search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sunny Leone"

    விஷால் நடிப்பில் உருவாகி வரும் அயோக்யா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சன்னி லியோன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Ayogya #Vishal #SunnyLeone
    இந்தி முன்னணி கதாநாயகர்களும் சன்னிலியோனுடன் சேர்ந்து நடிப்பதை தவிர்க்கிறார்கள். 

    அதையும் மீறி சன்னிலியோன் நடித்துள்ள படங்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. போலீஸ் நிலையங்களிலும் புகார்கள் பதிவாகிறது. கர்நாடகத்தில் சன்னிலியோன் பங்கேற்க இருந்த நடன நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அரசு தடைவிதித்தது. இந்த நிலையில் தமிழ், கன்னடம், இந்தி மொழிகளில் தயாராகும் வீரமாதேவி சரித்திர படத்தில் சன்னிலியோன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

    இந்த படத்துக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்கள் நடக்கின்றன. மதுரை கோர்ட்டிலும் வீரமாதேவி படத்தில் சன்னிலியோன் நடிக்க தடை விதிக்க வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சன்னிலியோன் நடிக்க கோர்ட்டு தடைவிதிக்க மறுத்துவிட்டது. இதனால் வீரமாதேவி படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக நடக்கிறது. வடிவுடையான் இந்த படத்தை டைரக்டு செய்கிறார். 



    இந்த நிலையில் அடுத்து விஷாலின் அயோக்கியா படத்துக்கும் சன்னிலியோனை ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தில் ஒரு பாடலுக்கு அவர் கவர்ச்சி நடனம் ஆட இருப்பதாக கூறப்படுகிறது. வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கிறார். #Ayogya #Vishal #SunnyLeone

    பிரபல ஆபாச பட நடிகையான சன்னி லியோன் தற்போது தமிழில் நடித்து வரும் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. #SunnyLeone #Sunny #VeeramaDevi
    நீலப்பட நடிகையாக அறிமுகமான சன்னி லியோன் தற்போது இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். அவரது பயோபிக்கான கரெஞ்சித் கவுர் முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

    இதனிடையே இயக்குநர் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் உருவாகிவரும் 'வீரமாதேவி' படம் மூலம் முதன்முறையாக தமிழில் நாயகியாக அறிமுகமாகிறார் சன்னி லியோன். சோழ பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழனின் மனைவி ராணி வீரமாதேவி, சிறந்த போர் வீராங்கனையாக இருந்தவர். இவரது வாழ்க்கை வரலாற்றை, வீரமாதேவி என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகின்றனர். இதில் வீரமாதேவி வேடத்தில் நடிகை சன்னி லியோன் நடித்துள்ளார்.

    இந்நிலையில், செல்லூரைச் சேர்ந்த சரவணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஆபாச படங்களில் நடித்துள்ள சன்னிலியோன், வீரமாதேவி வேடத்தில் நடிக்கத் தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.



    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்புக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், சன்னிலியோனை நீக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.
    பிரபல ஆபாச பட நடிகையும், பாலிவுட் நடிகையுமான சன்னி லியோன் வழியில் நடிகை ஷகிலா பின் தொடர்கிறார். #SunnyLeone #Shakeela
    தென்னிந்தியத் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ‌ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை இந்திரஜித் லங்கேஷ் திரைப்படமாக இயக்கி வருகிறார்.

    திரைப்படங்களிலும் தனிப்பட்ட வாழ்விலும் ‌ஷகிலாவின் ஆளுமை குறித்து அறிந்துள்ள அவர் பலரும் அறிந்திராத சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படத்தை இயக்கிவருகிறார். ‌ஷகிலா வேடத்தில் ரிச்சா நடிக்கிறார்.

    ‌ஷகிலா இந்தப் பட உருவாக்கத்திலும் பங்காற்றுகிறார். படப்பிடிப்பு தளத்தில் தன்னைப் பற்றியும் தனது வீட்டை, சுற்றியுள்ள இடங்கள் குறித்தும் கலை இயக்குநர் குழுவுக்குக் கூறி தத்ரூபமாக படம் வெளிவரப் பணியாற்றி வருகிறார். ரிச்சாவும் ‌ஷகிலாவுடன் நெருங்கிப் பழகி அவரது உடல்மொழி, பேசும் விதம் உள்ளிட்ட நுட்பமான வி‌ஷயங்களைக் கவனித்து தனது நடிப்பில் வெளிப்படுத்துகிறார்.



