதேபோல 119 சட்டமன்ற தொகுதிகளில் 109 இடங்களை கைப்பற்றுவோம்.


    எனது தந்தை சந்திரசேகர ராவ் முதல்-மந்திரியாக இருந்து யாரும் செய்ய முடியாத பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். 4½ ஆண்டுகளில் இந்த சாதனைகளை செய்திருப்பது மிகப்பெரிய செயலாகும்.

    மாநிலத்தை மட்டுமல்ல நாட்டையே வழிநடத்தி செல்லும் திறமை அவரிடத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அவர் பிரதமராக ஆவதற்கு வாய்ப்பு உள்ளது.

    ஏன் என்றால் மாநில அளவில் செயல்படும் பல கட்சிகள் பாரதிய ஜனதாவையும் விரும்பவில்லை, காங்கிரசையும் விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் ஒரு கூட்டணியை உருவாக்கி ஆட்சி அமைக்கலாம். அப்படி ஒரு ஆட்சி வருவதாக இருந்தால் சந்திரசேகரராவ் பிரதமராக வருவார்.

    அப்படி அவர் பிரதமர் ஆனால் பல்வேறு வித்தியாசமான தொலைநோக்கு திட்டங்களை அவர் கொண்டு வருவார். ஏற்கனவே மாநிலத்தில் இதேபோல அவர் திட்டங்களை செயல்பட்டு சாதித்திருக்கிறார்.

    பிரதமர் மோடி மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார். காங்கிரஸ் கட்சி எப்போதோ மக்கள் நம்பிக்கையில் இருந்து விலகிவிட்டது. நாட்டுக்கு இப்போது புதிய தலைமை தேவை. அதை சந்திரசேகர ராவ் செயல்படுத்துவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #ChandrashekarRao #KTRamaRao
    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் ரயில்வே திட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார். #Modi #ChandrashekarRao
    புதுடெல்லி:

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் ரயில்வே திட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார்.

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ், நாட்டில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இல்லாத மாற்றி அணி உருவாக வேண்டும். அரசியலில் தரமான மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதுபோன்ற ஒரு அரசியல் மாற்று அணிக்கு தலைமை ஏற்க தான் தயாராக உள்ளதாக கூறியிருந்தார்.

    நல்லதொரு தரமான மாற்றத்துடன் தேசிய அரசியலில் தான் பங்கேற்கவும் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடர்ந்து ஆட்சி செய்ததில் நாட்டுக்கு எந்தவித முன்னேற்றத்தையும் அளிக்கவில்லை என தெரிவித்தார்.

    இந்தநிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். அப்போது தனி உயர்நீதிமன்றம், ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. #Modi #TelanganaCM #ChandrashekarRao
    ×