search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamil new year"

    தமிழ்ப்புத்தாண்டையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். #TamilNewYear
    சென்னை:

    தமிழ்ப்புத்தாண்டையொட்டி பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு ஒருசில நாட்களுக்கு முன்பாக தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவது மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.

    தமிழர்கள் அனைவரும் தங்களது பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியப் பெருமை இவற்றையெல்லாம் பறிக்கிற அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    இதை தமிழர்கள் அனைவரும் மனதில் கொண்டு மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெறுகிற அரசுகளுக்கு பாடம் புகட்டுகிற வகையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க தமிழ் புத்தாண்டில் சூளுரை மேற்கொள்ள வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன். தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    தாரைவார்க்கப்பட்ட காவிரி உரிமை உள்ளிட்ட எல்லா உரிமைகளும் மீட்கப்பட வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தின் விருப்பம் ஆகும். அந்த விருப்பம் நிறைவேறவும், வளமான, மகிழ்ச்சியான தமிழகம் என்ற கனவு நனவாகவும் அற்புதமான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால் தமிழர்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசும். அதற்கு சித்திரைத் திருநாள் வகை செய்ய வேண்டும்; உணவு படைக்கும் கடவுளரான உழவர்கள் வாழ்விலும், உழைக்கும் தமிழர்கள் வாழ்விலும் புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்பட வேண்டும்; அதற்காக சரியான முடிவை எடுக்க இந்நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம்.

    தமிழகத்திலும், அனைத்து இந்திய அளவிலும் ஒரு பெரிய மாற்றத்திற்கு கட்டியம் கூறுகின்ற வகையில் இந்த ஆண்டு சித்திரைத் திங்கள் மலர்கின்றது.

    மத்திய அரசின் கேடுகள் அனைத்தையும் எதிர்த்துப் போராடும் வலிமையைப் பெற்றுள்ள தமிழகம், நடைபெற இருக்கின்ற 17-வது பாராளுமன்றத் தேர்தல் களத்தில் ஆட்சியாளர்களுக்குப் பாடம் புகட்டுகின்ற வகையில் நல்ல தீர்ப்பு அளிக்கும்.

    தமிழ் மண்ணுக்குப் புதுப் பொலிவு ஊட்டிடக் கடமை ஆற்றுவோம்; களத்தில் வெற்றியும் காண்போம். தரணி எங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு சித்திரை முதல்நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

    மேலும் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், இந்திய ஜன நாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட தலைவர்களும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். #TamilNewYear
    தமிழ்ப் புத்தாண்டையொட்டி, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami #TamilNewYear

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து வருமாறு:-

    திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்புக்குரிய தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழனென்ற பெருமையோடு தலை நிமிர்ந்து நில்லடா!

    தரணி யெங்கும் இணையிலா உன் சரிதை கொண்டு செல்லடா! என்ற நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் பாடல் வரிகளுக்கேற்ப, ஈடில்லா பெருமைமிக்க வரலாற்றை கொண்ட தமிழ் பெருமக்கள், சித்திரைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக பன்னெடுங்காலமாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    இந்த இனிய புத்தாண்டு, தமிழர்களின் வாழ்வில் புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளப்பூர்வமான தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #EdappadiPalaniswami #TamilNewYear

    தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை நிறைந்ததாக திகழ தமிழ் புத்தாண்டு உதயமாகட்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். #BanwarilalPurohit #TamilNewYear
    சென்னை:

    தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் புத்தாண்டு தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் நாளாகும். இது நமது பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் மேம்பட்ட நிலையின் அடையாளமாக திகழ்கிறது. தமிழ்நாட்டு மக்கள் அன்பு, இரக்கம் மற்றும் வீரம் ஒன்றிணைந்த பண்பின் அடையாளமாக விளங்குகின்றனர். நேர்மையும், ஒழுக்கமும் இவர்களை சமாதானம் மற்றும் நிறைவான வளத்தை நோக்கி வழிநடத்தி செல்கின்றன.



    மகிழ்ச்சிகரமான தமிழ் புத்தாண்டு தினத்தில் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வருடம் தமிழ்நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை நிறைந்ததாக திகழ இந்த நாள் உதயமாகட்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #BanwarilalPurohit #TamilNewYear
    ×