    சிறப்புத் தோற்றத்தில் ‌ஷகிலாவும் சில காட்சிகளில் வரஉள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் கவர்ச்சி நடிகையாக பிரபலமான சன்னி லியோன் தனது வாழ்க்கை வரலாற்று படத்தில் தானே நடிக்கிறார். அதேபோல் ‌ஷகிலாவும் தனது வாழ்க்கை வரலாற்று படத்தில் தானே நடிக்க இருக்கிறார்.
    பிரபல ஆபாச பட நடிகையும், பாலிவுட் நடிகையுமான சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர். #SunnyLeone
    கர்நாடகாவை ஆண்ட வீரமாதேவி ராணியின் வாழ்க்கையை திரைப்படமாக தமிழ்பட இயக்குனர் வடிவுடையான் இயக்கி வருகிறார். இதில் வீரமாதேவி வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது.

    இந்த நிலையில் ராணி வீரமாதேவி வேடத்தில் சன்னிலியோன் நடிக்க கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த பெங்களூருவில் அனந்தராவ் சதுக்கம், டவுன் ஹால், மைசூர் வங்கி சதுக்கம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சன்னி லியோனை கண்டித்து கோ‌ஷம் எழுப்பி அவரது உருவ பொம்மையை எரித்தனர்.



    இதுகுறித்து கன்னட அமைப்பின் தலைவர் நாராயண கவுடா கூறியதாவது:-

    வீரமாதேவி வரலாற்று புகழ்மிக்க அரசி. அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஆபாச பட நடிகையான சன்னி லியோன் நடிப்பதை ஏற்க முடியாது. கர்நாடகாவை சிறப்பாக ஆட்சி செய்த வீரமாதேவி வேடத்தில் சன்னிலியோன் நடிப்பதன் மூலம் கன்னட மக்களை இழிவுப்படுத்த இயக்குனர் திட்டமிட்டுள்ளார்.

    எனவே இப்படத்தின் படப்பிடிப்பை உடனே நிறுத்த வேண்டும். இந்த வேடத்தில் சன்னிலியோன் நடிக்கக்கூடாது. இல்லையென்றால் வருகிற நவம்பர் 3-ந்தேதி பெங்களூரில் சன்னிலியோன் பங்கேற்கும் நிகழ்ச்சியை நடத்த விடமாட்டோம் என்றார்.
    தமிழில் வீரமாதேவி என்ற வரலாற்று படத்தில் நடித்து வரும் சன்னி லியோன் வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #SunnyLeone
    கவர்ச்சி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம்பெற்று ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து உள்ளார்.

    தற்போது பாலிவுட் சினமாவில் கவனம் செலுத்தி வரும் சன்னி லியோன், பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தையும் பிடித்து வைத்திருக்கிறார். குழந்தை மற்றும் கனவருடன் அமைதியான வாழ்வை நடத்தி வரும் சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றினை இணைய தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. 

    தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் வீரமாதேவி வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில் தனது குடும்பத்துடன் மெக்சிக்கோ சென்றுள்ள சன்னி லியோன், தனது சமூக வலைதளத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு புகைப்படத்தில் சன்னி லியோன் பிகினி உடையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #SunnyLeone

    நீலப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை சன்னி லியோன், எல்லாமே பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். #SunnyLeone
    நீலப்படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் அதுபோல் நடிப்பதை விடுத்து சாதாரண படங்களில் நடித்து வருகிறார். அவரது வாழ்க்கை வரலாறு கரன்ஜித் கவுர் என்ற பெயரில் இணைய தொடராக வெளியாகி உள்ளது.

    அவரிடம் தமிழ் சினிமா பற்றி கேட்டதற்கு ’நிறைய தமிழ்ப்படங்களைப் பார்த்திருக்கேன். ரஜினியை ரொம்பப் பிடிக்கும்.

    இப்போ நான் தமிழில் நடிக்கிற ‘வீரமாதேவி’ ஷூட்டிங் ஆரம்பிக்கப்போகுது. கூடிய சீக்கிரம் நிறைய தமிழ்ப்படங்கள்ல என்னைப் பார்க்கலாம்” என்று கூறி உள்ளார். நீலப்படங்கள் பற்றி கேட்டதற்கு ’ஆடையைக் குறைப்பது மூலமா ஒரு பெண்ணோட மதிப்பு என்றுமே குறைந்துவிடாது.

    எல்லாமே பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது. பாலியல் தொழில் செய்பவர்களுக்கும் நீலப்படங்களில் நடிப்பவர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.



