search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரூராட்சி"

    • சத்துணவுக்கூடம் மற்றும் கூடுதலாக கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
    • மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊத்துக்குளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.53 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது :- ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், ஊத்துக்குளி பேரூராட்சியில் உள்ள பல்வேறுபகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அந்த வகையில், எஸ்.பெரியபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்விரிவான பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சம்மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி , ஊத்துக்குளி ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவுக்கூடம் மற்றும் கூடுதலாக கட்டப்பட்டு வரும்புதிய வகுப்பறை கட்டடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கப்படும்பாடத்திட்டங்கள் குறித்து நேரில் பார்வையிட்டும், ஊத்துக்குளி ஆர்.எஸ்நியாயவிலைக்கடையிலுள்ள அத்தியாவசயப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம்குறித்தும், அதே பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்குவழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகளின் தரம் குறித்தும் அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டு அறியப்பட்டது.

    மேலும் ஊத்துக்குளி தேர்வு நிலை பேரூராட்சி வார்டு எண்.8 கிழக்கு வீதியில்மூலதான மான்ய திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும்வாரச்சந்தை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்குவழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தும், மருந்துகளின்இருப்பு குறித்தும், ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்பல்லேகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விரிவான பள்ளிஉள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிகட்டடம் பழுது பார்த்தல் பணி உள்பட மொத்தம் ரூ.3.53 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.

    முன்னதாக, ஊத்துக்குளி டவுன் அங்கன்வாடி மையத்தில் மருத்துவம் மற்றும்மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கினால் இறப்பைத் தடுக்க தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் இருவார முகாமினை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு ஓஆர்எஸ்., பவுடர் வழங்கப்பட்டது. இந்த முகாம் இன்று முதல் 25.6.2023 வரை நடைபெறவுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 5-வயதிற்குட்பட்ட 1,77,901குழந்தைகளுக்கு ஓஆர்எஸ் ., பவுடர் வழங்கப்படவுள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களதுகுழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைந்து ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    அப்போது துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்)ஜெகதீஸ்குமார், ஊத்துக்குளி பேரூராட்சித்தலைவர் பழனியம்மாள்,ஊத்துக்குளி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ்குமார், சாந்தி லட்சுமி, உதவிப் பொறியாளர்கள் முத்துக்குமார், இளங்கோ மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    கானாடுகாத்தானை குப்பை இல்லாத பேரூராட்சியாக மாற்றுவோம் என தலைவர் ராதிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் பேரூராட்சி தமிழ்நாட்டின் முன்மாதிரி பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதையொட்டி கானாடுகாத்தான் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் குப்பைத் தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் ராதிகா ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.

    செயல் அலுவலர் ரமேஷ் பாபு முன்னிலை வகித்தார். இதில் வணிக நிறுவனங்களுக்கு குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டு  மட்கும் குப்பை, மட்கா குப்பை என பிரித்து வழங்கும்படி கேட்டுக்கொண்டனர்.பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் குப்பைகளை பிரித்து வழங்கவும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தினர்.

    கானாடுகாத்தான் பேரூராட்சியை குப்பைகள் இல்லாத பேரூராட்சியாக மாற்றுவோம் என தலைவர் ராதிகா ராமச்சந்திரன் கூறினார்.

    இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் அன்புக்கரசி, வசந்தி, சுரேகா, பாண்டிச்செல்வம், கருப்பையா உள்பட பேருராட்சி அலுவலர்கள், துப்புறவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வத்திராயிருப்பு

    விருதுநகர் வத்திராயிருப்பு தேர்வுநிலை பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது. இந்த பேரூராட்சியின் மேலப்பாளையம் 6-வது வார்டு பகுதியில் பேவர் பிளாக் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. 

    கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில் தற்போது பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில் அப்பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

    4 நாட்களாக பணிகள் நடைபெறாததால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் போது எடுக்கப்பட்ட படிக்கட்டுகள் இல்லாமல் வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் நேற்று வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    பின்னர் பேரூராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  பேரூராட்சி தலைவர் தவமணி முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    இளையான்குடி புதிய பஸ் நிலைய விவகாரத்திற்காக பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்ற 31-ந் தேதி போராட்டம் நடக்கிறது.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பொது மக்களின் எதிர்ப்பை மீறி ஊருக்கு வெளியே 3 கி.மீ தொலைவில் புதிய பஸ் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. 

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இளையான்குடியில் ஊருக்குள் உள்ள தற்போதைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும்  அரசியல் கட்சியினர், ஜமாத்தார்கள், வணிகர்கள், பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய மக்கள் நல கூட்டமைப்பு தொடங்கப்பட்டு அதன் சார்பில் இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து கடையடைப்பு போராட்டம், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம், முதல்வருக்கு 5 ஆயிரம் தபால்கள் அனுப்பும் இயக்கம் என தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது. 

    அதைத் தொடர்ந்து  அமைச்சர் கே. என். நேரு பஸ் நிலையம் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்படும் என போராட்டக் குழுவினரிடம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன்றன.

    புதிய பஸ் நிலையத்தை ஊருக்கு வெளியே அமைக்கப்படுவதைக் கண்டித்தும், தற்போதைய இளையான்குடி பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரியும் மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் வருகிற 31-ந் தேதி (செவ்வாய்கிழமை)   இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இளையான்குடியில்இந்தகூட்டமைப்பினர்,பொதுமக்கள் பங்கேற்ற கூட்டத்தில் போராட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. கூட்டமைப்பின் நிர்வாகிகள் துருக்கி ரபீக் ராஜா,ஜபிபுல்லா, கார்த்திமற்றும் முன்னாள் பேரூராட்சி தலைவர்,துணை தலைவர், வணிகர்சங்க நிர்வாகிகள் நகருக்கு வெளியே பஸ்நிலையம் அமைக்ககூடாது என வலியுறுத்தி பேசினர்.

    ×