search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவிலில்"

    • செல்வமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது
    • 9-ஆம் ஆண்டை முன்னிட்டு நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் 15-வது வார்டு புதிய காலனியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீசெல்வமாரியம்மன் கோவிலில் 9-ஆம் ஆண்டு ஆடி மாத பால்குட ஊர்வலம் வெகு சிறப்பாக நடந்தது.

    பெரம்பலூர் ஆலம்பாடி ரோடு, 15 வது வார்டு புதிய காலனியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வமாரியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ நாககன்னி அம்மன் திருக்கோவில் 9 ஆம் ஆண்டு ஆடி மாத பால்குடம், விளக்கு பூஜை நடந்தது.இதில் பக்தர்கள் பால் குடம் எடுத்து மேளதாளங்கள் முழங்க ஊர்லமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலா பிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பி க்கப்பட்டது. பின்னர் குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதில் நகராட்சி கவுன்சிலர் சிவக்குமார், திமுக கிளை செயலாளர் பரிதி நீலமேகம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • ஆலந்துறையார் கோவிலில் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது.
    • மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன

    அரியலூர்

    அரியலூர் சிவன் கோவில் தெருவில் உள்ள ஆலந்துறையார் அருந்தவ நாயகி கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி நடைபெற்றது. இதையொட்டி மண்டலாபிஷேக விழா நேற்று நடந்தது. காலை சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டு மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சுற்று பிரகாரத்தில் கர்நாடக இசை கச்சேரிகள், பாட்டு, பட்டிமன்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஓம் நமச்சிவாயா அறக்கட்டளை குழுவினர் செய்து இருந்தனர்.

    • கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது.
    • 250-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் ஈடுபட்டனர்

    அரியலூர்

    கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணிஅரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் சென்னையில் இருந்து 250-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் உழவாரப்பணியில் ஈடுபட்டனர். கோவில் பிரகாரங்களில் படிந்திருக்கும் தூசிகள், எண்ணை கரைகள், விபூதி கரைகள் உள்ளிட்டவைகளை தண்ணீர் தொட்டு துணிகளால் துடைத்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கங்கைகொண்ட சோழபுரம் கோவில் செயல் அலுவலர் செந்தமிழ் செல்வி மற்றும் கோவில் நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் புத்திரகவுண்டன் பாளையம் பகுதியில் ஸ்ரீ கூத்தாண்டவர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
    • இந்த கோவிலில் கடந்த ஒரு வார காலமாக மாரியம்மன், ஸ்ரீ கூத்தாண்டவர் ஆகியோர் தோரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் புத்திரகவுண்டன் பாளையம் பகுதியில் ஸ்ரீ கூத்தாண்டவர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த ஒரு வார காலமாக மாரியம்மன், ஸ்ரீ கூத்தாண்டவர் ஆகி யோர் தோரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற் றது. இதில் ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.

    மேலும் நேற்று கூத்தாண் டவர் சாமி படுகளம் செய் யும் வழிபாடு நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பெண்களும், ஆண்களும் திரளாக கலந்து கொண்ட னர்.

    இதில் திருநங்கைகள் தாலி கட்டிக் கொண்டு அவர்கள் தங்கள் தாலியை அறுத்து வெள்ளை புடவை அணிந்தும் தலை விரி கோலத்தில் நடனம் ஆடி னார்கள். மேலும் சாமி ஆற்றங்கரைக்கு எடுத்துச் சென்று அங்கு படுகளம் செய்யப்பட்டது.

    பின்னர் குழந்தை வேண்டி நூற்றுக் கணக்கான பெண்கள் வெள்ளை புடவை அணிந்து, ஆற்றங்க ரைக்கு வந்து அக்னி தாண்டி பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு தங்கள் வேண்டுதலை வைத்தனர். இதில் குழந்தை இல்லாத வர்களுக்கு இந்த வேண்டு தல் வைத்தால் குழந்தை பிறக்கும் என ஐதீகம், இவ்விழாவில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    பாண்டுரங்கர் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்தக் குட ஊர்வலம் நடந்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் விட்டலபுரி பகுதியில் உள்ள விடோபா சமேத பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் சம்புரோஷனம் விழாவையொட்டி காவிரி ஆற்றிலிருந்து திருமஞ்சன தீர்த்தக்குடங்கள் எடுத்து வருதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. யானை மீது தீர்த்தக்குடம் ஏந்தியவாறு பக்தர் வர, மேளங்கள் முழங்க ஏராளமான பெண்கள் தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்தனர். நேற்று மாலை, முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

    சேலம், வேலு நகரில் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடினர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி வேலு நகரில் பஸ் ஸ்டாப் அருகே மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பூஜை முடித்த பின்பு வழக்கம்போல பூஜாரி கோவிலை பூட்டி சென்றார்.

    இந்த நிலையில் இன்று காலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்து. மேலும் அதில் இருந்த ரூ.15 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது. யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற அறிந்த கோயில் நிர்வாகிகள் சம்பவம் குறித்து அன்னதானபட்டி போலீசில் புகார் அப்படி சொன்னார்.அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.

    மேலும் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குமாரபாளையம் விட்டலபுரி பகுதியில் உள்ள பாண்டுரங்கர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் விட்டலபுரி பகுதியில் உள்ள விடோபா சமேத பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் சம்புரோஷனம் விழா நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

    இன்று காவிரி ஆற்றிலிருந்து திருமஞ்சன தீர்த்தக்குடங்கள் எடுத்து வருதல், இன்று மாலை முதல் கால யாகசாலை பூஜை, நாளை 2-ம் கால பூஜை மற்றும் கொடிமரம் வைத்தல், 3-ம் கால பூஜை, வருகிற 17-ந் தேதி 4-ம் கால பூஜை, காலை 9 மணியளவில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றுதல் நடைபெறவுள்ளது.

    தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது. அதே நாள் இரவு புஷ்ப பல்லக்கில், கருட வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறவுள்ளது. விழாக்குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    ×