    ஒரு பெண்ணை வற்புறுத்தி பாலியல் தொழிலுக்கு இழுத்துட்டு வரலாம். ஆனால் நீலப்படத்துறையில் ஒரு பெண்ணை வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ முடியாது’ என்று பதில் அளித்து இருக்கிறார்.
    டெல்லியில் உள்ள பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு மெழுகு சிலை வைத்து கவுரவிக்கப்பட்டுள்ளது. #SunnyAtTussauds #SunnyLeone
    பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன். இவர் தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் `வீரமாதேவி' என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். ஒரு சில இந்தி படங்களிலும் நடிக்கிறார். 

    இவரது வாழ்க்கை கதை இணைய தொடராக தயாராகி உள்ளது. சன்னிலியோன் இந்தி படங்களில் நடிப்பதற்கு அங்குள்ள கவர்ச்சி நடிகைகள் எதிர்ப்புகளும் தெரிவித்து வருகிறார்கள். 

    இந்த நிலையில் சன்னிலியோனுக்கு மெழுகு சிலை தயாராகி உள்ளது. டெல்லியில் உள்ள மேடம் துஷாத் மியூசியத்தில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. அங்கு அமிதாப்பச்சன், ஸ்ரீதேவி உள்பட முன்னணி நடிகர், நடிகைகளுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் மெழுகு சிலை வைக்கப்பட்டு உள்ளது. 



    தனது மெழுகு சிலையை சன்னிலியோன் திறந்து வைத்து அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதுகுறித்து சன்னிலியோன் கூறும்போது, ‘‘எனக்கு மெழுகு சிலை வைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த சிலையை பார்த்ததும் வியப்பு ஏற்பட்டது. இந்த சிலையை நேர்த்தியாகவும் சிறப்பாகவும் உருவாக்க நிறைய பேர் பல நாட்கள் உழைத்து உள்ளனர். அவர்களை நான் பாராட்டுகிறேன். எனக்கு மகிழ்ச்சியான உணர்வை இந்த சிலை ஏற்படுத்தி உள்ளது. இதை கவுரவமாக கருதுகிறேன்’’ என்றார். #SunnyAtTussauds #SunnyLeone

    ஆபாச படங்களில் நடித்து தற்போது இந்தி படங்களில் நடித்து வரும் சன்னி லியோன், தன்னுடைய குடும்பத்தை இழந்தது குறித்து கூறியிருக்கிறார். #SunnyLeone #Sunny
    நீலப்பட நடிகையான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவரது வாழ்க்கை வரலாற்றை கரன்ஜீத் கவுர் தி அன்டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன்’ எனும் இணைய தொடராக எடுத்து வெளியிட்டிருக்கிறார். இதன் 2-ம் பாகம் விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சன்னி லியோன் அளித்த பேட்டி வருமாறு:-

    கே:- நீலப்பட நடிகையாக இருந்ததில் இழந்தது என்ன?

    ப:- என்னோட குடும்பத்தை தான். நான் என்ன செய்கிறேன், என்னோட வேலை என்னனு என் அம்மா, அப்பாகிட்ட சொல்லிப் புரிய வைக்க முடியவில்லை. அவர்கள் என்மீது கோபப்பட்டார்கள். கடைசி வரைக்கும் அவங்க என்னைப் புரிஞ்சுக்கவே இல்லை. ஒரு பொண்ணுக்குக் குடும்பத்துல இருந்து கிடைக்க வேண்டிய அன்பு, ஆதரவு எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை.



    கே:- உங்கள் வாழ்க்கை தொடரில் நீங்களே நடித்த அனுபவம் எப்படி இருக்கிறது?

    ப:- இந்த மாதிரியான ஒரு கதையைத் தேர்வு செஞ்சு நடிக்கிறது அவ்வளவு எளிதாக இல்லை. இதில் நடிக்கும் போதுதான் என்னோட வாழ்க்கை எவ்வளோ கஷ்டமானதா இருந்திருக்குனு தெரிய வந்தது. ஒரு ஆபாச நடிகையாக தான் என்னை எல்லோருக்கும் தெரியும். இந்த வெப் சீரீஸ் மூலமா என்னோட மறுமுகத்தை நீங்க பார்ப்பீர்கள்.

    என் வாழ்க்கையில் நடந்த அழுகை, கோபம், ஏமாற்றம் மாதிரியான எல்லாவிதமான உணர்ச்சிகளையும் இன்னொரு முறை கடந்து வந்த மாதிரி இருந்தது. நான் பொதுவா எமோ‌ஷனலான ஆள் கிடையாது.

    இருந்தாலும், ஷூட்டிங் ஸ்பாட்ல தினந்தினம் அழுதுருக்கேன். வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம், என்னோட கணவர் வெபரைப் பார்க்கும் போது தான் மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும். ‘‘இதற்கு பிறகு மக்கள் என்னைப் பார்க்கிற விதமே மாறியிருச்சுனு சொல்லலாம்.

    ‘நான் உங்களோட பெரிய விசிறின்’னு ரசிகர்கள் சொல்லும் போது ரொம்ப சந்தோ‌ஷமா இருக்கும். ‘நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க, இனிமேல் வாழ்க்கையில நீங்க சந்தோ‌ஷமா இருக்கணும்’னு ரசிகர்கள் என்கிட்ட வந்து பேசுற அந்தச் சில தருணங்கள் எனக்கு முக்கியமானது.



    கே:- இதை படமாக எடுத்து தியேட்டர்களில் வெளியிட்டிருக்கலாமே?

    ப:- ஒரு படம்னா 3 மணிநேரத்துக்குள்ள நீங்க சொல்ல வந்த வி‌ஷயத்தைச் சொல்லிடணும். அதுவே ஒரு வெப் சீரீஸா இருக்கும்போது, உங்களுக்கான நேரத்தை நீங்க முடிவு பண்ணிக்கலாம். இதுக்காக நிறைய தயாரிப்பாளர்களை நான் சந்திச்சப்போ, ஒவ்வொருத்தவங்களும் அவங்க ரசனைக்கு ஏத்த மாதிரி கதையை மாத்திக்கிறாங்க. அதனால், வெப் சீரீஸ்தான் பெஸ்ட்.

    கே:- பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளது பற்றி?

    ப:- எங்க போனாலும் பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை நடக்கத்தான் செய்கிறது. நம்ம சமூகம் இது குறித்த விழிப்புணர்வையும், அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும் மக்களுக்குக் கத்துக்கொடுக்க வேண்டும். பெண்களுக்கு மட்டும் இது நடக்கலை, ஆண்களுக்கும் நடந்துக்கிட்டு தான் இருக்கு. யாரையும் துன்புறுத்தவோ, வற்புறுத்தவோ மத்தவங்களுக்கு உரிமை இல்லை என்பதை எல்லோரும் புரிந்து கொண்டாலே போதும்.

    இவ்வாறு சன்னி லியோன் கூறினார்.
    அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள் அடுத்த சன்னிலியோன் நீங்க தான் என்று விமர்சித்துள்ளார்கள். #Amalapaul
    அமலாபால் ‘ஆடை’ படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ள அவரது முதல் தோற்றம் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. ஆடை இல்லாமல் உடம்பில் காகிதங்களை சுற்றிக்கொண்டு அழுதபடி இருந்தார். அவரது உடம்பில் ரத்தக் காயங்களும் இருந்தன. இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. 

    அதைப் பார்த்து இந்தி நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி என்று பலரும் பேசினர். எந்த தமிழ் நடிகையும் இதற்கு முன்பு இவ்வளவு கவர்ச்சியாக தோன்றியது இல்லை என்கின்றனர். செல்போன்களில் இலவசம் என்று வரும் குறுந்தகவல்களையும் அதனால் பாதிக்கப்படும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்தும் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது. 

    அமலாபால் பழிவாங்கும் கதாபாத்திரத்தில் வருகிறார். கதை பிடித்ததால் கவர்ச்சிக்கு சம்மதித்ததாக கூறினார். இந்த நிலையில் அமலாபாலின் கவர்ச்சி தோற்றத்துக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் கிளம்பி உள்ளன. இவ்வளவு கவர்ச்சியாக நடித்துள்ளதால் அவர்தான் அடுத்த சன்னிலியோன் என்று டுவிட்டரில் சிலர் மோசமான கருத்துக்களையும் பதிவிட்டு உள்ளார்கள்.



    அதே நேரம் ஆடை இல்லாமல் நடித்துள்ள அவரது துணிச்சலையும் சிலர் பாராட்டி உள்ளனர். விமர்சனங்களுக்கு பதில் அளித்து அமலாபால் கூறும்போது, ‘‘எனது முதல் தோற்றத்தை பார்த்து விமர்சிப்பவர்கள் படத்தை பார்த்து விட்டு பாராட்டுவார்கள். அந்த ஆடையுடன் நான் ஏன் அப்படி நடித்தேன் என்பது படம் பார்க்கும்போது தெரியவரும்’’ என்றார்.
    பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன், என் கணவருக்கு பிடிக்காதது எது ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். #SunnyLeone #Sunny
    ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர், சன்னி லியோன். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நீலப் படங்களில் நடித்ததை கணவர் டேனியல் வெப்பர் எப்படி எடுத்துக் கொண்டார்? என்று சன்னி லியோன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். 

    அவர் கூறியிருப்பதாவது:–

    ‘‘முதன் முதலாக என் கணவரை ஒரு விருந்து நிகழ்ச்சியில் சந்தித்தேன். அப்போதுதான் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். முதல் பார்வையிலேயே இருவருக்கும் பிடித்து இருந்தது. காதல் வசப்பட்டோம். 



    வருடக்கணக்கில் ஜோடியாக சுற்றினோம். இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்ட பிறகே திருமணம் செய்து கொண்டோம். நான், நீலப் படங்களில் மற்ற ஆண்களுடன் நடித்தால், என் கணவருக்கு பிடிக்காது. அதனால், அவரே என்னுடன் நடிக்க தொடங்கினார்!’’

    இவ்வாறு சன்னி லியோன் கூறினார்.
    தமிழில் ‘வீரமாதேவி’ படத்தில் நடித்து வரும் சன்னி லியோன், அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருடன் பிரபல நடிகர் இணைந்து நடிக்க இருக்கிறார். #SunnyLeone
    சன்னி லியோன் ஆபாசப்படங்களில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர். வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு வந்து நடனம் ஆடியதன் மூலம் தமிழிலும் கால்பதித்த அவர், இந்தி, தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் தற்போது நடித்து வருகிறார்.

    தமிழில் ‘வீரமாதேவி’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சன்னி லியோன் கேரளா வந்தபோது அவரைக்காண ஆயிரக் கணக்கான ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அன்று முதல் மலையாளத் திரைப்படத்தில் வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்று கூறி வந்தார்.



    தற்போது அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. இந்தப் படத்தை கண்ணசைவு புகழ் பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ பட இயக்குனர் ஒமர் லுலு இயக்குகிறார். சன்னி லியோனுடன் மலையாளம் மற்றும் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயராம் மற்றும் ஹனிரோஸ் நடிக்க உள்ளனர்.
    சன்னிலியோன் வாழ்க்கை கதை படமான ‘கரன்ஜித் கவுர் த அண்டோல்டு ஸ்டோரி ஆப் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானது. #SunnyLeone
    சன்னிலியோன் தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இப்போது ‘வீரமாதேவி’ என்ற பெயரில் தமிழில் தயாராகும் சரித்திர படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

    சன்னிலியோனின் இயற்பெயர் கரன்ஜித் கவுர் வோரா. அவரது வாழ்க்கையை ‘கரன்ஜித் கவுர் த அண்டோல்டு ஸ்டோரி ஆப் சன்னிலியோன்’ என்ற பெயரில் தொடராக தயாரித்து உள்ளனர். இந்த தொடர் இணையதளத்தில் வெளியாகிறது. சன்னிலியோனின் இளம் வயது வாழ்க்கை போராட்டங்கள், பாலியல் தொழிலுக்கு வந்த சூழ்நிலைகள், சினிமாவில் அறிமுகமானது உள்ளிட்ட வி‌ஷயங்கள் இந்த தொடரில் இடம்பெற்று உள்ளன. 

    படத்தின் தலைப்பில் கவுர் பெயரை பயன்படுத்த சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதையும் மீறி சன்னிலியோன் வாழ்க்கை தொடர் இணையதளத்தில் வெளியானது. பணம் கட்டிய சந்தாதாரர்கள் மட்டுமே இந்த தொடரை பார்க்க முடியும். ஆனால் தமிழ் படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளம் சன்னிலியோன் தொடரையும் திருடி வெளியிட்டு உள்ளது. 



    இது சன்னிலியோனுக்கும், படக்குழுவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிக செலவில் இந்த தொடரை படமாக்கி இருக்கிறோம். இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானதால் வருமான இழப்பு ஏற்படும் என்று படக்குழுவினர் வருத்தப்பட்டுள்ளனர். #SunnyLeone
    ×